Monday, 10 December 2018

Varalaru

தமிழ்ச் சாதிகளின் வரலாறு
      
                                       தமிழர் வேந்தன் - தொல்காப்பியம் போற்றும் இந்திரன்  
              
               மனிதனின் தோற்றம் பற்றிய சர்ச்சைகளை விடுத்து மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, அறிவியல் ரீதியாக இயங்கியல் தத்துவத்தின்படி பகுத்தறியும்போது மட்டுமே சாதி பற்றிய இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.இயங்கியல் தத்துவத்தின்படி, ஆதியில்  மனிதன் மழை ,வெள்ளம் போன்றவைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக்
கொள்ள மலைகளிலேயே வாழ்ந்தான். மலைகளில் காட்டுவாசியாக இருந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்தான்.
கூட்டம் கூட்டமாக வாழ்ந்த அம்மக்கள்  குறிஞ்சி நில குறவன்-குறத்தி ( இன்றைய குறவன்-குறத்தியோடு மட்டும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. பல பழங்குடிகளும் குறவன் குறத்திகளே.) என அழைக்கப்ட்டனர். குகைகளில் வைத்து உண்ணப்படும் பொருட்கள் ( இறைச்சி, பழங்கள் ) நீண்ட நாள் மழை மற்றும் இயற்கை  சீற்றத்தின் போது கெட்டுப் போய் அவர்களை பலநாள் பசியில் ஆழ்த்தியது.நீண்ட நாள் மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அவன் குகையை விட்டு
வெளியல் வந்து வேட்டையிட முடியாமல் போனது.
                  இவ்வுணவுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாய்  ஒரு பெரும் கூட்டம் குறிஞ்சி நில  குறவன்-குறத்தியிலிருந்து பிரிந்து நிரந்தர உணவுத் தேவைக்காய் மலையை விட்டு கீழிறங்கி காடுகளில் இருப்பிடங்களை அமைக்கத் தொடங்கியது. அவன் உணவுக்காக விலங்குகளைப் பழக்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். அங்கு இயற்கையாய் விளைந்த தானியங்களையும் சேகரித்து உணவுத்தேவையைப் ஓரளவு பூர்த்தி செய்து கொண்டான். அம்மக்களே இடையர்/ஆயர் (கோனார்) என்றும் அந்நிலப் பகுதியே முல்லை எனவும் அழைக்கப்பட்டது.எனினும் பெரும் வெள்ளம், காட்டுத்தீ மற்றும் ஆண்டு முழுவதுக்குமான உணவுத்தேவை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் அவனை மீண்டும் ஆற்றங்கரை ஒட்டிய சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது.
                      
             மனிதன் ஆற்றங்கரைச் சமவெளிகளுக்கு இடம்பெயர்ந்த நிகழ்வுதான் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சின் அடுத்த கட்டமாகிப் போனது. பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் கண்டுபிடித்தது. அம்மக்களே பள்ளர்/மள்ளர் என அழைக்கப்பட்டனர். இந்நிலப்பரப்பே மருதம் என அழைக்கப்பட்டது.  மற்ற நிலப் பகுதிகளை ஒப்பிடும்போது மனிதனின் முக்கிய வாழ்வாதாரமான உணவும், நீரும், இருப்பிடமும் மருத நிலத்திலேயே பெருமளவில் இருந்தன. ஒப்பில்ல உணவு உற்பத்தியின் உச்சமாக நெல் வேளாண்மை மருதநிலப்   பள்ளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி அதிக அளவில் மருதநிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டதால் பிற நிலத்து மக்களும் மருதநிலத்தைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்ப்பட்டது.
        மருதநிலத்தின் பெரும் உணவு உற்பத்தியின் விளைவால் அதற்கான தொழிலாளர்களின் தேவையும் அதிகரித்தது. உழவுக்குத் தேவையான கலப்பைகளையும், போர்க்கருவிகளையும் வேறுசில இரும்பு மற்றும் மரப் பொருட்களையும் செய்யும் தொழிலை அம்மருத நில மக்களில் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். அம்மக்களே கொல்லர், தச்சர் என அழைக்கப்பட்டனர். 
