Thursday, 24 May 2018

அமிர்த சஞ்சீவி

அமிர்த சஞ்சீவி மூலிகை 

ஜலதோஷம் பிடித்தால் கற்பூரவல்லி சாப்பிடு

விஷ ஜுரம் வந்தால் நிலவேம்பு கசாயம் சாப்பிடு 

மூலம் வந்தால் நத்தை சூரணம் சாப்பிடு 

    என்று ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்தாக தேடி கண்டுபிடித்து அதை அருந்தி குணமடைவதற்குள் வராத சலிப்பு வந்துவிடுகிறது. தனித்தனி நோய்க்கு தனித்தனி மருந்து என்று இல்லாமல் ஒரே மருந்தே எல்லா நோய்களையும் குணப்படுத்துவதாக இருந்தால் எப்படி இருக்கும்? இது கற்பனையில் வந்த ஆசையல்ல நிஜமாகவே தோன்றிய கேள்வி. 

நமது சித்தர்கள் தெய்வீகமான பல மருந்துகளை கண்டறிந்து விளக்கமாக நமக்கு சொல்லியிருகிறார்கள் அதிசயமான இரகசியமான சில மூலிகைகளை வைத்து பல நோய்களை ஒரே மருந்தில் குணப்படுத்தும் வித்தைகளையும் அவர்கள் விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

 ''அவற்றில் முக்கியமானது சஞ்சீவி மூலிகை ''

இது மரணமடைந்த மனிதனை கூட எழுப்பி உட்காரவைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இராமாயணத்தில் லஷ்மணன் உட்பட வானர வீரர்கள் அனைவரும் மறித்து போனபோது இமயமலைக்கு சென்ற அனுமன் கொண்டுவந்தது இந்த சஞ்சீவி மூலிகை தான்.

அனுமன் மலையை தூக்கிவரும் போது மலையிலிருந்த மூலிகை செடிகள் பலவும் நிலப்பரப்பில் விழுந்து முளைத்து எழுந்தன. எனவே சஞ்சீவி மூலிகை என்பது சஞ்சீவி மலையில் மட்டுமில்லை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களிலும் அந்த மூலிகை இருக்கிறது. ஆனால் அதன் இருப்பு இரகசியமாக தெய்வீகமாக இருக்கிறது. எனவே அது பலரின் கைகளில் கிடைக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக உண்டு. 

தெய்வீக அருள்பெற்றவர்கள், தவத்தில் சிறந்தவர்கள் போன்ற புனிதர்களிடம் இத்தகைய மருந்துகள் இன்றும் இருந்து வருகிறது. ஆனால் அவைகள் அபூர்வமாகவே மக்களுக்கு தெரியவருகிறது. நமது குருஜியிடம் மிகவும் அரிதான நவபாசனம் ஒன்றை சித்தர்கள் பரிசாக கொடுத்ததை வாசகர்கள் அறிவார்கள். அதே போன்று இன்னும் அரிதான மூலிகை ஒன்றினையும் குருஜி பெற்றிருக்கிறார் அந்த அபூர்வ மூலிகையின் சாரம்சத்தை கொண்டு அனைத்து நோய்களையும் நீக்க கூடிய மருந்து ஒன்றை தயாரித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார். 

இதை உண்ட உடன் மாயஜாலம் போல எல்லா நோய்களும் ஓடிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நோய்களை வராமல் தடுக்கும் சக்தி நமது உடம்பிற்கு உண்டு. ஆனால் அந்த சக்தி பல இயற்கை மாறுபாடுகளால் சில நேரம் வேலை செய்யாமல் போகும் போது தான் நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்த மூலிகை மருந்து நமது உடம்பில் ஊறி நோய் எதிர்ப்பு சக்தியை மிக அதிகமாக உற்பத்தி செய்து துரிதமாக வேலை செய்யவும் வைக்கிறது. சுருக்கமாக சொல்வது என்றால் உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து புதிய நோயை வரவிடாமல் தடுக்கிறது. பழைய நோயை வளரவிடாமல் கட்டுப்படுத்துகிறது.



அமிர்த சஞ்சீவி என்பது இந்த மருந்தின் பெயர் இதை அருந்த பத்தியமில்லை, வயது தடையில்லை தினசரி காலையில் ஒரு தேக்கரண்டியளவு சுத்தமான குடிநீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வந்தால் போதும் தானாக உடம்பில் வனப்பும்,மினுமினுப்பும்,சுறுசுறுப்பும் கூடுவதை அறிவீர்கள். இதுவே நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் உடம்பில் இருப்பதற்கு சரியான ஆதாரமாகும். 

எனக்கு தீராத தலைவலி, வயிற்றுவலி இருக்கிறது, சர்க்கரை நோய் இருக்கிறது அதற்கு இந்த மருந்தை பயன்படுத்தலாமா என்று கேள்வி கேட்பது இயற்கை. இது குறிப்பிட்ட ஒரே நோய்க்கான மருந்து அல்ல சகலவிதமான நோய்க்கும் ஒரே மருந்தாகும். உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் அது எத்தனை காலம் நீண்டதாக இருந்தாலும் அமிர்த சஞ்சீவி மருந்தை பயன்படுத்தலாம்.    கண்டிப்பாக நல்ல பயன் கிடைக்குமென்று உறுதி தரமுடியும். 

எனக்கு நோயே இல்லை நான் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறேன்.நான் அமிர்த சஞ்சீவியை பயன்படுத்தலாமா என்று கேட்டால் கண்டிப்பாக பயன்படுத்தலாம் என்ற பதிலை தரவேண்டும். காரணம் இன்றைய உணவுமுறை உணவு பொருட்கள் இயற்கையாக இல்லை ஏதாவது ஒருவகையில் இரசாயனம் கலந்த உணவுகளை நாம் சாப்பிடவேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே ஆரோக்கியமான சூழலிலும் அமிர்த சஞ்சீவி மருந்தை பயன்படுத்தலாம் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்

No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...