பலம் தரும் பலாக்கொட்டை.
பலம் தரும் பலாக்கொட்டை.
நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும்.
அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது.
இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை.
இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.
பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து,
வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.
பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.
குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!
இனிமையான உறவுக்கு இலுப்பை பூ.
இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.
குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! இனிமையான உறவுக்கு இலுப்பை பூ. இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.
ஆயுர்வேத மூலிகைகள்
ஆண்மைக் குறைபாடுகள், பெண்களின் குறைபாடுகள், குழந்தையின்மை இவற்றுக்கான பலனளிக்கும் அற்புத சிகிச்சைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. (பார்க்க – வாஜீகர்ணம்). பக்க விளைவில்லாமல் இயற்கையோடு ஒன்றிய சிகிச்சையை நீங்கள் பெறலாம். ஆயுர்வேதம் பயன்படுத்தும் சில மூலிகைகள்.
1. விந்துவின் எண்ணிக்கையையும், தரத்தையும் உயர்த்த:- இந்தப்பிரிவில் உள்ள மூலிகைகள் விந்தணுக்கள் இறப்பதை குறைத்து, விந்து விருத்தியாக உதவுகின்றன. விந்தணுக்களின் நடமாட்டத்தை அதிகரிக்கின்றன.
உதாரணம்:- வெள்ளை முஸ்லி (White Musli).
2. விறைப்புத்தன்மையை உண்டாக்க:- அஸ்வகந்தா, முஸ்லி போன்றவை
3. விந்து முந்துதல்:- இந்த மூலிகைகள் விந்து சீக்கிரம் வெளியேறுவதை தடுத்து, உடலுறவின் இன்பத்தை நீடிக்கின்றன. ஜாதிக்காய், அக்கிரகாரம் (AnacyclusPyrethrum) போன்ற மூலிகைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
4. அதீத செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த:- கர்ப்பூரம், சர்பகந்தா போன்றவை நரம்புகளை சமனப்படுத்தும். ஆசையை குறைக்கும்.
ஆயுர்வேதம் பயன்படுத்தும் மூலிகைகள்:
1. அமுக்கிராக்கிழங்கு எனும் அஸ்வகந்தா:- பழங்காலத்திலிருந்தே அஸ்வகந்தா (Withania Somnifera) செக்ஸ் குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வத்ஸ்யானரின் “காம சூத்திரத்தில்” குறிப்பிட்ட மூலிகை. அஸ்வகந்தா இருவழியில் செயல்படுகிறது. மனதை அமைதியாக, சாந்தமாக வைக்க உதவுகிறது. பாலுணர்வு ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு வலிமை ஊட்டுகிறது. இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைட், ரத்த நாளங்களை விரியச் செய்து அதிக ரத்தம் பாய உதவுகிறது.
ஆயுர்வேத சிறப்பு சிகிச்சைகளான “ரசாயனம்”, “வாஜீகர்ணம்” இவற்றில், அஸ்வகந்தா உடல், மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உபயோகமாகிறது. தவிர உடலின் நோய் தடுப்பு சக்தியையும் விருத்தி செய்கிறது. செக்ஸ் குறைபாடுகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்துகளில் அஸ்வகந்தா ஒரு முக்கிய மூலிகை. ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரோன்”போன்ற செயல்பாடுகளுடையது. சுற்றுப்புற சூழலின் மாசுகளிலிருந்து பாதுகாத்து இளமை தொடர உதவுகிறது. அஸ்வகந்தா, இந்திய “கின்ஸெங்” (Ginseng) எனப்படுகிறது.
“கொஞ்சந் துவர்ப்பான் கொடியகயம் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்ப தப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம்அன லுண்டாம்
அசுவகந் திககென் றறி”.
என்கிறது ஒரு சித்தர்பாடல்
அமுக்கிராக் கிழங்குப் பொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி ஆகிய இவைகள் நீங்கும்; உடல் வன்மை பெறும்; அழகு தரும்.