            மக்களின் பழக்கத்திற்குப் பயன்பட்ட மண்பாண்டங்களை மருத நில மக்களில் ஒரு கூட்டம் செய்யத்துவங்கியது. அம்மக்கள் குயவர் எனப்பட்டனர். மருதநிலத்தில் பனையைப் பயிர் செய்த ஒரு பகுதி மக்களே சானார்(நாடார்) எனப்பட்டனர். இதையே கரிவலம்வந்தநல்லூர் கல்வெட்டு தேவேந்திரன் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பனை போன்ற வித்துகளைக் கொண்டு வந்து பயிர் செய்ததாகக் கூறுகிறது. 
          முதன் முதலில் மனிதன் மீன் பிடிக்க கற்றுக்கொண்டதே ஆறு மற்றும் குளங்களில்தான். அதன்பின் மனிதன் கடலில் மீன்பிடிக்கவும் கற்றுக்கொண்டான். அவ்வாறு மருதநில ஆறுகளில் மீன்பிடித்த மக்களே கரையாளர் என அழைக்கப்பட்டனர். அவர்களே நூறு ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கரையாளப் பள்ளர்எனவும் அழைக்கப்பட்டனர். கடலில் மீன்பிடிக்கக் கற்றுக்கொண்ட மருதநில மக்களே நெய்தல்நில மக்களாகவும் மீனவர், பரதவர், முக்குவர் எனவும் அழைக்கப்பட்டனர்.
           
             இம்மருதநில மக்களோடு "மருதநில தொழிற்மக்கள்" பதினெட்டு வகையினரும் இருந்ததாக இலக்கியச் சான்றுகள் உண்டு. அவர்கள் :
செம்மான்(தோல் தொழிலாளி)
குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
கொத்தன்(வீடு கட்டுவோர்)
கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
கன்னான்(செம்பு வேலை செய்வோர்)
தட்டான்(பொன் வேலை செய்வோர்)
தச்சன்(மரவேலை செய்வோர்)
கற்றச்சான்(கல் வேலை செய்வோர்)
செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
கிணையன்(கிணைப் பறையன்)
பாணன்(பாடுநர்)
கூத்தன்(ஆடுநர்)
வள்ளுவன்(அறிவர்)
மருத்துவன்(நோய் குணப்படுத்துவோர் )
வண்ணான்(சலவைத் தொழிலாளி)
மஞ்சிகன்(சவரத் தொழிலாளி)
          இவர்களைத்  தவிர  பிள்ளை, முதலி போன்ற பட்டங்களைக் கொண்டும் பல சிறு சிறு சாதிகளும் உள்ளன. அவையாவும் இடைக்காலத்தில் உருவான சாதிகள் ஆகும். இன்றைய  சாதி என்பது தமிழர்களின் தொழில் அடிப்படையில் இருந்த அடையாளம் ஆகும். அவ்வடையாளத்தை எவ்வித சிக்கலும் இல்லாமல்தான் தமிழர்கள் வைத்திருந்தனர்.
வந்தேறி தெலுங்கு வடுகர்களால்(நாய்க்கர் ) நிகழ்த்தப்பட்ட வேந்தர்களின் வீழ்ச்சி  தமிழரின் வாழ்வியல் அமைப்பையே தலைகீழாய்ப்  புரட்டிப்போட்டது. தொழிற்பிரிவுகள் சாதிகளாக இருக்கப்பட்டன.    
                  மார்க்சிய தத்துவத்தின்படி சொல்லப்படும் குடும்பம்-சொத்து- அரசு என்ற நிறுவனங்கள் முதன் முதலில் மருதநிலத்திலேயே நிறுவப்பட்டன. நாகரீக வாழ்வின் பரிணாம வளர்ச்சியின் முதற்க்கட்டமாக   உறவுமுறையற்ற காட்டுமிராண்டி வாழ்வு சீரமைக்கப்பட்டு "குடும்பம்" என்ற அமைப்பு மருத நிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. எனவேதான் மருதநில மக்கள் "குடும்பர்" எனவும் அழைக்கப்படுகின்றனர். மொழியானது தன்னிகரற்று ஓங்கி வளர்ந்து
செம்மையடைந்தது. மருதநிலத்தின் பெருஞ்செல்வமானது  பகைவர்களையும் கள்வர்களையும் மருத நிலம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.
