Thursday, 24 May 2018

செருப்படை


செருப்படை – மருத்துவ பயன்கள்

செருப்படை முழுத் தாவரமும் கார்ப்புச் சுவையையும், வெப்பத் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்ச் செய்யும். மலம், சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும். சளியை முற்றிலும் குணப்படுத்தும்.

தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. சொர சொரப்பான தாவரம். இலைகள் நீள் வட்டம் அல்லது முட்டை வடிவமானவை. மெழுகு பூசினாற் போன்றவை. மலர்கள் சிறியவை.

இந்தியா முழுவதும் பரவலாக சமவெளிகள் கடற்கரையோரங்கள், தரிசு நிலங்கள், பாழ் நிலங்கள், ஆற்றுப் படுகைகளில் களைச் செடியாக காணப்படும். பயிர் செய்யப்பட்ட நிலங்களில் அறுவடைக்கு பின்னர் அபரிதமாக வளரும்.

இதற்கு பெரியசெருப்படை, பெருஞ்செருப்படை போன்ற பெயர்களும் உண்டு. முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

சிரங்கு கட்டுபட செருப்படைச் சாறு, வெள்ளை வெங்காயச் சாறு ஆகியவை வகைக்கு 30 மிலி உடன் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து வடிகட்டி காலையில் மட்டும் குடிக்க வேண்டும். 4 நாள்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.

வெள்ளைப்படுதல், சிறு நீர் எரிச்சல் ஆகியவை குணமாக செருப்படை முழுத் தாவரத்தையும் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு 20கிராம் அளவு நசுக்கி 4 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு 30 மிலி அளவாக தேவையான அளவில் பனை வெல்லம் சேர்த்து தினமும் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும்.

நாவறட்சி, விக்கல் ஆகியவை தீர செருப்படை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக சுட்டு அவற்றின் சாம்பலைச் சம அளவாக ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மணிக்கு ஒரு முறை நாக்கில் தடவ வேண்டும்

அமிர்த சஞ்சீவி

அமிர்த சஞ்சீவி மூலிகை 

ஜலதோஷம் பிடித்தால் கற்பூரவல்லி சாப்பிடு

விஷ ஜுரம் வந்தால் நிலவேம்பு கசாயம் சாப்பிடு 

மூலம் வந்தால் நத்தை சூரணம் சாப்பிடு 

    என்று ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்தாக தேடி கண்டுபிடித்து அதை அருந்தி குணமடைவதற்குள் வராத சலிப்பு வந்துவிடுகிறது. தனித்தனி நோய்க்கு தனித்தனி மருந்து என்று இல்லாமல் ஒரே மருந்தே எல்லா நோய்களையும் குணப்படுத்துவதாக இருந்தால் எப்படி இருக்கும்? இது கற்பனையில் வந்த ஆசையல்ல நிஜமாகவே தோன்றிய கேள்வி. 

நமது சித்தர்கள் தெய்வீகமான பல மருந்துகளை கண்டறிந்து விளக்கமாக நமக்கு சொல்லியிருகிறார்கள் அதிசயமான இரகசியமான சில மூலிகைகளை வைத்து பல நோய்களை ஒரே மருந்தில் குணப்படுத்தும் வித்தைகளையும் அவர்கள் விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

 ''அவற்றில் முக்கியமானது சஞ்சீவி மூலிகை ''

இது மரணமடைந்த மனிதனை கூட எழுப்பி உட்காரவைத்துவிடும் என்று சொல்கிறார்கள். இராமாயணத்தில் லஷ்மணன் உட்பட வானர வீரர்கள் அனைவரும் மறித்து போனபோது இமயமலைக்கு சென்ற அனுமன் கொண்டுவந்தது இந்த சஞ்சீவி மூலிகை தான்.

அனுமன் மலையை தூக்கிவரும் போது மலையிலிருந்த மூலிகை செடிகள் பலவும் நிலப்பரப்பில் விழுந்து முளைத்து எழுந்தன. எனவே சஞ்சீவி மூலிகை என்பது சஞ்சீவி மலையில் மட்டுமில்லை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களிலும் அந்த மூலிகை இருக்கிறது. ஆனால் அதன் இருப்பு இரகசியமாக தெய்வீகமாக இருக்கிறது. எனவே அது பலரின் கைகளில் கிடைக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக உண்டு. 

