Tuesday, 20 March 2018

ஜோதிடம்


சங்கத் தமிழ் நூல்களில் ஜோதிடம் பற்றிய குறிப்புகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. மிருகங்கள் கூட ஜோதிடம் பார்த்ததாக- சகுனம் பார்த்ததாக சங்கப் புலவர்கள் பாடி வைத்தனர். சம்ஸ்கிருதத்தில் கிரஹங்களுக்கு நிறைய பெயர்கள் உண்டு. ஆனால் தமிழில்தான் 27 நட்சத்திரங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நிறைய பெயர்கள் வருகின்றன. என்னிடமுள்ள புகழ் பெற்ற சம்ஸ்கிருத நிகண்டான அமரகோஷத்தில் கூட 27 நட்சத்திரங்களுக்கு இவ்வளவு பெயர்கள் இல்லை!

தமிழ் நிகண்டுகளில் உள்ள தமிழ்ப் பெயர்களைக் காண்கையில் சோதிட இயல் என்பது தமிழ்நாட்டில்தான் உண்டாயிற்றோ என்று வியக்கவேண்டி இருக்கிறது. மேலும் இந்தப் பெயர்களில் சில 2000 ஆண்டுகள் அல்லது அதற்கும்முந்தைய பழமையுடைய புறநானூற்றில் கூட காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி நாடி ஜோதிடம், கேரளத்தில் உள்ள சோழி சோதிடம் (பிரஸ்னம்) இவைகளும் தென் பகுதியிலேயே பயன்பாட்டில் இருக்கின்றன. இன்றும் தமிழர்களுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை உளது.

ஆனால் தமிழ் பெயர்களில் பல வடமொழி நம்பிக்கைகளும், பல தமிழாக்கங்களும் இருக்கின்றன. ஆகையால் சம்ஸ்கிருதம்- தமிழ் மொழி தெரிந்தவர்களே இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய தகுதி பெற்றவர்கள்;

ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்:

புறநானூறு பாடல் 229 கூடலூர் கிழார் என்னும் புலவரால் பாடப்பட்டது. ஒரு எரி நட்சத்திரம் (எரி கல்) தோன்றிய வுடன் சேர மன்னன் இறக்கப்போகிறானே என்று பயந்தார் புலவர். அதே போல ஒரே வாரத்தில் சேர மன்னன் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்து விடுகிறான். உடனே கூடலூர்க் கிழார் பாடுகிறார் (புற.229)

இதில் பயன்படுத்தப்பட்ட வானநூல் சொற்கள்”

ஆடு=மேஷ ராசி

அழல்சேர் குட்டம்= கார்த்திகை நட்சத்திரம்

முடப்பனையம் = அனுஷம்

தலை நாள் மீன் = உத்தரம்

நிலை நாள் மீன் = எட்டாம் மீனாகிய மிருகசீருசம்

பாசி= கிழக்கு திசை

ஊசி= வடக்கு திசை

கயக்குளம்= புனர்பூசம்

பங்குனி = பங்குனி மாதம்

இதில் எல்லாம் தமிழ் சொற்கள் போலக் காணப்படும். ஆனால் ஆடு என்று மேஷ ராசியை வடமொழி சோதிட நுல்களும் குறிப்பிடும். பங்குனி என்ற மாதமும் சம்ஸ்கிருதச் சொல். பாசி என்பது = ப்ரதீச்யை/மேற்கு., ஊசி என்பது= வடக்கு/உதீச்யை; சம்ஸ்கிருதச் சொற்கள்!

பாசி,ஊசி என்பனவற்றை சம்ஸ்கிருத அறிவுடையோரே கண்டுபிடிக்க முடியும்.

இதே போல பரிபாடல் 11-லும் தமிழ்சொற்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் கலந்து வருகின்றன.

இனி 27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப் பெயர்களைக் காண்போம். சில சொற்கள் தூய தமிழ் சொற்கள். அவைகளுக்கு தமிழர்கள் ஏன் அப்படிப் பெயர் வைத்தனர் என்பது பற்றி ஆழமான ஆராய்ச்சி செய்யவேண்டும். இன்னும் சில சொற்கள் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவை. மிருகசீர்ஷம் என்பதை தமிழில் மான் – தலை என்பர்.

கார்த்திகை நட்சத்திரக் கூட்டம்

இதோ 27 நட்சத்திரங்களின் பெயர்கள் :–

அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை

பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி

கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல்

ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86),

(சங்க காலத் தமிழர்கள் சகடம்/ரோகிணி நட்சத்திரம் அன்றுதான் கல்யாணம் செய்வர் என்று அகநானூறு கூறுகிறது. இது பற்றி நான் எழுதிய தனிக் கட்டுரையில் முழு விவரம் காண்க. 27 நட்சத்திரங்களின் ஆங்கிலப் பெயர்கள், அவற்றைப் பற்றிய கதைகள், 27 மீன்களுக்குப் புறம்பான அகஸ்திய நட்சத்திரம் பற்றிய கதைகளை முன்னரே இதே பிளாக்கில் வெளியிட்டுள்ளோம். ஏறத்தாழ 25 கட்டுரைகளில்! எழுதியவர்கள்:- ச.சுவாமிநாதன், ச.நாகராஜன்).

மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன்.