               பகைவர்களிடமிருந்தும் கள்வர்களிடமிருந்தும் மக்களைக் 
காக்கும்பொருட்டு அரசு என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இவ்வரசு எனும் அமைப்பானது பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குப் பின் பேரரசு எனும் நிலையை அடைந்தது. மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தவுடன் அக்குடும்பத் தலைவன் குடும்பன்எனப்பட்டான். பல்வேறு குடும்பங்கள் சேர்ந்து ஒரு சிறு கூட்டமாக வாழ்ந்த பகுதி ஊர் எனப்பட்டது. எனவேதான் மருத நிலக் குடியிருப்புகள் மட்டுமே ஊர் என அழைக்கப்பட்டன. அவ்வூரின் தலைவன் "ஊர்க் குடும்பன்" எனப்பட்டான்.இவ்வாறு பல ஊர்களையும் ஒருங்கிணைத்து நாடுகள் எனும் சிறுசிறு நிலப்பகுதியும் அந்நாடுகளின் தலைவர்கள் "நாட்டுக் குடும்பர்கள்"  எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வமைப்பே பாண்டியர்கள் வீழ்ச்சியடைந்த 15 - ஆம் நூற்றாண்டுவரை தமிழரின்(சேர சோழர் உட்பட )  உள்ளாட்சி அமைப்பாக இருந்தது. இப்படியான பல நாடுகளையும் ஒருங்கிணைத்து உருவானதே அரசு எனும் பெரும் நிறுவனம் ஆகும். அவ்வாறான பெரும் பாண்டிய அரசின் மன்னர்களில் பெருங்குடும்பனேமுதுகுடுமி பெருவழுதியாவான். அரசு எனும் அமைப்பானது தனது எல்லையை நால்வகை நிலங்களுக்கும் விரிவுபடுத்தியே அமைக்கப்பட்டது.
               
                  ஈடு இணையற்ற மொழியின் வளர்ச்சியால் பல்வேறு தொழில்நுட்பங்களும் மருத நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றில் ஒன்றுதான் கடல் மேலாண்மை. மருதநில மக்கள் தங்களின் பெரும் பொருள் கொண்டு பெரும் கப்பல்களையும், நாவாய்களையும்( இதனாலேயே "குடும்பர்கள்" எனும் பெயரில் பெரும் வணிகக் கப்பல்களை கண்டதாக சீன மாலுமி கூறுகிறார். ) கட்டி ஆமைகளின் பின்னே கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி உலகமெங்கும் சென்று தமிழரின் முதல் பேரரசும் உலகின் முதல் வல்லரசுமான பாண்டியப் பேரரசை நிறுவி உலகாண்டனர். அதன் எச்சமே இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளான கிரேக்கம், சீனம், இலத்தீன், ஜப்பான், வியட்நாம், மெக்ஸிகோ, சிலி, பெரு, பிரேசில், தாய்லாந்து, நேபால், பர்மா போன்ற இன்னும் பல்வேறு பகுதிகளிலும் காணக்கிடக்கின்றன. இதனாலேயே உலகின் பல்வேறு மொழிகளின் வேர்ச்சொற்களும் தமிழில் உள்ளன. 