தெய்வீக அருள்பெற்றவர்கள், தவத்தில் சிறந்தவர்கள் போன்ற புனிதர்களிடம் இத்தகைய மருந்துகள் இன்றும் இருந்து வருகிறது. ஆனால் அவைகள் அபூர்வமாகவே மக்களுக்கு தெரியவருகிறது. நமது குருஜியிடம் மிகவும் அரிதான நவபாசனம் ஒன்றை சித்தர்கள் பரிசாக கொடுத்ததை வாசகர்கள் அறிவார்கள். அதே போன்று இன்னும் அரிதான மூலிகை ஒன்றினையும் குருஜி பெற்றிருக்கிறார் அந்த அபூர்வ மூலிகையின் சாரம்சத்தை கொண்டு அனைத்து நோய்களையும் நீக்க கூடிய மருந்து ஒன்றை தயாரித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார். 

இதை உண்ட உடன் மாயஜாலம் போல எல்லா நோய்களும் ஓடிவிடும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நோய்களை வராமல் தடுக்கும் சக்தி நமது உடம்பிற்கு உண்டு. ஆனால் அந்த சக்தி பல இயற்கை மாறுபாடுகளால் சில நேரம் வேலை செய்யாமல் போகும் போது தான் நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்த மூலிகை மருந்து நமது உடம்பில் ஊறி நோய் எதிர்ப்பு சக்தியை மிக அதிகமாக உற்பத்தி செய்து துரிதமாக வேலை செய்யவும் வைக்கிறது. சுருக்கமாக சொல்வது என்றால் உடம்பில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து புதிய நோயை வரவிடாமல் தடுக்கிறது. பழைய நோயை வளரவிடாமல் கட்டுப்படுத்துகிறது.



அமிர்த சஞ்சீவி என்பது இந்த மருந்தின் பெயர் இதை அருந்த பத்தியமில்லை, வயது தடையில்லை தினசரி காலையில் ஒரு தேக்கரண்டியளவு சுத்தமான குடிநீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வந்தால் போதும் தானாக உடம்பில் வனப்பும்,மினுமினுப்பும்,சுறுசுறுப்பும் கூடுவதை அறிவீர்கள். இதுவே நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் உடம்பில் இருப்பதற்கு சரியான ஆதாரமாகும். 

எனக்கு தீராத தலைவலி, வயிற்றுவலி இருக்கிறது, சர்க்கரை நோய் இருக்கிறது அதற்கு இந்த மருந்தை பயன்படுத்தலாமா என்று கேள்வி கேட்பது இயற்கை. இது குறிப்பிட்ட ஒரே நோய்க்கான மருந்து அல்ல சகலவிதமான நோய்க்கும் ஒரே மருந்தாகும். உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் அது எத்தனை காலம் நீண்டதாக இருந்தாலும் அமிர்த சஞ்சீவி மருந்தை பயன்படுத்தலாம்.    கண்டிப்பாக நல்ல பயன் கிடைக்குமென்று உறுதி தரமுடியும். 

எனக்கு நோயே இல்லை நான் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறேன்.நான் அமிர்த சஞ்சீவியை பயன்படுத்தலாமா என்று கேட்டால் கண்டிப்பாக பயன்படுத்தலாம் என்ற பதிலை தரவேண்டும். காரணம் இன்றைய உணவுமுறை உணவு பொருட்கள் இயற்கையாக இல்லை ஏதாவது ஒருவகையில் இரசாயனம் கலந்த உணவுகளை நாம் சாப்பிடவேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே ஆரோக்கியமான சூழலிலும் அமிர்த சஞ்சீவி மருந்தை பயன்படுத்தலாம் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்

இயற்கை

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

முகச்சுருக்கம் : முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவிவர மறைந்துவிடும்.

முகம் அழகுபெற : துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டு குளித்துவரவும்.

உடல் மினுமினுக்க : நீல புஷ்ப தைலம் தேய்த்துக் குளித்துவர உடல் குளிர்ச்சி பெறும். உடம்பும் மினுமினுப்படையும்.

