அற்புத சக்தி தரும் திரிபலா
அற்புத சக்தி தரும் திரிபலா
திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேதமருந்து. இது ஒரு ரசாயனமாகவும்,காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்றுமூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான்திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவனநெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய்(Terminalia chebula) மற்றும் தான்றிக்காய்(Terminalia belerica) ஆகும்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேதமருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேதமருத்துவர்களால், உலகம் முழுவதும்பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப்பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்கசம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில்முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதுஆச்சரியமான விஷயமாகும்.நெல்லிக்காய், கடுக்காய் மற்றும்தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின்கலவையானது அற்புதமானகாயகல்பமாகி, தேவர்களின்அமிர்தத்தினைப் போல் எந்த ஒருவியாதியையும் தீர்க்கும் அற்புதசக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பதுஇளமையை பாதுகாக்கும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்குமுதுமைத் தன்மையை நீக்கி இளமைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்றுபொருள். இது உடல் ஆரோக்கியத்தினைஅதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக்கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமானவாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பதுஒரு முக்கியமான அங்கமாகும். இதுஎப்போதுமே அதிகமாகவே இருக்கவேண்டும். நமது உடலில்இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்புஅரண்களைத் தாண்டி, உடலின் உள்ளேநுழையும் கிருமிகளை எதிர்த்துப்போராடும் 'ஆன்டிபாடி' (antibodies)எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளைஅதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்ததிரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும்வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்தஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலாசெயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத்தரும் முக்கியமான காரணியான "கட்டற்றகாரணிகளை" (free radicals) உற்பத்திசெய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது.மேலும் செல்கள் முறையாகச்செயல்படுவதற்கு முக்கியமாகத்தேவைப்படும் மைட்டோகாண்டிரியா,கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவைசிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலாதூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலாஅற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும்உணவுப்பாதையில், மலத்தினைவெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராகசெயல்பட வைக்கிறது. மேலும்இரத்தத்தில் உள்ள கொழுப்பினைகரைக்க தேவைப்படும் பைல் (Bile)திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும்உதவுகிறது. உணவுப்பாதையில்தேவையான கார அமிலநிலையை (pH level)தேவையான நிலையில் பேணுவதற்கும்துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல்சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது.மலச்சிக்கலுக்கு அதிகமாகப்பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்துதிரிபலாவாகும். உடலிலுள்ளநச்சுப்பொருட்களை நீக்கும் நச்சுநீக்கியாகவும் இது செயலாற்றுகிறது.சிறந்த மலமிளக்கியாகவும்பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும்,தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாகவயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும்,வளையப்புழுக்களையும் வெளியேஅகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது.மேலும் உடலில் பூச்சிகளும்,நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாதநச்சு நிலையை உடலில் பேணுவதற்குதிரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின்எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலாஉதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகைஎன்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்தசோகை என்பது இரத்தத்தில்,ஹீமோகுளோபின் எனப்படும் இரத்தசிவப்பு அணுக்களின் அளவு குறைந்துகாணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமதுகணையத்தினைத் (pancreas) தூண்டி,இன்சுலினை சுரக்கச் செய்கிறது.கணையத்தில்தான் இன்சுலினைச்சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள்(langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன.மேலும் உடலில் குளுகோஸின் அளவைசமநிலையில் பேணுவதில் பெரும்பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும்.மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன்இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒருநிலையான ஹைப்பர்கிளைசீமியா(hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரைநிலையில், இதனை எடுத்துக் கொள்வதுசிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள்,திரிபலாவை உட்கொள்வது மிகவும்பயன்தரும். இதனுடைய மருத்துவக்குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின்அளவினைக் குறைக்க முடியும். நமதுஉடலில் கொழுப்பு படிவதற்குக்காரணமான அடிபோஸ் செல்களைக் குறிவைத்து செயல்படுவதால், கொழுப்பின்அளவு குறைகிறது. இதன் மூலம் உடல்பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்துஇரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களைவெளியேற்றும் தன்மைகொண்டிருப்பதால், சருமநோய்களுக்கான மருத்துவத்தில் பெரும்பங்காற்றுகிறது. இரத்தத்தினைச்சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால்,தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம்கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளைநீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும்உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத்தீர்க்கும் மருந்தாகவும் இதுசெயல்படுகிறது. மேலும் நமதுசுவாசப்பாதையிலுள்ள சளியில்பாக்டீரியாக்கள் வளராமலும் இதுதடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலாபயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதைமாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும்தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தைஅளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகத்தில் மேற்கொண்டசமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்குபுற்றுநோயைக் குணப்படுத்தும் திறன்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புற்றுநோய் செல்களில் மைட்டேடிக்நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம்உண்டாவதைக் குறைக்க உதவிசெய்கிறது. அதன்மூலம், புற்றுநோய்செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis)வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.
சாப்பிடும் முறை :
உணவு உட்கொள்ளும் முன் ஒரு மணிநேரம் முன் இந்த சூரணம் எடுத்து கொள்ளவேண்டும். ஒரு டம்ளர் வென்னீரில் ஒருஸ்புன் கலந்து குடிக்க வேண்டும்.
உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பு,கெட்ட நீர் இவைகள் இயற்கை கழிவுகளாகவெளி ஏறிவிடும், உடல் எடையும்கண்முன்னே குறைய தொடங்கும்.
No comments:
Post a Comment