                கிரேக்கத்தின் ஆதிக் கடவுள் ஏதனபள்ளா எனவும் கிரேக்கத்தை ஆண்ட அரசர்கள் பாண்டியன் 1 மற்றும் பாண்டியன் 2 எனவும் கிரேக்க வரலாறுகள் கூறுகின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாய் பாண்டியன் 2 அரசனின் மகனின் பெயரே பள்ளன் என உள்ளது. இவர்கள் நம் மருதநிலப் பள்ளர்களே ஆவர்.பிரேசிலின் பெரும்பகுதி மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் பள்ளர் என்று போட்டுக்கொள்கின்றனர்.சிலியில் இருக்கும் ஒரு நகரின் பெயர் மள்ள. இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதி இசுலாமியர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால், பள்ளர்களின் பாண்டியர் படையின் போர் மறவர்களைக் குறிக்கும் "காலாடி" எனும் பெயரை தங்களின்
அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளர் எனும் பெயர்கொண்டு பல ஊர்கள் உள்ளன. வெளி நாடுகளிலேயே தமிழினத்திற்கான சான்றுகள்
நூற்றுக்கணக்கில் காணக் கிடைக்கும்போது
இந்தியாவிலோ நாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன.இந்தியாவில் தமிழர்களின் வரலாறு மீட்டெடுக்கப்படுமானால்
இந்தியாவின் ஆதிக்க சக்திகள் தமிழரே. ஆனால் இந்தியாவில் உள்ள
தமிழர்கள் அனைவரும்  தமிழருடைய
அடையாளமாக இன்றும்  வைத்திருப்பது பள்ளர், மள்ளர், குடும்பர் எனும் பெயர்களையே. இவை அனைத்தையும் தமிழினத்திற்கான சான்றாக தமிழினத்திற்கான ஆளுமையாகப் பார்க்காமல் சாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பதனாலேயே தமிழனின் பெருமையும் புகழும் மதுரைவரைக்கூட தெரியாமல் புதைந்து கிடக்கிறது. 
                  முல்லை நில மக்களோடு கொங்குப் பகுதி பள்ளர்கள் வைத்திருந்த கலப்பு உறவே பின்னாளில் கவுண்டர் எனும் சாதி உருவாகக் காரணம் ஆனது. உண்மையில் கவுண்டர் என்பது சாதியல்ல; ஒரு பட்டம். கவுண்டர் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய மக்கள் எல்லோரிடமும் தங்களுக்கிடையே கொள்வினை-கொடுப்பினை கிடையாது.ஒக்கலிகா போன்ற கவுண்டர் பிரிவுகள் தெலுங்கு  பேசும் மக்கள் ஆவர்.
இன்றைய கவுண்டர்களில் மல்லக் கவுண்டர் என்று ஒரு  பிரிவும் உண்டு. கவுண்டர் பிரிவுகள் சில பழனி முருகனை
கும்பிடுவதோடு அவரோடுள்ள இடும்பன் எனப்படும் "குடும்பன்" சாமியை 
குல தெய்வமாகவும் கும்பிடுவது குறிப்பிடத்தக்கது. ஆக இவர்கள் மருத நில மக்கள் என்பதற்கு இதுவும் சான்று. இலங்கையில் அண்ணன்மார் சாமி பள்ளர்களின் குல தெய்வமாக இருக்கையில்  இங்கு மட்டும் கவுண்டர் எனும் சாதியும் சொந்தம்
கொண்டாடுவது கவுண்டர்களின் மருத நிலத்தொடர்பேயாகும்.  முல்லை நில மக்களோடு உறவு கொண்ட பள்ளர்களால்வேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் முல்லைநில மக்களைக் கட்டுப்படுத்த முடியாதுபோய் போரில் முடிந்தது; அதுவே அண்ணன்மார் வரலாறும் ஆனது.  
               சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பள்ளர்களில் ஒரு பகுதியினர் முல்லை நில மக்களின் கலப்பால் பள்ளி எனும் பெயரில்  வன்னியர் எனும் தனிச்சாதியினர் ஆனர். வன்னியர் என்பது பட்டமே; சாதியல்ல. இலங்கையில் வன்னியர் எனும் பெயர் கொண்டோர் அனைவரும் பள்ளர்களே. தமிழகத்திலும்
அணைத்து பாண்டியராசா   கோவில்களிலும்  வன்னிராசாவும்
 வன்னிமாச்சியும் பள்ளர்களாலேயே  வணங்கப்படுவது, வன்னியர் முல்லைநில மக்களின் கலப்பால் பிரிந்த பள்ளர்களின் ஒரு பகுதியினர் என்பதாலேயே ஆகும்.