தொலைநோக்கி மூலம் கார்த்திகை நட்சத்திரங்கள்

திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம்

27 நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவினைப் படிக்க)

புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை

பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்

ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு

மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு)

பூரம் (பூர்வ பல்குனி) = எலி, கணை, இடை எழும் சனி, துர்க்கை, பகவதி, நாவிதன்

உத்தரம் = மானேறு, கதிர்நாள், கடை எழும் சனி, பாற்குனி, மாரி நாள்

ரோகிணி நட்சத்திரம்

அத்தம் (ஹஸ்த) = ஐவிரல், கைம் மீன் , களிறு காமரம், அங்கிநாள், கௌத்துவம், நவ்வி, கயினி

சித்திரை =நெய்ம்மீன், பயறு, அறுவை, நடுநாள், ஆடை, தூசு, சுவை, தச்சன், துவட்டா நாள், நேர்வான்

சுவாதி = விளக்கு, வீழ்க்கை, வெறுநுகம், மரக்கால், காற்றினாள், முத்து, பவள, சோதி, அனில், காற்று

விசாகம் = முறம், முறில், சுளகு, காற்றினாள், வைகாசி, அனில நாள், சேட்டை

அனுஷம் = பனை, புள்தேள், நட்புநாள், புல், தாளி, பெண்ணை, தேள், போந்தை, மித்திர நாள்

கேட்டை(ஜேஷ்டா) = தழல், துளங்கொளி,  வல்லாரை, இந்திரன் நாள், சேட்டை, வேதி, எரி, பின்று

மூலம் = அன்றில், வில், குருகு, கொக்கு, தேட்கடை, சிலை, ஆனி, அசுர நாள்

பூராடம் (பூர்வாஷாட) = உடைகுளம், முற்குளம், நீர்நாள்

உத்திராடம் = ஆடி, கடைக் குளம், ஆனி, விச்சுவ நாள்

சித்திரை (ஸ்பைகா) நட்சத்திரம்

திருவோணம் = முக்கோல், உலக்கை, மாயோன் நாள், முக்கோல், சிரவணம், சோணை, வயிரம்

அவிட்டம் (தனிஷ்டா) = பறவை, காக்கை, வசுக்கள் நாள், புள், ஆவணி

சதயம் (சதபிஷக்) = நீர்நாள், செக்கு, குன்று, போர், சுண்டன், வருணன் நாள்

பூரட்டாதி = நாழி, முக்கொழுங்கோல் (பூர்வ ப்ரோஸ்தபத), புரட்டை

உத்திரட்டாதி = மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல் (உத்திரப் ப்ரோஸ்தபத)

ரேவதி = இரவி நாள், கலம், தோணி, நாவாய், தொழு, பஃறி, ஆ நாள், கடை நாள், சூலம், பெரு நாள், பூடா நாள், கடை மீன்

சுவாதி நட்சத்திரம் ( ஆர்க்டுரஸ்)

என் கருத்துக்கள்:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய வேத கால தெய்வங்களின் பெயர்கள் இப்பட்டியலில் உள.

சில விண்மீன்களின் பெயர்கள் வேறு பல விண்மீன்களுக்கும் வரும்.

பல பெயர்கள் போலக் காணப்பட்டாலும் அவை எல்லாம் ஒருபொருள் குறித்த பல சொற்களே. எடுத்துக்காட்டாக தீ என்பதற்கான — அங்கி, அழல், தழல், எரி போன்ற பல சொற்களால் — கார்த்திகை நட்சத்திரம் குறிக்கப்படுவதைக் காண்க. ஆகவே பட்டியலைச் சுருக்க முடியும்.

மேலும் வட நாட்டில் நீண்ட காலமாக 27 நட்சத்திரங்களுக்கும் போடும் படமும் பல சொற்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.

பல நட்சத்திரங்கள், சில கிரகங்களுடனும், சில மாதப் பெயர்களுடனும் தொடர்பு படுத்திருப்பதை நோக்குக.

இதி்ல் திருவாதிரை, ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களளுள்ளன.

படத்தைப்  பெரிதாகப் பார்க்ககாதன் மீது க்ளிக் செய்யவும்.

இதோ ஆங்கிலப் பெயர்கள்:–

1) Ashwini –Alpha, Beta –Aries அஸ்வினி
2) Bharani – No 28,29,41 Taurus பரணி
3) Krittika – Pleiades கார்த்திகை
4) Rohini – Aldebaran Hyades, Alpha, Theta, Gama, Delta and Epsilon Taurus ரோஹிணி
5) Mrigashirsha – Lambda, Phi 1, Phi 2, Orion மிருகசீர்ஷம்
6) Aardraa –Betelgeaux – Alpha Orion திரு ஆதிரை
7) Punarvasu – Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively புனர் பூசம்
8) Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
9) Ashlesha – Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra ஆயில்யம்
10) Maagha – Regulus, Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis மகம்
11) Poorva Phalkuni – Delta and Theta Leo பூரம்
12) Utra Phalkuni – Beta and 93 Leo உத்தரம்
13) Hasta – Delta, Gama, Eta, Virgo ஹஸ்தம்
14) Chitraa – Spica, Alpha Virgo சித்திரை
15) Swaati – Arcturus – Alpha Bootes ஸ்வாதி
16) Vishaakha – Alpha, Beta etc Libra விசாகம்
17) Anuraadha – Beta, Delta, Pi –Scorpia அனுஷம்
18) Jyestha – Antares Alpha, Sigma Tau Scorpio கேட்டை
19) Mula – Scorpio, tail stars மூலம்
20) Poorvaashadaa – Delta and Epsilon Sagittarius பூராடம்
21) Uttaraashaada – Zeta and Omicron Sagittarius உத்திராடம்
22) Shraavanaa – Altair – Alpha Aquila திரு ஓணம்
23) Dhanishtha – Delphinus அவிட்டம்
24) Shatabhisak – Lambda Aquarius சதயம்
25) Poorva Bhaadrapada – Alpha and Beta Pegasus பூரட்டாதி
26) Uttara Bhaadrapada – Gama Pagasus and Alpha Andromeda உத்திரட்டாதி
27) Revathi – Zeta Piscum ரேவதி

ஒரையன் நட்சத்திரத் தொகுதி (சிவப்பாக  இருப்பது  திரு ஆதிரை)

தமிழர்கள் ஜோதிடப் பைத்தியங்கள்!

