Wednesday, 26 January 2022

உயர் இரத்த அழுத்தம் குறைய

💥உயர் இரத்த அழுத்தம் குறைய, தூக்கமின்மை போக்க உதவும் `அக்குபிரஷர் புள்ளி’

உடலில் இருக்கும் உறுப்புகளில், அவ்வளவு எளிதாக பிரச்னையை உருவாக்காத ஒரே உறுப்பு கல்லீரல். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும்.
  

தற்போது நான்கில் ஒரு இளைஞருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அக்குபிரஷர் மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம் குறையவும், தூக்கமின்மையை போக்கவும் உதவுகிறது இந்த கல்லீரல் புள்ளி. இதனைச் சீன மொழியில்  `டாய் சோங்’ என்று அழைப்பார்கள். இது கல்லீரலுடன் தொடர்புடையது.

உணவில் சேர்க்கப்படும் அளவிற்கு அதிகமான உப்பு, இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இரத்தமானது உடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு சிறுநீரின் மூலமாக இரத்தத்தில் கலந்துள்ள உப்பினை வெளியேற்ற முனைகிறது. இதுபோன்ற செயல்பாடுகளினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது

💥உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான முக்கிய காரணங்கள் 

1.   அதீத கவலை, தேவையற்ற சிந்தனைகள், பயம், மன அழுத்தம் கோபம்,தூக்கமின்மை, பதற்றம் போன்ற மனநிலை தொடர்பான பிரச்னைகளே முக்கிய காரணம்.

2.   புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் மாமிச உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற தவறான பழக்க வழக்கங்கள்.

3.   குறைந்த அளவிலான இரத்தம் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிறுநீரகக் கோளாறும் முக்கிய காரணமாகும்.

4.    அதிகமான கொழுப்பு தமனிகளில் தேங்குவதால் இருதய தமனிகள் சுருங்குதல்

5.    தேவையற்ற கர்ப்பத்தை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளப்படும் கர்ப்பத்தடை மாற்றங்களால் உண்டாகும் ஹார்மோன் குறைபாடுகள்

💥கல்லீரல் 

உடலில் இருக்கும் உறுப்புகளில், அவ்வளவு எளிதாக பிரச்னையை உருவாக்காத ஒரே உறுப்பு கல்லீரல். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான். எனவே கல்லீரலின் செயல்பாட்டை நாம் சீராக்கும் போது உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனரீதியான உணர்வுகளும் கட்டுக்குள் வரும்.

💥கல்லீரல் அக்குபிரஷர் புள்ளி 

கால் விரல்களில், உங்கள் பெருவிரலின் தோலும் அடுத்த விரல் சேரும் (சற்று பள்ளமாக இருக்கும்) இடத்திற்கு இரண்டு விரல்களின் அளவுக்கு இடைவெளியில் சரியாகக் கீழே அமைந்துள்ளது.

இவ்விடத்தில் வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 3 நிமிடங்கள் வரை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டே மிதமாக அழுத்தவும்.

💥பலன்கள் 

தலைவலி, தலைச்சுற்றல், புற்றுநோய் புண்கள்.

கண் பிரச்சினைகள் - மங்கலான பார்வை, சிவப்பு, வீக்கம், வலுமிகுந்த கண்கள்.

பிறப்புறுப்பு பிரச்சினைகள் - வலி / வீக்கம், குடலிறக்கம், ஆண்மைக் குறைவு.

குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு.

மூச்சு திணறல், உளவியல் பிரச்சினைகள், தலைவலி போன்றவை குறைக்கிறது.

💥கவனம் 

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவர்களது இரத்த அழுத்தம் மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...