வன்னியர்களில் ஒரு பிரிவு மக்கள் தெலுங்கு பேசுவதும் உண்டு. இவர்களுக்கும் ஏனைய வன்னியர்களுக்கும் கொள்வினை-கொடுப்பினை கிடையாது. 
                   இம்மண்ணையும் மக்களையும் காத்து நின்ற வேந்தர்களின் வீழ்ச்சி,
ஒன்றாய் இருந்த தமிழினத்தை சாதியாய்ச் சூறையாடி  இன்று வரையிலும் 
பிரித்து வைத்திருக்கிறது. தமிழினத்திற்க்கிடையே பகையை எண்ணெய் இட்டு வளர்க்கிறது வந்தேறி வடுக திராவிடக் கூட்டம். இக்கூட்டமானது உண்மையில் என்றுமே சாதியை ஒழிக்காது. ஏனெனில் சாதிதான் இவர்களை இம்மண்ணில் ஆள வைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வறிவற்ற நிலையில் திராவிடக் கூட்டம் மேல்சாதி, கீழ்சாதி எனப் பிரித்து சாதி ஒழிப்பு(!!!) செய்கிறது. இக்கூட்டம் ஒருநாளும் இது எப்படி மேல் சாதி..? இது எப்படி கீழ்சாதி...? எனும் பகுத்தறிவுக் கேள்வியைக் கேட்டதில்லை.அப்படியானதொரு சிந்தனை விதைக்கப்பட்டிருப்பின் ஒரே இனமான தமிழினம் தன் சாதி பற்றிய வேரைத்தேடி ஒரு புள்ளியில் என்றோ இணைந்திருக்கும். அதை விடுத்து, இல்லவே இல்லாத மேல்சாதி கீழ்சாதி கலப்பு எனும் பெரும் பொய்க்கோட்பாடு கொண்டு தமிழர்க்குள்ளே பகையை மேலும் மேலும் வளர்க்கிறது.
                    இம்மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய தலையாய கடமை கொண்டுள்ள வேந்தன் மரபினரின் புறநானூற்றுப்படை களம்காண புறப்பட்டுவிட்டது. வேந்தர்குல கிளைக்குடிகளையும் ஏனையபிற தமிழ்ச் சாதிகளையும் கரம்பற்றிக் களம் காணும் முகமாகவே யாம் சாதிபற்றிய பொய்மைகளை உடைத்து எமதுஉறவுகளை நோக்கி கரம் நீட்டி அழைக்கின்றோம். எமது கரம்பற்றி தமிழினம் காக்க வருவதும் இனத்தோடு சேர்வதும் உங்களின் முடிவுக்கே விடப்படுகிறது. யார் வரினும் வராவிட்டாலும் தலைக்குடிகளான,வேந்தர் மரபினரான பள்ளர்படை தமிழினம் மீட்க களம் கண்டே தீரும். இது உலகாண்ட பாண்டியர்களின் வேந்தன் மரபினரின் தணியாத தமிழர் தாயகத் தாகம்.
                                                                                        - செல்லப்பாண்டியன்                 
       
*தாங்கள் கூறும் மள்ளர் என்பதை
பாண்டிய மன்னர்களின் பட்டமாக ஒப்புக் கொண்டாலும்.....இப்போது இருக்கும் பள்ளர் தான் மள்ளர் என்பதற்கு என்ன ஆதாரம்?
*பள்ளி என்பது சோழ சேர பல்லவ சத்ரியக்குலமான வன்னிய பிரிவின் ஒரு
சிறு புள்ளி...அதைப் போல் 142 பட்டங்கள் உண்டு இந்த சத்ரிய குலத்திற்கு!!
*மேலும் மள்ளர்கள் தான் வன்னியர் என்றால்...
முல்லை நிலப் பகுதியில் மள்ளர்கள் வருவதற்கு முன்பு வாழ்ந்தவர்கள் யார்?!?!
*நெய்தல் பகுதியில் வாழ்ந்தவர்கள் யார்...?!?