2. பூனைக்காலி – (Mucuna Pruriens-காபிக்காட்சு) விந்துவின் தரம், உடலுறவுக்கான வலிமை, உடலுறவில் இச்சை இவையெல்லாம் அதிகரிக்க செய்யும். நரம்புக்கோளாறுகளை குறைக்கும். ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களின் பாலியல் பிரச்சனைகளையும் தீர்க்கும் மூலிகை. ஆண்களின் விறைப்புத்தன்மை இழப்பை மீட்டுத்தரும்.
3. சதவாரி – தண்ணீர்விட்டான் கிழங்கு (Asparagus Racemosus) வடமொழியில் சதவாரி என்றால் ’100 கணவர்கள் உடையவள்’ என்று பொருள். பெண்களுக்கேற்ற ஸ்பெஷல் ‘டானிக்’ மலட்டுத்தன்மை மட்டுப்படித்தி உடலுறவுக்கேற்ற ஆற்றலை தரும். பெண்களுக்கே உரிய மாதவிடாய் கோளாறுகளுக்கு அருமருந்து. பூப்பெய்திய பருவத்திலிருந்து மெனோபாஸ் வரை உபயோகிக்கலாம். ரத்த விருத்தியை உண்டாக்கும். சாதாரணமாக பூனை காலியுடன் சேர்ந்து கொடுக்க, விந்துவின் தரம் உயரும்.
4. கற்றாழை – (Aloevera) தமிழில் கற்றாழையின் இன்னொரு பெயர் ‘குமரி’. குமரி போன்ற இளமையை கொடுக்கும். தினமும் ஒரு மேஜைக்கரண்டி கற்றாழை சாறு குடித்து வந்தால் இளமையாக இருக்கலாம்.
5. நெருஞ்சில் – (கோக்சுரா – Tribulus Terrestris) இது உடலுறவுக்கு ஆவலை அதிகரிக்கும். ஆண் ஹார்மோனை அதிகரிப்பதால், சீனா, இந்திய வைத்திய முறைகளில் முக்கிய மருந்து. பெண்களில் ப்ரோலாக்டின் (Prolactin) லெவலை குறைக்கிறது. ப்ரோலேக்டின் அளவு அதிகமானால் பெண்களின் உடலுறவு ஆசை குறையும். பெண்களின் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சை மருந்து.
6. அதிமதுரம் – (Licorice root) மூலிகை கலவைகளில் சரிசமநிலையை உண்டாக்கும். அதிமதுரம் அட்ரீனலின் சுரப்பியை ஊக்குவிக்கும். பாலியல் செயல்பாடுகளுக்கு அட்ரீனலின் ஒரு முக்கியமான சுரப்பி. நேரடியாக செக்ஸ் உணர்வுகளை ‘கன்ட்ரோல்’ செய்கிறது. அட்ரீனலின் குறைந்தால் ஆசையும் குறையும். சக்தியில்லாமல் போகும். உடலுறவு ஆர்வமும் குறையும்.
7. சிலாஜித் – (Asphalt) இமயமலை, விந்திய மலை, நேபால் இவற்றில் பாறையிலிருந்து வெளிவரும் தார் போன்ற ஒரு பொருள். மண்ணில் மக்கிப்போன தாவரங்களின் மூலம் கூட சிலாஜித் உண்டாகியிருக்கலாம். நாலு வகை சிலாஜித் குறிப்பிடப்படுகிறது. தங்க சிலாஜித் (சிகப்பு நிறம்), வெள்ளி சிலாஜித் (வெள்ளை நிறம்), செம்பு சிலாஜித் (நீல நிறம்), இரும்பு சிலாஜித் (பழுப்பு நிறம்) அதிமாக கிடைப்பது இரும்பு சிலாஜித்தான். மற்றவை அபூர்வம். “குணம் காணும் வியாதிகளில், சிலாஜித் குணப்படுத்த முடியாத வியாதி எதுவுமில்லை” என்கிறார் சரகர். செக்ஸ் குறைபாடுகளில் சிலாஜித், அஸ்வகந்தாவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கு சிலாஜித் சிறந்த மருந்து.