லண்டன் வெம்பிளி, மற்றும் ஹாரோ பகுதிகளில் ஆந்திரத்தில் இருந்து வரும் போலி ஜோதிடர்கள் அல்லது அரைகுறைகள் நல்ல காசு சம்பாதிக்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகப் பிரச்சனைகளும் ஆசைகளும் இருப்பதால் “ஜோதிடர்கள் காட்டில் மழை பெய்கிறது”. எனது இலங்கைத் தமிழ் நண்பர் ஒருவர் சுமார் 500 பவுண்ட்களை (பிரிட்டிஷ் நாணயம்) ஒரு ஜோதிரிடம் ஏமாந்தார். முதலில் ‘கன்சல்டேஷன்’ கட்டணம், பிறகு, பூஜை, பெரிய பரிகாரம் என படிப்படியாக காசு பறிக்கப்பட்டது. உனக்கு என்ன விசரா (பைத்தியமா) என்று கேட்டேன். அன்றைய நாட்களில் நான் விசராகத்தான் இருந்தேன் என்று ஒப்புக்கொண்டார்.

சோதிடம் உண்மையான ஒரு கலை. அதை அறிந்தோர் வெகு சிலரே! அறிந்ததாகச் சொல்லி காசு பறிப்போர் ஆயிரம் ஆயிரம்!!!

2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!


Sri Lanka stamp on Arumuga Navalar, great Tamil scholar.

மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 2
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1293 தேதி: 17 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஐந்தாவது கட்டுரை.

கட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது இரண்டாம் பகுதி.

17.யானை மூலம் குழந்தைக் கொலை
அத்தியாயம் 35:– சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” — என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை முதுகிலேற்றிக் கொண்டு சென்று அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. மூர்த்தி நாயனாரையும் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனையும் யானையே மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறது.

சங்க இலக்கியத்திலும் இதை ஒட்டிய ஒரு காட்சி உண்டு.

புறநானூறு பாடல் 46 (கோவூர்க்கிழார் பாடியது)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தனது எதிரியான மலையமான் குழந்தைகளை யானையின் காலடியில் வைத்து நசுக்குங்கள் என்று உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு பதறிப்போய் கோவூர்கிழார் என்னும் புலவர் ஓடோடி வருகிறார்.
“மன்னா, என்ன காரியம் செய்கிறாய்? ஒரு புறாவுக்காக தன்னுயிரையே கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் நீ. இவர்களோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகள். பூதாகார கருப்பு உருவம் உடைய யானையைக் கண்டு மகிழக்கூடிய வயது. புது முகங்களைக் கண்டால் மருளுவர். உடனே இந்த இழி செயலை நிறுத்து” — என்கிறார். மன்னனும் புலவனின் நல்லுரைக்குச் செவி சாய்க்கிறான். இதோ அப்பாடல்:—

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்டு அழூ உம் அழா அல் மறந்த
புன் தலைச் சிறார்; மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்மே! (புறப் பாடல் 46)


Sri Lanka stamp with Lord Ganesh

18.நாகர் பட்டியல்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—
நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்):
கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.
(( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க))

19.கஜபாகு
இலங்கை வரலாறு தமிழர்களுக்குச் செய்த பெரிய உதவி கஜபாகு பற்றிய குறிப்பாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலம்பு. இதன் மூலம் சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது உறுதி ஆயிற்று.
கஜபாகு ஆட்சி மகாவம்ச 35 ஆம் அத்தியாயத்தில் உளது


Sri Lanka Stamp on New Year

2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!

20.மதுரைப் பாண்டியன்
மகாவம்சத்தில் மிகவும் சுவையான விஷயம் பாண்டிய நாட்டு இளவரசிகள் இலங்கைக்கு வந்ததாகும்; இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து வந்த விஜயன், குவென்னா என்ற ஒரு யக்ஷிணியைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை ( ஒரு மகன், ஒரு மகள்) ஆகிறான். ஆனால் உயர்குலத்து (க்ஷத்ரிய) மங்கை ஒருவளை ராணியாகப் பெறும்வரை மன்னன் ஆக முடிசூட்ட மாட்டேன் என்கிறான். உடனே மந்திரிமார்கள், ஒரு தூதர் குழுவை அமைத்து, முத்துக்களையும் விலை உயர்ந்த நகைகளையும் கொடுத்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்க அனுப்புகின்றனர்.