உடல் உஷ்ணத்தைக் குறைக்க : மல்லிகைப்பூவை அதிகமாக பயன்படுத்தக்கூடாது.

முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர : கருவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர பயன் விரைவில்.

கண்கள் குளிர்ச்சியடைய : வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்.

படர்தாமரை நீங்க : சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி, ஊறிய பின் கழுவினால் விரைவில் குணமுண்டாகும். 

வழுக்கை மறைந்து முடிவளர : அல்லி இதழ்களை சந்தனத்துடன் அரைத்து வழுக்கைக்கு தடவி 2 மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும்.

நரைமுடி கருப்பாக : தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

முடி உதிர்வது நிற்க : காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர விரைவில் குணமாகும்.

கூந்தல் மிருதுவாக : சீத்தாப்பழக் கொட்டையை காய வைத்துப் பொடியாக்கி சீயக்காய்த் தூளுடன் கலந்து தேய்த்துக் குளிக்கவும்

பூசணிக்காய்

தாது விருத்தி தரும் பூசணிக்காய் லேகியம்!



அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் பூசணிக்கு முக்கிய இடமுண்டு. சாம்பார், பச்சடி, கூட்டு என பல விதமாக சமைக்கப்படும் பூசணிக்காய் இனிப்பு நிறைந்தது. இதில் நீர்ச்சத்தும், உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகம் காணப்படுகின்றன. உடல் சூட்டை தணிக்கும் இக்காய் சிறுநீர் வியாதிகளை தீர்க்கும் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மெக்ஸிகோ நாட்டில் பூசணி விதையில் இருந்து மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

பூசணிக்காயில் மஞ்சள் நிறமுள்ள கல்யாண பூசணியும், வெண்மை நிறமுள்ள பூசணியும் காணப்படுகிறது. பூசணிக்காயின் சதைப் பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.

பெண்களுக்கு ஏற்ற வெண் பூசணி

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும். பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்

கொடிய நோய்களுக்கு மருந்து

வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப் புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

உடல் வலி நீக்கும்

ஆண்டுக்கணக்கில் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

பூசணிக்காயின் சதைப் பகுதியை எடுத்து வேகவைத்து சிறிது கற்கண்டு சேர்த்து தினம் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

எழில் கூட்டும் பூசணி

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும். நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

தாது விருத்தி தரும்

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீரக நோய்கள்

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காய் லேகியம்

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பூசணி லேகியம் காமாலை நோய், இரத்த சோகை, எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்படும். உடல் பொலிவுறும்.

யார் சாப்பிடக்கூடாது

பூசாணிக்காயை அதிகம் சாப்பிட்டால் பித்தத்தை கிளறி நெஞ்செறிச்சலை ஏற்படுத்தும். வயிற்றில் புளிப்பு ஏற்பட்டு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இக்காயை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்பட்டு விடும்

Wednesday, 23 May 2018

லேகியம்


சித்த மருத்துவத்தில் சித்தர்களால் சொல்லப்பட்ட லேகிய வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லேகியமும் வெவ்வேறு வித்தமான நேய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. லேகியங்கள் அனைத்துமே பல விதமான மூலிகை கலவையே, மூலிகை செடிகளை நிழல் புடமாக உலர வைத்து மிகவும் மிருதுவான பொடியாக்கி கருப்பட்டி, நெய், அல்லது சுத்தமான கொம்பு தேன், மலைத்தேன் அடுக்கு தேன் என நேய்களுக்கு ஏற்றவாறு சேர்த்து பசை பேன்ற தன்மையில் சித்தர்கள் செய்து கொடுத்துள்ளனர். இவ் வழியே இன்றும் நம் சித்த மருத்துவர்கள் செய்து நோயினை குணப்படுத்தி வருகின்றனர். லேகியங்கள் இனிப்பு, கார்ப்பு, துவர்ப்பு மற்றும், கசப்பு சுவையுடையவை. 

