பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
பெ : உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
ஆ : இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
(தானா....)
ஆ : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
பெ : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
ஆ : வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
பெ : வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
ஆ : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
பெ : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
ஆ : பூந்தளிரே......
பெ : Oh Where Would I Be Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive; It Makes Me Want To Fly Into The Sky!
Oh Where Would I Be If I Didn’t Have You Next To Me?
Oh Where Would I Be? Oh Where, Oh Where?
ஆ : எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
பெ : என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது மீளுதே
ஆ : யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
பெ : ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
ஆ : காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெ : காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
ஆ/பெ : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ....
ஆ : (தானா....)
பெ : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
ஆ/பெ : என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஆ : (தானா....)
No comments:
Post a Comment