தூதர்களும் கப்பல் மூலம் சென்று மதுரை மாநகரை அடைகின்றனர். (இது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பதால் முதல் தமிழ் சங்கம் கொலு வீற்றிருந்த தென் மதுரையாக இருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய மதுரை அல்ல)

மதுரையில் பாண்டிய மன்னனும் மந்திரிகளைக் கலந்தாலோசித்து தன் பெண்ண அனுப்ப முடிவு செய்கிறான். உடனே மதுரை நகர தெருக்களில் தண்டோரா போடுகிறார்கள்:

“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…… மதுரை மாமன்னனின் மகள் — இளவரசியை — விஜனுக்கு மணம் முடிக்கப் போகிறோம். அங்குள்ள மந்திரிமார்களுக்கும் பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெண்கள் தேவை. இதுவரை நூறு பெண்கள் வந்து இருக்கிறார்கள். இன்னும் யார் யார் இலங்கைத் தீவுக்குப் போக விருப்பமோ அவர்கள் அனைவரும் இரண்டு மாற்று உடைகளுடன் வீட்டு வாசலில் நின்றால் மன்னரின் ஆட்கள் அழைத்துச் செல்வர். பெண்களை அனுப்புவோருக்கு மாமன்னன் நஷ்ட ஈடும் வங்குவார். தகுதிக்கு ஏற்ப இலங்கை செல்லும் பெண்களுக்கு யானை, குதிரை, தேர் வாகன வசதிகளும் அனுப்பப்படும்” — இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமான தமிழ்ப் பெண்கள் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்த இரண்டு உடைகளுடன் மன்னனும் ஆடை அணிகலன்களை வழங்கி கப்பலில் ஏற்றி விடுகிறான்.


Sri Lanka Stamp on Ananda Coomaswamy, great art historian

கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு முன்கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இவர்கள் இலங்கையில் மகாதிட்டு என்னும் இடத்தில் கரை இறங்கினர்.

((ஆதாரம்: மகாவம்சம் அத்தியாயம் 7))

பின்னர் பழைய மனைவி குவென்னாவை, விஜயன் கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுத்து வழியனுப்பியதையும், அவளை யக்ஷர்களில் ஒருவனே, ஒரே குத்தில் கொன்றதையும் மஹாவம்சப் படுகொலைகள் கட்டுரையில் தந்துவிட்டேன்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மஹாவம்ச வரி “18 குடிகள்”. தமிழ்நாட்டில் அகஸ்தியர் குடியேறியபோது வடக்கில் இருந்து 18 குடிகளை அழைத்துவந்தார் என்பது நச்சினார்க்கினியர் உரைதரும் விஷயம்!!

மஹாவம்சத்தை எல்லா தமிழர்களும் படிக்கவேண்டும்.

 

1. Who is the husband of 27 Stars?

2. How many zodiac signs are there in the Zodiac?

3. What is the first and last star in the current list of 27 stars?

4. The star Vishaka is associated with two festivals in Tamil Nadu and Sri Lanka? Who are those two great people or god?

5. The great Chola King Raja Raja organised a big festival on his birthday 1000  years ago. What was his birth star?

6.  Keralites (Malayalees) celebrate their biggest annual festival on a famous star day. What is it?

7. Which Indian God was born under star Rohini?

8. What was the name of Balarama’s wife, a star name?

9. Who brought up Lord Skanda, the stars you can see them in the sky?

10. What star is associated with Lord Shiva?

11. A star is the symbol of chastity according to Sangam Tamil Literature and Hindu scriptures. What is the name of that star?

12. Name the star in the Southern Skies that bears the name of a great Rig Vedic Rishi?

13. According to Hindu scriptures, a small boy attained star hood and shines in the Northern Skies. Who was that boy?

13. What was Rama’s birth star according to Valmiki?

14. Give the Hindu name for Ursa Major or Dipper or The Great Bear constellation.

********

 

ANSWERS: 1) In Tamil and Sanskrit literature husband of stars is Moon. It is a simile used hundreds of times in Indian literature 2) Twelve: 27 stars are divided in to 12 signs 3) The current Hindu star list begins with Aswini and ends with Revathi 4) Vishaka: Lord Skanda and The Buddha 5) Sathayam (Sathabishak) 6) Onam 7) Krishna 8) Revathi 9) Krithika: six stars according to Hindus, seven sisters according to Greeks 10) Arudra 11)Arunthathy: a double star system in the Great Bear constellation 12) Agastya (Canopus) 13) Dhruva , Westerners call it Pole Star 14) Sapta Rishi Mandalam.

 

TAMIL QUESTIONS: 27 நட்சத்திர கேள்வி-பதில்

If you answer 14 out of 21 correctly, you are a STAR!

1)27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் எது? கடைசி நட்சத்திரம் எது?

2)சிவனுக்குகந்த நட்சத்திரம் எது?

3)நிலவின் முகம் தேய்ந்து பிறையாகக் காரணம் சந்திரன், 27 பெண்களில் ஒருத்திக்கு சாதகமாக நடந்துகொண்டான். அந்த ஒருத்தி பெயர் என்ன?

4)வைகாசி விசாக நட்சத்திரம் வரும் பவுர்ணமியில் எந்த இருவருக்கு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன?

5)மலையாளிகள் கொண்டாடும் முக்கியப் பண்டிகை எந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையது?

6)ராஜ ராஜ சோழன் தன் பிறந்த நட்சத்திரத்தன்று பெரியவிழா கொண்டாடினான். அந்த நட்சத்திரம் எது?

7)தவிட்டுப்பானை எல்லாம் தங்கம் தரும் நட்சத்திரம் எது?

8)அரசாளும்  நட்சத்திரம் எது?

9)முருகனை வளர்த்த 6 பெண்களின் பெயருடைய நட்சத்திரம் எது?

10)ரோஹினி நட்சத்திரத்தில் பிறந்த இந்துக் கடவுள் யார்?

11)ராமர் பிறந்த நட்சத்திரம் எது?

12)மான்  தலை என்று பெயர் உடைய நட்சத்திரம் எது?

13)பலராமனின் மனைவி பெயர் உடைய நட்சத்திரம் எது?

14)எந்த நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் மதுரையில் பெரிய திருவிழா நடைபெறும்?