ராஜமார்த்தாண்ட லேகியம்

கூழ்பாண்ட லேகியம்

ராஜ சிந்தாதி லேகியம்

தூதுளை லேகியம்

அமிர்த சஞ்சீவி லேகியம்

தஸ்ணா மூர்த்தி லேகியம்

வச்சிர வல்லி லேகியம்

அருணாசல லேகியம்

தாது புஷ்டி லேகியம்

கந்த லேகியம்

பூர்ணாதி லேகியம்

பூரண சந்திரோதய லேகியம்

கதலி லேகியம்

கண்டத் திப்பிலி லேகியம்

இஞ்சி லேகியம்

குன்மகுடோரி லேகியம்

வெண்பூசணி லேகியம்

தாது விருத்தி லேகியம்

கடுக்காய் லேகியம்

ஆவாரை லேகியம்

அசுவகெந்தி லேகியம்

பறங்கிசக்கை லேகியம்

கண் நோய் லேகியம்

குணஜோதி லேகியம்

நரசிம்ம லேகியம்

கருனை கிழங்கு லேகியம் 

பஞ்ச தீபாக்கினி லேகியம்

சீந்தில் கொடி லேகியம்

சண்ட மாருத லேகியம்

கெந்தக லேகியம்

மகா மதன காமேஸ்வர லேகியம்

சதாவேரி லேகியம்

தாது கல்ப லேகியம்

தாது வலு லேகியம்

கசகசா லேகியம்

வல்லாரை லேகியம்

மூதான்ட லேகியம்

சித்தர் வல்லாதி லேகியம்

குமரி லேகியம்

காமரூபி லேகியம்

சிட்டு குருவி லேகியம்

பிரசவ லேகியம்

சாதிக்காய் லேகியம்

சியவனப்ராச லேகியம்

சேங்கொட்டை லேகியம் 

கரிசாலை லேகியம்

லபூக்கபீர் லேகியம்

உடும்பு லேகியம்

மன்மத லேகியம்

வீரிய விருத்தி லேகியம்

விந்து ஊற லேகியம்

ஆண்மை விருத்தி லேகியம்

மது மேக லேகியம்

பீம புஷ்டி லேகியம்

காயகல்பம் லேகியம்

நெல்லி லேகியம்

சுக்கு லேகியம்

கொடுக்கப்பட்டுள்ள  லேகியங்கள் பல சித்தர்களால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இவைகள் இல்லாமல் மேலும் சில இருக்காலாம். இது தவிர பாரம்பரிய மருத்துவர்கள் சிலவகை லேகியங்களை தயார் செய்து கொடுக்கின்றனர் அதுவும் நல்ல பலன்களை கொடுக்கும் தன்மையுடையதாக உள்ளது.  

லேகியங்கள் செய்யும் போது தேவையான மூலிகை செடிகள் தேர்ந்தெடுத்து அவைகளை முறைபடி சுத்தி செய்து, உலர்த்தி, வறுக்க வேண்டிய மூலிகைகளை இளஞ்சூட்டில் வறுத்தும் செய்ய வேண்டும். கடைகளில் கிடைக்கும் மூலிகை சூரணம் மற்றும் பொடிகளில் குற்றம் இருக்கலாம்

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்: உடலினை உறுதிசெய்வோம்!

   



குழந்தைகளே, யோகாவில் முதல் நிலை என்ன தெரியுமா? சூரிய நமஸ்காரம். உடலை வளைத்துச் செய்யும் யோகாசனத்தையும் மூச்சை ஒழுங்குபடுத்தும் பிராணாயாமத்தையும் ஒருங்கிணைத்துச் செய்வதுதான் சூரிய நமஸ்காரம். ஒரே ஒருமுறை சூரிய நமஸ்காரம் செய்வதன்மூலம் 8 வகையான ஆசனங்களை செய்துவிடலாம். அந்த 8 ஆசனங்கள் என்னென்ன? சூரிய நமஸ்காரம் எப்படி செய்வது எனப் பார்ப்போமா?

முதலில் வழுக்காத தரை விரிப்பின் மீது நின்று யோகாசனங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அதுபோன்ற தரைவிரிப்பில், சூரியனைப் பார்த்தவாறு நிமிர்ந்து நேராக நில்லுங்கள். மார்புக்கு நேராக வைத்து கைகளைக் கூப்பிக்கொள்ளுங்கள். இதுதான் சூரிய நமஸ்காரத்துக்குத் தயாராவதற்கான நிலை.

