Tuesday, 15 March 2022

காரகோபாவநாஸ்தி

காரகோபாவநாஸ்தி

ஒரு காரகத்தை குறிக்கிற கிரகம் அதே பாவத்தில் அமர்ந்திருப்பது காரகோபாவநாஸ்தி எனப்படும் 

கிரகங்களும் அதன் காரகங்களும்

சூரியன்   தந்தைக்காரகன்

சந்திரன்  தாய்க்கரகன்

செவ்வாய் சகோதரகாரகன் 

சுக்கிரன் வாகனம் மற்றும் களத்திரக்காரகன்

குரு தனம் மற்றும் குழந்தைகாரகன் 

புதன் தாய் மாமனுக்கு காரகன்

இடங்களும் அதன் காரகங்களும்

2 ம் இடம் தனம்

3 ம் இடம் சகோதரம்

4 ம் இடம் வண்டி மற்றும் தாய் 

5 ம் இடம் குழந்தைகள்

6 ம் இடம் தாய் மாமன் 

7 ம் இடம் களத்திரம் 

8 ம் இடம் ஆயுள்

9 ம் இடம் தந்தை 

10 ம் இடம் தொழில் 

அதன் அடிப்படையில் 

இரண்டாமிடம் தனஸ்தானம் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம் இவற்றில் குரு இருப்பதோ

நான்காமிடம் தாய் ஸ்தானம் இதில் சந்திரன் இருப்பதோ 

நான்காமிடம் வாகனத்தை குறிப்பதால் மற்றும் ஏழாமிடம் வாழ்க்கை துணையை குறிப்பதால் இங்கு சுக்கிரன் இருப்பதோ 

எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் மற்றும் பத்தாமிடம் தொழில் ஸ்தானம் என்பதால் இவற்றில் சனி இருப்பதோ 

மூன்று சகோதர ஸ்தானம் என்பதால் செவ்வாய் இருப்பதோ 

ஒன்பதாமிடம் தகப்பன் ஸ்தானம் என்பதால் சூரியன் இருப்பதோ 

ஆறிமிடம் தாய் மாமன் ஸ்தானம் என்பதால் புதன் இருப்பதோ

காரகோ பாவ நாஸ்தி ஆகும் 

இந்த அமைப்பில் ஒரு கிரகம் இருக்குமானால் அதற்கு உண்டான காரகம் பாதிப்படையும் என்பது ஜோதிட விதி

இந்த காரகோபாவநாஸ்தி என்ன செய்யும் என்றால் 4 ல் இருந்தால் தாயை விட்டு பிரித்து வைக்கும் 9 ல் தந்தையை பிரித்து வைக்கும் 7 ல் வாழ்க்கை துணையை பிரித்து வைக்கும் 5 லிருந்தால் குழந்தைகளுக்கு ஆகாது 2 லிருந்தால் தனம் கெடும் 10 லிருந்தால் தொழில் கெடும் 8 லிருந்தால் ஆயுள் பங்கம் 3 லிருந்தால் சகோதரர்களுக்கு ஆகாது அல்லது இளைய சகோதரமே இல்லை என்று பொதுவான ஜோதிட கருத்து இருப்பது நாம் அறிந்ததே 

இப்படி பட்ட அமைப்பில் ஒரு ஜாதகம் இருந்தால் மேலே சொன்ன பாதிப்புகள் இருக்குமா என்று கேட்டால் பொதுவாக அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது ஒரு வேளை இந்த அமைப்பு வேலை செய்யாமலும் போகலாம்

மேலே சொன்ன அமைப்பு இருந்தும் எந்த பாதிப்பும் இல்லாமல் போக காரணம் என்ன என்று பார்ப்போம் 

குறிப்பிட்ட பாவத்தில் உள்ள கிரகம் ஆட்சியோ உச்சமோ அடைந்தாலோ குருவின் பார்வையில் இருந்தாலோ வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் என்ற அமைப்பில் இருந்தாலோ அல்லது லக்கினாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ இல்லை லக்னாதிபதியின் பார்வையில் இருந்தாலோ இந்த காரகோபாவநாஸ்தி வேலை செய்வது இல்லை 

உதாரணமாக சனி 8 ல் இருந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவோம் இதனை நாம் எதை வைத்து சொல்கிறோம் என்றால் சனி இருக்கும் இடம் கெடாது என்ற விதியை வைத்து அல்லவா உண்மை அதுவல்ல 

பகை நீச்சம் என்கிற அமைப்பில் சனி இருந்து 8 க்கு அதிபதியும் லக்னாதிபதியும் பலம் இல்லாமல் இருந்தால் சனி திசையில் ஆயுள் கண்டம் ஏற்படும் அப்படி இல்லாமல் லக்கினாதிபதி மட்டும் வலிமையாக இருந்தால் ஆயுள் மட்டும் தான் இருக்கும் தொழில் தனம் போன்றவை எதுவும் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும் இதற்கு சனி திசை நடைமுறையில் வர வேண்டும் மற்றபடி பயம் தேவையில்லை

ஒருவேளை இவற்றில் எந்த விதியுமே பொருந்தி வரவில்லை என்றால் மட்டுமே காரகோபாவநாஸ்தி வேலை செய்யும் எனவே இந்த அமைப்பை பார்த்து மட்டுமே பயந்துவிட கூடாது முழுமையாக ஆராய வேண்டும்

ஒருவேளை அப்படியே காரகோபாவநாஸ்தி இருப்பதாகவே கொள்வோம் அப்படி இருந்தாலும் பயம் கொள்ள வேண்டுமா என்ன சிவபெருமான் குடும்பத்தோடு இருக்கும் படத்தை வைத்து பூஜை செய்ய யாவையும் சிவன் சரி செய்துவிட்டு போகிறார் 

தோஷத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள் அது யோகமாக மாறும் அல்லது இறைவன் மாற்றுவான்


No comments:

Post a Comment

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...