சந்திரன் சுய ஒளி அற்ற கோளம். இது பூமியினுடைய துணைக்கோளாக பூமியைச் சுற்றிவருகிறது. சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கிறது. சந்திரனுடைய சலனத்தையொட்டி வளர்பிறை தேய்பிறை, அமாவாசை ஏற்படுகிறது. மனிதர்களின் உட்ல், மனம், புத்தி தாயார் போன்ற முக்கியமானவைகளுக்கு காரக கிரகமாக அமைகிறது. சந்திரன் ஆட்சி வீடு, கடகம், உச்சவீடு- ரிஷபம் மூலத்திரிகோணம் ரிஷபம்.
சுக்கிரன் வரலாறு
பிரம்மனின் புத்திரர்களின் ஒருவர் அத்திரிமகரிஷி அவர் அனுசுயா என்ற மனைவி மூலம் மூன்று புத்திரர்களைப் பெற்றார். அவர்களில் முதல் புத்திரன் சந்திரன் ஆவார். சந்திரன் மகாவிஷ்ணுவை நோக்கி தவமியற்றி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். சந்திரன் தோற்றத்தால் மிக வசீகரம் உடையவராக இருந்தார். ஒரு சமயம் மும்மூர்த்திகளின் ஆசி, ஆலோசனைப்படி ராஜசூய யாகம் நடத்தினர். அப்போது சந்திரனின் அழகைக்கண்டு எல்லா பெண்களும் மையல் கொண்டிருந்தனர். அவர்களில் தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களும் இருந்தனர்.
தட்சன், தமது பெண்களின் வேண்டுகோளின் படியும் சந்திரனின் சம்மதத்தின் பேரிலும் 27 பெண்களையும் சந்திரனுக்கே மணமுடித்துக் கொடுத்து அவர்கள் மீது சமமாக அன்பு செலுத்துமாறு வேண்டிக் கொண்டார்.
இப்படி தங்கிய பெண்களில் தேவ குரு பிரகஸ்பதியின் மனைவி தாரையும் ஒருவளாவாள். தாரை தம் இருப்பிடம் திரும்ப வேயில்லை. பிரகஸ்பதி வந்து அழைத்தும் தாரை வரமறுத்து விட்டாள். இது பெரும் பிரச்சினையாகி இதன் காரணமாக சிவனிடம் பிரச்சினை எடுத்துச் சொல்லப்பட்டது. சிவபெருமானும் தாரையை பிரகஸ்பதியிடம் ஒப்படைக்கவில்லை, எனவே சிவபெருமானுக்கும் சந்திரனுக்கும் இடையே பெரும் போர் மூண்டு விட்டது.
இந்த போரின் விளைவு வ்பரிதமாகப் போகும் என்பதை உணர்ந்த பிரம்மா, சந்திரனை அனுகி தாரையை அனுப்பி குருவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். ஆனால் சந்திரன் அதைக்கேட்காமல் பிரம்மாவை அவமதித்தார். எனவே கோபமுற்ற பிரம்மா சந்திரனை நீச்சனாக போகுமாறு சபித்தார். அதன்படி சந்திரனுடைய கலை ஒவ்வொரு நாளும் தேய்ந்து கொண்டே வந்தது. எனவே சந்திரன் பயந்து பிரம்மன் ஆணைப்படி தாரையை குருவிடம் சேர்த்துவிட்டு, மன்னிப்புக்கேட்டார். குருவின் பார்வையும். மன்னிப்பும் கிடைத்ததால் பிரம்மன் சாபம் தணிந்தது.
சந்திரனுடன் தாரை சேர்ந்திருந்த காலத்தில் புதன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை குரு ஏற்க மறுத்துவிட்டார். எனவே சந்திரனிடமே இருந்தது.
அந்தக்குழந்தையை தன் மனைவி மார்கள் 27 பேரிடமும் கொடுத்து கிருத்திகை, ரோகிணி ஆகியவர்கள் மட்டுமே புதனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தார்கள். மற்றவர்கள் புதனைக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த சந்திரன் மற்றவர்களோடு ஈடுபாடு கொள்வதைக் குறைத்துக்கொண்டார். இதைக் கேள்விப்பட்ட தட்சன் சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து விடவேண்டும் என்று சாபமளித்து விட்டார். தட்சன் மிக்க சக்தியுடையவராதலால் அவர் சாபம் அப்போதே செயல்பட ஆரம்பித்து விட்டது.
இதனால் பயந்து போன சந்திரன் பிரம்மாவையும் தேவேந்திரனையும், அணுகி தனது கலைகள் தேயாமல் இருக்க வழிவகை கேட்டான். அவர்களும் சிவபெருமானை சரணடைந்தால் வழிபிறக்கும், அதைத்தவிர வேறு வழியில்லை என்று யோசனை கூறினர். கடைசி ஒரு கலை இருக்கும்போது கடைசி முயற்சியால், வேறு வழியே இல்லையாதலால் சந்திரன் சிவனைப் பணிந்தார்.
பகைவருக்கும் அருளும், விருப்பு வெறுப்பு இல்லாத சர்வேஸ்வரன் சந்திரனை ஆசி கூறி மீதியாக நின்ற ஒரு கலையை தனது சடையில் அணிந்து கொண்டார். சந்திரன் சிவன் முடி ஏறியதால் கலை தேய்வது நின்றது. சிவனின் அருளால் அன்று முதல் மீண்டும் ஒவ்வொரு கலையாக வளர்ந்தது. எனிமும் தட்சனின் சாபமும் சிவனின் ஆசியும் கலந்து இரண்டுமே செயல்பட்டு வந்ததால் 15 நாள் சந்திரந்தேய்வதும் 15 நாள் சந்திரன் வளர்வதும் மாறி மாறி ஏற்படுகிறது.
ஒரு சமயம் சந்திரன் விநாயகரை அவரது தோற்றத்தையும், கையில் இருந்த கொழுக்கட்டையையும், பார்த்து நகைத்தத்தால், சந்திரனை நீச்சனாகப் போகும்படி விநாயகர் சபித்து விட்டார். எனிமும் சந்திரன் விநாயகரிடம் சாப நிவர்த்தி கேட்டதால் மன்னிக்கப்பட்டார் என்றாலும் விநாயகர் சதுர்த்தி தினத்தின் ஒரு நாள் மட்டும் சந்திரன் சாபத்தின் பயனாக நீச்சனாக இருப்பார். அன்று சந்திரனை வணங்கக் கூடாது.
No comments:
Post a Comment