இனி, 12 நிலைகள்:

1. ஊர்த்துவாசனம்

மூச்சை உள்ளிழுத்தவாறு, இரு கைகளையும் கூப்பியபடி தலைக்கு மேல் நன்கு உயர்த்துங்கள். தோள்கள் காதை ஒட்டி இருக்கட்டும். மேலே உயர்த்தப்பட்டிருக்கும் கைகளை நிமிர்ந்து பாருங்கள். முதுகை சற்று பின்னோக்கி வளையுங்கள்.

2. பாத ஹஸ்தாசனம்

மூச்சை வெளியே விட்டபடியே, உயர்த்திய கைகளை மெதுவாக இறக்கி, குனிந்து, நமது கால் விரல்களைத் தொட முயற்சியுங்கள். முதுகு கூன்போடாமல், இடுப்பிலிருந்து வளைக்க முயற்சியுங்கள்.

3. அஸ்வ சஞ்சலாசனம்

இரு கைகளையும் கால்களுக்கு இணையாக பக்கவாட்டில் வெளிப்பக்கமாக வையுங்கள். மூச்சை உள்ளிழுத்தவாறு, இடது காலை மட்டும் பின்னோக்கி நீட்டுங்கள். வலது கால் குத்துக்காலிட்டபடி இருக்கும். பார்வை முன்வானத்தை நோக்கி இருக்கட்டும்.

4. சதுரங்க தண்டாசனம்

மூச்சை வெளியே விட்டபடியே, குத்துக்காலிட்ட வலது காலையும், பின்னால் நீட்டியிருக்கிற இடதுகாலுக்குச் சமமாக பின்னோக்கி கொண்டுசெல்லுங்கள். இப்போது இரு கைகள், இரு கால்களில் உடலின் எடை முழுவதும் சீராகப் பரவும்.

5. சசாங்காசனம்

அப்படியே முழங்கால்களைத் தரையில் பதித்து, மடித்து, அதன் மீது உட்காருங்கள். முதுகை வளைத்து, நெற்றியைத் தரையில் பதியுங்கள். கைகள் தரையில் நன்கு நீட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுங்கள்.

6. அஷ்டாங்க நமஸ்காரம்

மெதுவாக மூச்சை வெளியே விட்டபடியே குப்புறப் படுங்கள். இந்த நிலையில் கால்கள், முழங்கால்கள், கைகள், மார்புப் பகுதி, தாடை ஆகிய 8 அங்கங்கள் மட்டுமே தரையில் பதிந்திருக்கும். வயிற்றுப் பகுதியை தரையில் படாதவாறு உயர்த்திக்கொள்ளுங்கள்.

7. புஜங்காசனம்

மூச்சை உள்ளே இழுத்தபடி, கைகளைத் தரையில் ஊன்றியவாறே தலை, கழுத்து, மார்புப் பகுதி, மேல் வயிறு வரையிலான பகுதிகளை மேல்நோக்கி உயர்த்துங்கள். வயிற்றுக்குக் கீழ் உள்ள பகுதிகள் அனைத்தும் தரையில் பதிந்திருக்க வேண்டும்.

8. பர்வதாசனம்

மூச்சை வெளியே விட்டபடியே, தலைப் பகுதியை தாழ்த்தி, முதுகுப் பகுதியை உயர்த்த வேண்டும். உள்ளங்கால் முழுவதும் தரையில் பதிந்திருக்கட்டும். பார்வை நம் அடிவயிற்றை நோக்கி இருக்கும்.

9. சசாங்காசனம்

5-வது நிலையில் பார்த்ததுபோலவே, மீண்டும் முழங்கால்களைத் தரையில் பதித்து, மடித்து, அதன் மீது உட்காருங்கள். முதுகை வளைத்து, நெற்றியை தரையில் பதியுங்கள். கைகள் தரையில் நன்கு நீட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடுங்கள்.