15)எந்த நட்சத்திர நாளில் பெய்யும் மழை சிப்பியின் வாயில் விழுந்து முத்து ஆகும்?

16)ஜெமினி எனப்படும் நட்சத்திரத் தொகுப்பிலுள்ள இரண்டு நட்சத்திரங்களின் பெயர் என்ன?

17)தென் வானத்தில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு எந்தப் பிரபல முனிவரின் பெயர் சூட்டப்பட்டது?

18)கற்புக்கு அணிகலனாகத் திகழும் நட்சத்திரத்தின் பெயர் என்ன?

19)புகழ்பெற்ற ஒரு சிறுவனின் பெயரையுடைய நட்சத்திரத்தின் பெயர் என்ன?

20. பெருங் கரடிக் கூட்டம் என்று மேலை நாட்டார் அழைக்கும் நட்சத்திரத் தொகுப்புக்கு இந்துக்கள் கொடுத்த பெயர் என்ன?

21. எந்த இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் “திரு” அடைமொழி உடையன?

*********

 

விடைகள்: 1)முதல் நட்சத்திரம்-அஸ்வினி, கடைசி நட்சத்திரம்- ரேவதி 2)ஆருத்ரா/ திருவாதிரை 3) ரோஹிணி 4) முருகப் பெருமான், புத்தர் பெருமான் 5) திரு ஓணம் 6) சதயம் (சதய விழா) 7) தமிழ் பழமொழிகள்: அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானை எல்லாம் தங்கம் 8) ஆண்மூலம் அரசாளும் 9) கார்த்திகை 10) கிருஷ்ணன் 11)புனர் பூசம் 12) மிருகசீர்ஷம் 13) ரேவதி 14)சித்திரா நட்சத்திர பவுர்ணமி 15) சுவாதி நட்சத்திரம் 16) பூசம், புனர்பூசம் 17) அகஸ்திய நட்சத்திரம் 18)அருந்ததி 19) துருவன் 20) சப்த ரிஷி மண்டலம் 21) திரு ஓணம் (விஷ்ணு), திரு ஆதிரை (சிவன்)

 

 

August 5, 2012

Leave a reply

நட்சத்திர அதிசயங்கள் -Part 3

நட்சத்திர அதிசயங்கள் -Part 3

அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை சென்ற வாரம் பார்த்தோம். அஸ்வினியின் அதிசய ஆற்றல்களை மேலும் பார்ப்போம்
அஸ்வினி ரஹஸ்யம்! தொடர்ச்சி…….

எழுதியவர்: ச.நாகராஜன்

ஆயுர்வேதம் அருளும் தேவர்கள்

அஸ்வினி தேவர்களே யோகம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு சக்தியைத் தரும் தேவர்கள். ‘எங்களுக்கு வலிமையை அருள்க’, என அஸ்வினி தேவர்களை நோக்கி செய்யப்படும் துதி ரிக் வேதத்தில் காணப்படுகிறது. அஸ்வின் எனப்படும் ஐப்பசி மாதத்தின் பெயர் இந்த நட்சத்திரத்தில் நிறைமதி (பௌர்ணமி) சேர்வதை ஒட்டி அமைந்திருக்கிறது.

எந்த வியாதியையும் குணப்படுத்தும் இவர்களுக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தத்தை ரிக் வேதத்தில் காணலாம். சூரிய தேவதையான உஷையிடமிருந்து வரும் சூர்ய ரஸ்மியால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அஸ்வினி தேவர்களே செய்கின்றனர்!

முதுமையை இளமையாக்கும் சியவன ப்ராசம் என்னும் லேகியம் சியவன மஹரிஷி கண்டுபிடித்த ஒரு ஆயுர் வேதத் தயாரிப்பு. நெல்லிக்கனியிலிருந்து இது தயாரிக்கப்படும் விதத்தை அஸ்வினி தேவர்களே சியவனருக்குக் கற்றுத் தந்தனர். அவரும் அதை உண்டு இளமையை அடைந்தார்.
இரசாயனங்களையும் மூலிகைகளையும் இவற்றால் தயாரிக்கப்படும் மருந்துகளையும் பற்றி ரிக் வேதம் கூறுகிறது. வேதம் கூறும் சோமரஸம், சஞ்சீவனி மந்திரம் போன்ற அனைத்திற்கும் தேவ வைத்தியர்களான அஸ்வினி தேவர்களே மூலவர்கள் என்பதும் இவர்களின் எல்லையற்ற ஆற்றலைச் சுட்டிக் காட்டுகிறது!

குதிரை முகத்தால் சித்தரிக்கப்படும் அஸ்வினி தேவர்கள் அளப்பரிய ஆற்றலையும் வாகனங்களின் அதிபதியாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.காலை,மாலை, மூச்சை உள்ளிழுத்தல் வெளியிடுதல் ஆகிய இரண்டிரண்டு விஷயங்களாக உள்ளவற்றை இவர்கள் குறிப்பிடுகின்றனர்.மதுவுக்கு இவர்களே அதிபதி என்பதால் இனிமைக்கும் இவர்களே அதிபதி என்பது தானாக விளங்கும்! அஸ்வதி, அஸ்வத்தா,அஸ்விஜா,வஜபா,ஷ்ரோணா, என்று பற்பல காரணப் பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுவதால் ஒவ்வொரு பெயரும் ஒரு வித ஆற்றலை இரகசியமாகக் குறிப்பதை உணரலாம்!

