Friday, 28 September 2018

துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள்  விலகும்.ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க - கவலைகள் வற்றும்கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க  - சப்த கன்னியர் தரிசனம்.ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க - அரிய பேறுகள் கிடைக்கும்.ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும்  சிறக்கும். ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரிய பூமிகள் கொடுக்கும்.சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி. சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்."சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்."மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்."வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்."சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்."கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்."ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்வாமதேவ மந்திரம்"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்."வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்."சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்."ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.சத்யோசாத மந்திரங்கள்"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்."ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்."கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்ஈசான மந்திரங்கள்"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்."மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்."வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்."சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்."மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

Monday, 10 September 2018

மருத்துவம்

நம் முன்னோர்கள் தந்த பாட்டில் இவ்வளவு மருத்துவ தகவல்கள் கேக்கும் போதே அனந்தம்..
எல்லா நோய்க்கும் பதில் தரும் ஆச்சரியத்தை பாருங்க!!🌳

ஆங்கில மருத்துவம் வந்ததற்குப் பின் நமது இயற்கை மருத்துவத்தை மிக சாதரணமாக எடைப் போட்டு விட்டோம். . ஆனால் இப்போது வந்துள்ள நவீன மருத்துவத்திற்கு முன்னோடி நமது சித்தர்களும், பாரம்பரிய மருத்துவர்களும்தான். எந்த வித தொழில் நுட்பம் இல்லாமலேயே பல நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடித்து குணமாக்கியவர்கள். தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம் செல் புற்று நோய் முதல் பல மோசமான நோய்களைத் தீர்க்கும் என மிகச் சமீபமாகத்தான் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே தொப்புள் கொடியை பத்திரப்படுத்தி நோய்களுக்கு மருந்தாக்கினர். காலப்போக்கில் அது மருவி வெறும் தொப்புள் கொடியை தாயத்து கட்டி கயிற்றில் கட்டும் சடங்காக மட்டும் இது மாறிப்போனது.

சித்தர்கள் நோய்கள் தீர பல ஆயிரம் மருத்துவப் பாடல்களை எழுதி வைத்துள்ளனர். அதில் மிகச் சில ஆயிர ஓலைச் சுவடிகளே நமக்கு கிடைத்துள்ளது.

எல்லாமே அபூர்வ மருத்துவக் குறிப்புகள். இவை ஒவ்வொன்றும் நம் பிணியைத் தீர்ப்பவை.

மிகவும் சக்தி வாய்ந்த குறிப்புகளை நமக்கு சித்தர்கள் அளித்துவிட்டுதான் சென்றுள்ளனர். நாம்தான் அவற்றை உதாசீனப்படுத்தி விட்டுகிறோம். அருந் தமிழ் மருத்துவம் 500 என்ற மருத்துவ குறிப்பேட்டில் உள்ள பாடல் ஒன்றுதான் இங்கே கீழே உள்ளது.

இதில் எந்த உறுப்புக்கு எந்த மூலிகை நல்லது என உணர்த்தும் படி ரெண்டு ரெண்டு வார்த்தையில் மிக அருமையாக புரியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. படித்து நீங்களும் பயன்பெறுங்கள். இந்த பாடல் உங்களுக்கு வீட்டிலேயே சின்ன சின்ன பிரச்சனைகளை சீர் படுத்த உதவும்.🌳

🌳மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

🌳பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

🌳கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

🌳நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

🌳முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

🌳உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

🌳கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

🌳விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

🌳கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

🌳நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

🌳தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

🌳குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

🌳கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

🌳வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

🌳கால்வெடிப்பா மருதாணி கிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

🌳உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

🌳அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!.

எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? இதை விடச் சிறப்பாக மருத்துவத்தை இப்படி பாடலாக யாராலும் எந்த மருத்துவத்தாலும் விளக்கி விட முடியாது.

நவீன மருத்துவம் என்பது நோய் வந்த பின் காப்பதற்கு மட்டும்தான். ஆனால் இயற்கை மூலிகைகள் நோய் வராமலேயே காப்பதற்கு.

//அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை//

உடலில் நோய் வந்தால் கட்டாயம் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் தான். ஆனால் இப்படி சிறு சிறு நோய்க்கெல்லாம் தொட்டதெற்கெல்லாம் அலோபதி மருந்துகளை சாப்பிட்டு உடலை நஞ்சாக்க வேண்டாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நல்ல மன நலத்தை தரும். நல்ல மன நலம் நல்ல குடும்பத்தை உருவாக்கும். நல்ல குடும்பம் ஒரு நல்ல சமுதாயத்தை ஏற்படுத்தும்.🐝

ஆகவே நலமோடும் அன்போடும் வாழுங்கள்!

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...