10. அஸ்வ சஞ்சலாசனம்

மூச்சை உள்ளே இழுத்தவாறே கைகள், முழங்கால்களை நன்றாக ஊன்றிய நிலையில் மெதுவாக எழுந்து, இடது காலை மட்டும் கைகளுக்கு இணையாக முன்னோக்கி கொண்டுசெல்லுங்கள். பார்வை முன்வானத்தை நோக்கி இருக்க வேண்டும்.

11. பாத ஹஸ்தாசனம்

மூச்சை வெளியே விட்டபடியே, பின்னால் நீட்டப்பட்டுள்ள வலது காலையும் முன்னோக்கி கொண்டுவரவும். இப்போது இரு கைகளாலும் நமது கால் விரல்களைத் தொடுங்கள்.

12. மூச்சை உள்ளே இழுத்தவாறே, நேராக நிமிர்ந்து நில்லுங்கள். மார்புக்கு நேராக வைத்து கைகளைக் கூப்பிக்கொள்ளுங்கள்.

இந்த 12 நிலைகளையும் தொடர்ச்சியாக செய்து முடிப்பது ஒரு சூரிய நமஸ்காரம். விளக்கம்தான் பெரிதாக இருக்கிறதே தவிர, இதை முறையாகப் பயின்றால், ஒரே நிமிடம் போதும்!

இதுபோல குறைந்தபட்சம் 12 சூரிய நமஸ்காரங்கள் செய்யலாம். 24, 48 என்று அதிக எண்ணிக்கையில்கூட செய்யலாம். ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்துக்கும் இடையே ஒருமுறை நன்கு சுவாசத்தை இழுத்துக்கொண்டால், களைப்பின்றி தொடர்ந்து செய்ய முடியும்.

3, 10-வது நிலைகளில் இடதுகாலைப் பின்னோக்கி கொண்டுசென்று, பிறகு முன்னோக்கி கொண்டு செல்வதாகப் பார்த்திருப்போம். மொத்தம் 12 முறை சூரிய நமஸ்காரங்கள் செய்வதானால், இதுபோல 3, 10-வது நிலைகளில் இடதுகாலைப் பயன்படுத்தி 6 முறையும் வலதுகாலைப் பயன்படுத்தி 6 முறையும் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரம், யோகாசனங்கள், பிராணாமாயப் பயிற்சிகளை பயிற்சியாளர்களின் நேரடிப் பார்வையில் செய்வது இன்னும் சிறப்பு!

என்னென்ன செய்யக் கூடாது

* சூரியன் இருக்கும் திசையை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். கண்ணைக் கூசுகிற, சுட்டெரிக்கிற நேரத்தில் செய்யக் கூடாது. மிதமான வெளிச்சம் இருக்கிற அதிகாலை நேரம், சூரியன் மறைகிற மாலை நேரம் நல்லது.

* 5, 9-வது நிலைகளில் வருகிற சசாங்காசனத்தை தவிர்த்து 10 நிலைகளிலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

* கை, கால்களை நீட்டுவது, மடிப்பது, உடலை வளைப்பது, விலங்குகள், பறவைகள், பொருட்களை உணர்த்துவது போன்றவற்றின் அடிப்படையில்தான் ஆசனங்களுக்கு பெயரிடப்படுகின்றன. சிலவகை ஆசனங்களை வெவ்வேறு பயிற்சிப் பள்ளிகள் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுவது உண்டு. பெயர்தான் வித்தியாசப்படுமே தவிர, பயிலும் முறையும் அதனால் கிடைக்கும் பலன்களும் ஒன்றுதான்.

* டீ, காபி போன்ற பானங்கள் அருந்தியிருந்தால் 20, 30 நிமிடங்களுக்குப் பிறகும், டிபன் போன்ற எளிய உணவு சாப்பிட்டிருந்தால் 2 மணிநேரத்துக்குப் பிறகும், முழு உணவு சாப்பிட்டிருந்தால் 4 மணி நேரத்துக்குப் பிறகும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். வயிறு காலியாக இருப்பது அவசியம். சூரிய நமஸ்காரத்துக்கு நடுவிலோ, செய்து முடித்த உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. செய்து முடித்த சிறிது நேரத்துக்குப் பிறகு அருந்தலாம். சுமார் 1 மணி நேர இடைவெளிக்குப் பிறகு குளிக்கலாம்.

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...