வாக்கிற்கும் ரத்ன சிகிச்சைக்கும் அஸ்வினி

இவர்களுடன் வாக் தேவியான சரஸ்வதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சரஸ்வதியைத் துதிக்கும் போது இவர்களையும் சேர்த்து வேதங்கள் புகழ்கின்றன. சரஸ்வதி தேவிக்கு ‘சோமர்’ வாக் சித்தியைத் தந்ததாக ரிக் வேதம் கூறுகிறது. அத்தோடு ரத்னக்கற்களையும் அதன் ரகசிய ஆற்றல்களையும் சரஸ்வதிக்கு சோமரே தந்ததாக அது தெரிவிக்கிறது. ஆகவே இந்த ரத்ன சிகிச்சை ஆயுர் வேத சிகிச்சை ஆகிய அனைத்தும் அஸ்வினி தேவர்கள் உலகிற்குத் தந்து அருளியவையாகும்!

அஸ்வினி தேவர்கள் மூன்று சக்கரங்கள் உள்ள தங்க ரதத்தில் பயணம் செய்வதாகவும் அவர்களின் ரதத்தை மனமே கட்டுப்படுத்துகிறது என்று வேத கவிதைகள் தெரிவிக்கின்றன. எல்லையற்ற ஆற்றலையும் சித்திகளையும் அவர்கள் கொண்டுள்ளதை இந்தப் பாடல்கள் அழகுறத் தெளிவாக விளக்குகின்றன.

இழந்த அங்கங்களை மீண்டும் தருவர்

இழந்த அங்கங்களை மீண்டும் பெறவும் இவர்களையே துதிக்க வேண்டும். விஷ்பலா என்ற ராணிக்கு உலோக கால்கள் அஸ்வினி தேவர்களால் அருளப்பட்டது.கால்களை இழந்தவர்கள் அஸ்வினி அருளால் மீண்டும் நடக்க ஆரம்பித்தனர் (ரிக் வேதம் I-117-19). மூன்று பாகங்களாக வெட்டுண்டு கிடந்த ‘ச்யவ’ என்ற ரிஷிக்கு இவர்களே ஆயுளை அளித்து உயிர்ப்பித்தனர்.
இப்படி ஜெம் தெராபி, அகுபங்சர், ஆயுர்வேதம், ப்ராணிக் ஹீலிங் என்று இன்று நவீன பெயர்களில் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் இவர்களே மூலம் என்பதை ரிக் வேதத்தின் பல கதைகளாலும் துதிகளாலும் நன்கு அறியலாம்.

இவ்வளவு விஷயங்களையும் தெரிந்த கொண்ட பின்னர் இவர்களின் ஆற்றலுக்கும் அருளுக்கும் ஒரு எல்லையே இல்லை என்பது சுலபமாகப் புரிந்து விடும்!உதவத் துடிக்கும் இந்த தேவதைகளை தினமும் துதித்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

*****************************
(இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் வார இதழில் வெளி வந்தது. இதை விரும்பியோர் ச.நாகராஜன் எழுதிய இதர நட்சத்திரக் கட்டுரைகளையும் படிக்கலாம்.)

July 5, 2012

2 Replies

நட்சத்திர அதிசயங்கள்- பகுதி 1

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களில் முதலிடத்தைப் பெறுவது அஸ்வினி! இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! எத்தனை ரஹஸ்யங்கள் இதற்குள் உள்ளன தெரியுமா? அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை அருளி உபமன்யுவை மஹரிஷி ஆக்கிய அற்புத சரிதத்தை இந்த வாரம் பார்ப்போம்!
அஸ்வினி ரஹஸ்யம்! – 1

எழுதியவர்: ச.நாகராஜன்

அதி ரஹஸ்ய அஸ்வினி

இருபத்தியேழு நட்சத்திரங்களுள் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அஸ்வினி நட்சத்திரத்தின் பெருமைகளும் மர்மங்களும் அதிசயங்களும் ரஹஸ்யங்களும் ஏராளம், ஏராளம்! மேஷ ராசியில் அமைந்துள்ள அஸ்வினி நட்சத்திரத்தின் அதி தேவதை அஸ்வினி தேவதைகள். மேலை நாட்டினரால் ஆல்பா,பீடா ஏரியஸ் என இது அழைக்கப்படுகிறது. பிறருக்கு உதவி செய்வதற்கென்றே ஒரு தேவதை இருக்குமானால் அது அஸ்வினி தான்! அஸ்வினி இரட்டையரைப் பற்றிய ஏராளமான கதைகள் ரிக் வேதத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் மஹாபாரதம் மற்றும் 18 புராணங்கள் நம் மனதைக் குளிர வைக்கும் பல ரகசியங்களை அஸ்வினி பற்றிக் கூறுகின்றன.