8. வெள்ளை முஸ்லி – (சஃபேத் முஸ்லி, Chlorophytum Arundinaceum / Borivilianum) – நூற்றுக்கணக்கான ஆயுர்வேத, யுனானி, அலோபதி, ஹோமியோபதி மருந்துகளில் சேர்க்கப்படும் மூலிகை வெள்ளை முஸ்லி. ஆயுர்வேத “ச்யவன பிராசம்” – இளமையை தக்க வைக்கும் மருந்தில் வெண் முஸ்லி ஒரு முக்கிய பகுதிப் பொருள். பிரபலமான “வயாகரா” வுக்கு மாற்று மருந்தாக முஸ்லி சொல்லப்படுகிறது. ஆண்களின் குறைபாடுகளில் முக்கியமான பிறவி உறுப்பு, விறைப்பு இல்லாமல் போவதை குணப்படுத்தும்.
9. சோப்சினி – (Chopachini – Smilax China) – இந்த மூலிகையை சைனா தேசத்தில் அதிகம் பயிரிடுவதால் இந்த பெயர் வந்தது. இது “சுய இன்பம்” காணும் பழக்கத்தை குறைக்க உதவும்.
10. திப்பிலி – (Piper longum) – இது ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை பலப்படுத்தும். சரகர், நீடித்த விறைப்புத் தன்மைக்கு சொல்லும் திப்பிலி மருந்து – 30 திப்பிலியின் உலர்ந்த பழங்களை பொடித்துக் கொள்ளவும். இதை 45 மி.லி. பசு நெய், 45 மி.லி. எள் எண்ணை கலவையில் வறுத்துக் கொள்ளவும். இதை பாத்திரத்திலிருந்து எடுக்க வேண்டாம். அதே பாத்திரத்தில் 45 கிராம் சர்க்கரை, 45 கிராம் தேனும் சேர்க்கவும். இதே பாத்திரத்தில், நேரடியாக, ஒரு ஆரோக்கியமான பசுவிலிருந்து பாலை கறந்து கொள்ளவும். இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கவும். பிறகு பசிக்கும் போது பிரத்யேக அரிசி, நெய் கலந்த சோறை உட்கொள்ளலாம்.
11. அக்கர காரம் – (Anacyclus Pyrethrum) – நரம்புகளை வலிவுபடுத்துவதால்,நரம்பு பலவீனத்தால் ஏற்படும் ஆண்மைக்குறைவு, தவிர விந்து முந்துதலுக்கு நல்ல மருந்து. இந்த மூலிகை அளவோடு உட்கொள்ள பயன் தரும். அதிகமானால் மரத்துப்போதல், எச்சில் ஒழுகுதல் போன்றவை உண்டாகலாம்.
12. சாலப் மிஸ்ரி – (Orchis Mascula) – இது இழந்த ஆரோக்கியத்தை, வீரியத்தை மீட்டுத் தரும். காதல் உணர்வை தூண்டும் மூலிகை.
13. பெரு நெரிஞ்சி - (Pendalium Murex) – இது ஆண்மைக்குறைவு, இரவில் ஸ்கலிதம் வெளியேறுதல் இவற்றை கட்டுப்படுத்தும். சிறந்த பாலுணர்வு ஊக்கி.
14. சமுத்திரபச்சை - (Argyreia Speciosa) – நரம்புகளின் நோயை குணமாக்கி வலிவூட்டுகிறது.
15. குங்குமப்பூ - (Saffron – Crocus Sativus) நறுமணமான, விலையுயர்ந்த மூலிகை. பாலியல் உணர்வுகளை தூண்டும்.
16. நிலதுத்தி - (Sidacordifolia) இதன் இலைகளை எந்த மாதிரி உட்கொண்டாலும் சரி, உடல் உஷ்ணத்தால் உண்டாகும் வியாதிகளை நிலதுத்தி எதிர்க்கும். இதன் பூக்கள் ஆண்மை சக்தியை அதிகரிக்கும். செடியின் சாறு இரவில் தன்னிச்சையாக வெளியேறும் ஸ்கலிதம் போன்ற குறைகளை குறைக்கும். நிலதுத்தி மனதையும் அமைதிப்படுத்துகிறது.