[இன்றும் நெய்தல் பகுதியில் பெரும்பானமையாக வாழ்பவர்கள் யார் என்று விசாரித்து
தெரிந்து கொள்ளுங்கள்]
*சோழ,சேர மண்ணிலிருந்து சென்று
கர்நாடகாவில் வாழும் பல லட்சம் வன்னிய திகிலர்களும் பள்ளர்கள் தானா?!?
ஆந்திராவின் சித்தூர், திருப்பதி, நெல்லூர் போன்ற பகுதிகளில் வாழும்
சில லட்சம் வன்னியாஸ் சத்ரியர்களும் பள்ளர்கள் தானா?!
பூம்புகாரில் வாழ்ந்தவர்களும்,செஞ்சியில் வாழ்ந்தவர்களும் பெரும்பான்மையாக வன்னியம் என்ற சத்ரிய குலம்...
போருக்கு சென்ற சத்ரிய குலத்திற்கும் விவசாயம் செய்த பள்ளர்களுக்கும்,,
என்ன சம்மந்தம்?!
பள்ளி என்ற சிறு வார்த்தையை வைத்துக் கொண்டு தொடர்பு பேசும் நீங்கள்...
*பாண்டிய மன்னர்களின் சில பட்டங்களில் ஒன்றான மள்ளர் என்ற பட்டத்தை விடுத்து,
போர் படையிலோ
போர் தலைமையிலோ
பள்ளர்கள் இருந்ததாக ஒரே ஒரு சான்று காட்ட முடியுமா...?

மள்ளரின் ஒரு கூட்டமே 'வன்னியர்'
==================================
போற்பயிர்ச்சி அளித்த களரியை 'பள்ளி' என்றனர். இப்பள்ளியில் படைப் பயிற்சி பெற்றவரைக் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் 'பள்ளிகள்' என்ற தனி சாதியாக்கினர். இவர்களில் சிலர் குறுநில மன்னர்களாக சின்னஞ்சிறு படைகளை வைத்துக் கொள்ளும் உரிமையுடன் நாடாளும் மன்னனிடம் பற்றுறுதி (Oath of Fealty ) உடன்படிக்கை செய்துகொண்டு படையாட்சிகள் (Fiefs ) ஆயினர். இவாறு படையாட்சி உரிமை பெற்றவர்களில் பெரும்பாலோர் பள்ளி சாதியில் இருந்து வந்தவராயினும், பள்ளிகள் எல்லாருமே படையாட்சிகளாக இருக்கவில்லை;அவ்வாறு இருக்கவும் முடியாது. 
நாடு என்ற அடிப்படை ஆட்சிப் பகுதிக்கு மாறாக வன்னிமை என்ற புதிய ஆட்சிப் பகுதி தோற்றுவிக்கப் பட்ட போது, வன்னிமைக்குத் தலைவரானவர்களை 'வன்னியர்' என்றனர். நாட்டின் ஆட்சி தலைமை ஏற்றவர்களை 'நாட்டார்' என்றதைப் போல், வன்னிமையில் தலைவனை 'வன்னியன்' என்று அழைத்தனர். 'நாட்டார்' என்ற ஆட்சிப் பட்டத்தை பெற்றவர்கள் வெவேறு சாதிளில் இருந்து வந்தவர்களாய் இருந்தனர். காலப் போக்கில் 'நாட்டார்' பட்டம் பெற்றவர்கள் எல்லாம் நாட்டான் அல்லது நாடான் என்ற புதிய சாதியானதைப் போல் வன்னியன் பட்டத்தைப் பெற்ற வெவ்வேறு சாதியறேல்லாம் 'வன்னியர்' என்ற புதிய சாதியாகத் தோற்றம் எடுத்தனர். பள்ளி சாதியினர் எல்லாருமே வன்னியர் என்ற புதிய அடையாளத்தைத் தழுவிக் கொண்ட போக்கு திருவோட்டு அரசியலின் அடிப்படையில் அண்மையின் தோன்றிய நிகழ்வாகும்.