அயோதௌம்யரின் கட்டளை

அஸ்வினி பற்றிய முக்கியமான ஒரு சரிதத்தை இங்கு பார்ப்போம்.இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலம் த்வாபர யுகத்தின் இறுதிக் காலம். அயோதௌம்யர் என்ற மஹரிஷிக்கு உபமன்யு, ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர்.தௌம்யருக்கு குருகுல வழக்கப்படி உபமன்யு உள்ளிட்டவர்கள் உரிய முறையில் சேவை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் தௌம்யர் உபமன்யுவை அழைத்து,” நீ என் பசுக்கூட்டத்தை ரக்ஷ¢த்துக் கொண்டு வா” எனக் கட்டளையிட்டார். அவ்வாறே உபமன்யு பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டு போய் மாலையில் குருவிடம் வந்து சேர்ந்தார். குரு உபமன்யுவின் தேகம் வாடாமல் இருந்ததைக் கண்டு அவரை நோக்கி, “உபமன்யு, உன் தேகம் வாடாமல் பொலிவுடன் இருக்கிறதே, நீ என்ன ஆகாரம் உண்டாய்?” என்று கேட்டார்.உபமன்யு,” குருவே! நான் யாசகம் செய்து அதனால் ஆகாரம் உண்டேன்” என்றார், அதற்கு குரு, “யாசகத்தினால் உனக்குக் கிடைப்பதை என்னிடம் இனி கொண்டு வந்து கொடுத்து விடு. அதை எனக்குச் சேர்ப்பிக்காமல் நீ உண்பது முறையன்று” என்றார். உபமன்யு அந்தக் கட்டளையை சிரமேற் கொண்டார். மறுநாள் பிட்சையில் தமக்குக் கிடைத்த அனைத்தையும் குருவிடம் உபமன்யு சமர்ப்பித்தார். அதில் ஒரு கவளம் கூட உபமன்யுவுக்குத் தராமல் தௌம்யரே அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பிறகு மாடுகளை மேய்க்கச் சென்ற உபமன்யு மாலையில் வீடு வந்து சேர்ந்தார்.

அவர் உடல் வாடாமல் இருந்ததைக் கண்ட குரு, “உனக்கு நான் ஒரு கவளம் கூடக் கொடுக்கவில்லையே! என்றாலும் கூட நீ உடல் வாடாமல் வந்திருக்கிறாயே! எதை ஆகாரமாக உண்டாய்?” என்று கேட்டார்.அதற்கு உபமன்யு, “குருவே! முதலில் யாசகம் எடுத்ததைத் தங்களிடம் கொடுத்து விட்டேன். இன்னொரு முறை யாசகம் எடுத்து அதை நான் சாப்பிட்டேன்” என்றார்.தௌம்யர், “உபமன்யு, நீ செய்தது சரியல்ல. உன்னுடைய இந்த செய்கையினால் பி¨க்ஷ ஜீவனம் செய்யும் மற்றவர்களுக்கு நீ இடைஞ்சல் செய்கிறாய். இப்படி நீ ஜீவிப்பதால் நீ துராசை உள்ளவனென்பது நிச்சயமாகிறது” என்றார்.குரு கூறிய அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு உபமன்யு மாடுகளை மேய்க்கச் சென்றார். அன்று மாலை வழக்கம் போல அவர் வந்ததும் அவரை நோக்கிய குரு “ என்ன உபமன்யு, நீ வாடாமல் கொழுத்துத் தான் இருக்கிறாய், என்ன உணவை உண்டாய்?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு,”ஐயனே, நான் இந்தப் பசுக்களின் பாலை அருந்தி ஜீவிக்கிறேன்” என்றார்.

உடனே தௌம்யர், “அடடா, என்னுடைய அனுமதியைப் பெறாமல் பாலை அருந்தலாமா? இனி அருந்தாதே!” என்றார். குருவின் வார்த்தைகளுக்குச் சரி என்று சொல்லி உபமன்யு திரும்பினார். மறு நாள் மாலை ஆயிற்று.உபமன்யு வந்தார். குரு அவர் சற்றும் சோர்வடையாமல் இருப்பதைக் கண்டு,”உபமன்யு, இன்று எதையாவது அருந்தினாயா, என்ன?பாலை அருந்தவில்லையே!” என்று கேட்டார். “ஐயனே! பாலை அருந்தவில்லை. ஆனால் பாலைக் கன்றுகள் குடித்தபின்னர் கீழே விழும் நுரைத் துளிகளை அருந்தினேன்” என்றார், உடனே தௌம்யர்,” இந்தக் கன்றுக்குட்டிகள் பாலை போதிய அளவு அருந்தாமல் விட்டு விடுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இனி நீ நுரைத் துளிகளையும் அருந்தாதே” என்று கட்டளையிட்டார். குருவின் கட்டளையை உபமன்யு சிரமேற் கொண்டார். நுரைத் துளிகளை இனி அருந்தமாட்டேன் என்று குருவிடம் உறுதி கூறினார். கன்றுகள் அருந்திய பின்னர் வந்த பாலின் நுரைத்துளிகளையும் அருந்தாமல் காட்டில் மாடுகளை மேய்த்தவாறு அலைந்த அவர் இறுதியில் பசி தாங்காமல் எருக்க இலைச் சாறை அருந்தினார்.காரம் நிறைந்த எருக்க இலைச் சாறின் விஷத்தினால் அவர் கண்கள் உடனே குருடாயின.

அஸ்வினி தேவர்களை நோக்கி துதி

கண் தெரியாததால் காலால் நடக்க முடியாமல் உபமன்யு ஊர்ந்து செல்லத் தொடங்கினார்.அப்போது வழியில் இருந்த ஆழமான கிணற்றுக் குழி ஒன்றில் விழுந்தார். மாலை நேரமாயிற்று. உபமன்யு வராததைக் கண்ட தௌம்யருக்குக் கவலை வந்தது. தனது இதர சீடர்களை அழைத்து உபமன்யு எங்கே என்றார். அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. ‘வாருங்கள், அவனைச் சென்று தேடுவோம்’ என்று கூறிய தௌம்யர் காட்டை நோக்கிச் சென்றார். ‘உபமன்யு, நீ எங்கே இருக்கிறாய்’ என்று கூவிய வாறே ஒவ்வொரு பகுதியாக அவர் தேட ஆரம்பித்தார். தன் குருவின் சப்தத்தைக் கேட்ட உபமன்யு, “ குருவே! நான் இதோ இந்தக் கிணற்றுக் குழியில் வீழ்ந்து கிடக்கிறேன்!” என்று பரிதாபமான குரலில் உரக்கக் கத்தினார்.”இதில் நீ எப்படி விழுந்தாய்?” என்று தௌம்யர் கேட்க உபமன்யு, தான் எருக்கஞ்சாறை அருந்தியதையும் கண்கள் குருடான விஷயத்தையும் கூறினார். உடனே தௌம்யர், “உபமன்யு! தேவர்களுக்கு வைத்தியர்களான அஸ்வினி தேவர்களை நீ ஸ்தோத்திரம் செய்! அவர்கள் உனக்கு கண்களை மீண்டும் அளிப்பார்கள்” என்று கூறி அருளினார். குருவால் கட்டளையிடப்பட்ட உபமன்யு மனமுருக அஸ்வினி தேவர்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