17. பூரணி - (Bombax Malabarium / Salmalia Malabarica) ஆண்மைக்குறைபாட்டுக்கு கொடுக்கப்படும் மருந்து. இந்த தாவரத்தின் விதைகள் ஆண்மைபெருக்கி. இலைகள் குளிர்ச்சி தரும், மரப்பட்டை நல்ல ‘டானிக்.’ வேர்கள் ஊக்குவிக்கும்.
18. எட்டி - (Strychnos nux vomica விஷம் நீக்கப்பட்டது) ‘செப்டிக்’ ஆவதை எதிர்க்கும். பலவீனத்தை போக்கும் டானிக். ஊக்குவிக்கும். நச்சுப் பொருட்களை முற்றிலும் நீக்கப்பட்டு, மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
19. ஜாதிக்காய், ஜாதிபத்திரி - (Myriastica fragrans) விந்து முந்துவதை தடுக்கும் மருந்தாக ஜாதிக்காய் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விழுதாக்கி பாலுடன் சேர்த்து குடிக்கப்படுகிறது. ஆனால் ஆயுர்வேத வைத்தியரின் கண்காணிப்பில் ஜாதிக்காயை பயன்படுத்த வேண்டும். அதிக அளவு மயக்கம், வாந்தி, திக்பிரம்மை, முதலியவற்றை உண்டாக்கும்.
20. காட்டுக்கஸ்தூரி - (Hibiscus ablemoschus) காதலுணர்வை தூண்டும். வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது.
சோற்றுக்கற்றாழை:
தாவரவியல் பெயர்: Aloe typica = Aloe deltoideodonta
சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை. நமக்கும் அழகுதரும் மூலிகை. சோற்றுக்கற்றாழை = சோறு + கற்றாழை. பஞ்சகாலங்களில் உணவாகப் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குமரி என்று சொல்லப்படும் சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பத்தை சாப்பிட்டு வருவதால் வியாதிகள் குணமாகும். சோற்றுக்கற்றாழை எனத் தமிழிலும் அலோவேரா(aloe vera) என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் அருமருந்து, பெருமருந்து, மானிடத்துக்கே அது ஒரு அரிய விருந்து.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின்
சில குறிப்பான அணுக்கூறுகள் உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில ரிசெப்டர்கள் (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகிறது. நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்திகரீக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.
மருத்துவக் குணங்கள்
1. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
2. உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3. கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
4. இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
5. கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்
6. காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பருக்காமலே.பலகீனம் மறையும் தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
7. சோற்றுக்கற்றாழை + வெள்ளைப்பூண்டு + பனங்கற்கண்டு + எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமான அளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும்.
8. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
9. வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.
10. இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
11. சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
12. சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பி
பெருங்காயத்தால் ஏற்படும் நன்மைகள் - benefits of asafoetida
பெருங்காயத்தால் ஏற்படும் உடல்நலன்கள்
பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படும்.
மேலும் பெருங்காயமானது தாளிக்கும் போதும், ஊறுகாய்க்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இப்போது பெருங்காயத்தால் ஏற்படும் சில உடல் நல நன்மைகளை பார்க்கலாமா?
செரிமானமின்மை
ஆதி காலத்திலிருந்து பெருங்காயம் செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே இது அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் இது பயன்படுவதால், செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால், செரிமான தொந்தரவுகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மாதவிடாய் பிரச்சனை
பெருங்காயத்தின் பயன்பாட்டினால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் வாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்ணுக்கு ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.
ஆண்மை குறைவு
சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.
சுவாச பிரச்சனை
சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.
சர்க்கரை நோய்
பெருங்காயம் கணையச்சிரை அணுக்களை அதிக இன்சுலின் சுரக்க வைப்பதால் அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.
உயர் இரத்த அழுத்தம்
பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
நரம்பு கோளாறுகள்
இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.
வலி
பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.
போதை வஸ்துவின் நச்சுமுறி
பெருங்காயம் மிகச்சிறந்த போதை வஸ்துக்களின் நச்சு முறிவாக செயல்படும்.
புற்று நோய்
பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும். ஆய்வின்படி இது ஒரு புற்றுஎதிர்ப்பியாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன.
சரும நோய்கள்
சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.