மள்ளர் குடியில் இருந்து பிரிந்து சென்ற கூட்டமே 'வன்னியர்'. ஈழத்தில் வன்னியன் என்ற பெயரைக் கொண்டு இருந்தவர்களெல்லாம் பள்ளர்களே.தென்பாண்டி நாட்டில் வன்னியர் என்று பெயரிடும் மரபு மள்ளரிடமும் உள்ளது. பள்ளர்களின் பாண்டியராசா கோயில்களில் வன்னியராசா, வன்னிச்சியம்மாள் என்ற காவல் தெய்வங்கள் இருப்பதும் இதற்க்கு சான்றாகும்.
..........
அறிவர் குணா
தமிழக ஆய்வரண்

//*பாண்டிய மன்னர்களின் சில பட்டங்களில் ஒன்றான மள்ளர் என்ற பட்டத்தை விடுத்து,
போர் படையிலோ
போர் தலைமையிலோ
பள்ளர்கள் இருந்ததாக ஒரே ஒரு சான்று காட்ட முடியுமா...?//
=> '‘மள்ளர்’ என்பது – பள்ளர் இனத்தையும், ‘மல்லர்’ – தேவர் இனத்தையுமே குறிக்கும். ' (http://www.thevarthalam.com/thevar/?p=1907. இந்த கட்டுரையிலும் மள்ளர்,மல்லர் இவரோரும் ஒருவரே...அது பள்ளரையே குறிக்கும் என்றும் நிறுவியாகிவிட்டது)
=> "பள்ளர் என்பது உலக வழக்கு; மள்ளர் என்பது செய்யுள் வழக்கு.இரு சொற்களும் பள்ளமான மருத நிலத்தில் வாழ்பவர் என்னும் பொருள் ஒன்றே..." -- மொழிஞாயிறு தேவநேய பாவாணர் (புத்தகம்: 'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கட்டுடைமை" பக். 125 , Ed .01 .04 . 1978 )
மேலே சொன்ன இந்த இரண்டும் பொய் என்பதை நிறுவிட்டு வாருங்கள்...பிறகு சொல்கிறேன்...மள்ளர்கள் என்பவர்கள் ஏறும்,போரும் ஒருங்கே பெற்றவர்கள்,அவர்களின் வீரத்தை இலக்கியங்கள் எப்படி படம் பிடித்து காட்டுகிறது என்று.

இலக்கியங்களில் 'பள்ளர்'
========================
இலக்கியங்களில்,வரலாறுகளில் 'மள்ளர்' என்ற சொல்லே பெரும்பாலும் இருந்தாலும்,'பள்ளர்' என்ற சொல் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. 'மள்ளர்' என்பது இலக்கிய வழக்கு, 'பள்ளர்' என்பது சொல் வழக்கு. இருப்பினும் 'பள்ளர்' என்ற வார்த்தை வரும் சில வரலாற்று சான்றுகள் இவை.
திருநெல்வேலி வரலாறு:
திருநெல் வேலி தலபுராணம்:
செய்யுள் 48 :
“மள்ளர்கள முதவாரிவய லெலாம் பரப்பிச்சாலி
யொல்லியவளை களூரவுழுபக டொருங்கு மோதப்
பள்ளநீலி டங்கடோரும் பண்ணை சூழ் வரம்பு தோறுந்
துள்ளிய கயலை மாதர் வழியென நினைந்து சோர்வார்”
விளக்கம்: மல்லர்கலாகிய பள்ளர்களின் வயலில் துள்ளுகின்ற மீன்களை மல்லத்தியரின் கண்களாக உவமை பாராட்டுவதாக மேற்கண்ட செய்யுள் கூறுகின்றது.