ரிக் வேதத்தில் உள்ள மிக நீண்ட உபமன்யுவின் துதி மிக மிகச் சிறப்பானது. அதன் இறுதி வாக்கியங்களில் அவர், “ஓ! அஸ்வினி தேவர்களே!! நான் உங்களை வணங்குகிறேன். உங்களால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஆகாயத்தையும் வணங்குகிறேன்.தேவர்களும் கூட தப்ப முடியாத எல்லாக் கர்மங்களுக்கும் பலன்களை நீங்களே விதிக்கின்றவர்களாய் இருக்கிறீர்கள்!ஆனால் உங்களின் செய்கைகளால் ஏற்படும் பலன்கள் உங்களைச் சார்வதில்லை. நீங்களே எல்லோருக்கும் பெற்றோர்களாயிருக்கின்றீர்கள். நீங்களே ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னால் ரத்தமாகவும் ஜீவாதாரமான திரவியமாயும் ஆகிற அன்னத்தைப் புசிக்கிறீர்கள். புதிதாய் பிறந்த குழந்தை தாயின் பாலை உண்ணுகிறது. உண்மையில் குழந்தை ரூபமாக இருப்பவர்கள் நீங்களே! ஹே! அஸ்வினி தேவர்களே! என்னுடைய ஜீவனை ரக்ஷ¢ப்பதற்கு ஆதாரமாக உள்ள கண் பார்வையை எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்.” என்று கூறி அஸ்வினி தேவர்களை மனமுருக பிரார்த்தனை செய்தார்.

மீண்டும் கண்பார்வை கிடைத்தது

எல்லோருக்கும் உடனே உதவத் துடிக்கும் அஸ்வினி தேவர்கள் தன்னை அண்டி வணங்கிய உபமன்யுவின் துதியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் உபமன்யுவின் முன் தோன்றி.”நாங்கள் திருப்தி அடைந்தோம். இதோ, இந்தத் தின்பண்டத்தை உடனே உட்கொள்” என்று கூறி அவர் உண்ண தின்பண்டம் ஒன்றைத் தந்தனர். உபமன்யு,”நீங்கள் கொடுப்பதை என் குருவுக்கு முதலில் கொடுக்காமல் நான் சாப்பிடத் துணியேன்” என்றார். உடனே அசுவனி தேவர்கள் பழைய சம்பவம் ஒன்றை உபமன்யுவிடம் கூற ஆரம்பித்தனர். “முன்னொரு காலத்தில் உன்னுடைய குருவானவர் எங்களைப் பிரார்த்தித்தார்.நாங்கள் அப்போது அவருக்கு இதே மாதிரி தின்பண்டம் ஒன்றை உண்ணுவதற்காகத் தந்தோம்.அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமலேயே சாப்பிட்டார். ஆகவே உன் குரு முன் செய்த பிரகாரமே நீயும் அவருக்குக் கொடுக்காமல் உடனே இதைச் சாப்பிடலாம்” என்று கூறினர்.

உபமன்யு, “ஓ! அஸ்வினி தேவர்களே! என்னை மன்னிப்பீர்களாக! இதை என் குருவுக்குக் கொடுக்காமல் நான் சாப்பிட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே அஸ்வினி தேவர்கள், “ உன் குருவின் மீது உனக்கு இருக்கும் பக்தியை மெச்சினோம்.உன் குருவினுடைய பற்கள் காரிரிரும்பினால் ஆக்கப்பட்டுள்ளன. உன்னுடைய பற்கள் தங்கப் பற்களாகக் கடவது” என்று கூறி ஆசீர்வதித்தனர்.” இனி நீ உன் பார்வையை அடைவாய். உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்” என்று கூறி அஸ்வினிதேவர்கள் மறைந்தனர்.

குருவிடம் உபமன்யு நடந்த அனைத்தையும் கூறி வணங்கினார்.தௌம்யர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். உபமன்யுவை நோக்கி அவர்,”நீ இனி அஸ்வினி தேவர்கள் கூறியபடியே சகல §க்ஷமத்தையும் அடைவாய்! எல்லா வேதங்களும் எல்லா தர்ம சாஸ்திரங்களும் உன்னிடத்தில் விளங்கும்” என்று கூறி ஆசீர்வதித்தார். அதன்படியே உபமன்யு வேத சாஸ்திரங்களில் தேர்ந்து பெரும் தவம் புரிந்து பெரிய மஹரிஷியாக ஆனார்.
அஸ்வினி தேவர்கள் அனைவருக்கும் உதவி செய்த ஏராளமான சம்பவங்களுக்கு உபமன்யுவின் கதை ஒரு சிறந்த சான்று. மேலும் அஸ்வினியைப் பற்றிப் பார்ப்போம்
-தொடரும்

*****************

No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...