—————————————————————–
கோவலரைத் துயிலரங்க சரிதம்:
பக்: 159
செய்யுள் 29 :
“வெள்ள மோங்கி விரிந்து பரந்தெங்
கொள்ள கொள்ளையிற் கால்களிற் கூட்டியே
பள்ளர் மள்ளர் பறைகள் கறங்க மீன்
துள்ளத் துள்ள நீர் சேர்த்துச் செய் தூர்த்துவார்”
—————————————————————-
#####போற்பயிர்ச்சி அளித்த களரியை 'பள்ளி' என்றனர். இப்பள்ளியில் படைப் பயிற்சி பெற்றவரைக் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் 'பள்ளிகள்' என்ற தனி சாதியாக்கினர். ######
ஹஹா ..... சுந்தர சோழன் காலத்தில் (கி.பி 10 ஆம் நூற்றாண்டு) 'ஓமயிந்தன் முந்நூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம்' என்பான் சம்புவராயர் குல முன்னோடி.இவன் பள்ளி குலத்தவன்.இவன் குறுநிலத் தலைவன் ஆவான்.( South Indian Inscriptions - Vol 7, no.500)
அப்படியெனில் நீங்கள் சொன்ன காலத்திற்கும் நூறு ஆண்டுகள் முன்பு வாழ்ந்த இந்த பள்ளி என்போர் யார் ? வானத்தில் இருந்து வந்தவர்களா ?
பள்ளி இனத்தின் பழைய பெயர் காடவர் ...
அகி.பி 10 ஆம் நூற்றாண்டு முன்பே காடவர் என்னும் பெயரில் இவர்கள் ஆண்டதும் உண்டு ... மதேந்திர வர்மன் முதல் ஐயடிகள் காடவர் கோன் வரை பிற்கால பல்லவர்கள் காடவர் என்று அறியப்பட்டனர் ...
காடவர் என்பது பள்ளி என்ற கல்வெட்டும் உண்டு ..
காடவன் எனப் பொருள்படும் வன்ய என்ற வடமொழிப் பதத்திலிருந்தே வன்னியர் என்ற சொல் தோன்றிற்று ..
இதை கூறியது ,
இலங்கைப்பல்கலைக்கழக வரலாற்று
விரிவுரையாளர்.
கலாநிதி
சி. பத்மநாதன் அவர்கள் .
காடவர் பள்ளி(வன்னியர் ) என்று குறிக்கும் கல்வெட்டு :
உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian
Society in Transition: Ancient to Medieval" ஆய்வு நூலில் கல்வெட்டு
ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.
############# ஆகையால் பள்ளர் தான் பள்ளி என்று உளறுவதை நிறுத்துங்கள் ........
#####போற்பயிர்ச்சி அளித்த களரியை 'பள்ளி' என்றனர். இப்பள்ளியில் படைப் பயிற்சி பெற்றவரைக் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் 'பள்ளிகள்' என்ற தனி சாதியாக்கினர். ######
கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.
"கோவிசைய மயீந்திர பருமற்கு
யாண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று பட்டா நெருமேதிகாரி"
(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)
காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.
இதன் மூலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டளவிலேயே பள்ளி இனத்தவர் இருந்தனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
############ ஆகையால் பள்ளர் தான் பள்ளி என்று உளறுவதை நிறுத்துங்கள் ........
பள்ளர்--பள்ளி
பாண்டியன் - பாண்டிமாதேவி
சோழன் -சோழமதேவி
சேரன் -சேரன்மாதேவி
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக்கனவன்"
பள்ளரே(மள்ளர்) சேர,சோழ பாண்டியர் எனில் பள்ளி சேரமாதேவி,சோழமாதேவி,பாண்டிமாதேவி.
பள்ளர்(மள்ளர்) புருஷன் பள்ளி(மள்ளி) மனையாள். இதை புரிந்து பள்ளனுக்கு பள்ளிதான்.
பள்ளிக்கு பள்ளன் தான் என மணப்புரிதல் வேண்டும்.
கணவன் மனைவிக்குக்கு மிடையில் வேற்றுமை கூடாது.
சிவன் இல்லையேல் சக்தியில்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை

உண்மை தான் பள்ளர்களே பள்ளி இன மக்களின் மூத்தோர்.வன்னியர் போற்றும் வையா பாடலும் வன்னியரை பள்ள சாதி என்றே கூறுகிறது.குறும்பர்,இருளர்,பள்ளி எல்லோரும் பள்ளர் தான்.இவர்களில் இருந்து உருவானவர்கள் தான் வன்னியர் என்று தற்போது உள்ள இனம்,இவர்களின் (பள்ளர்,பள்ளி)உருவ அமைப்பும் ஒன்றே போல் இருக்கும்.பள்ளரில் இடையராக கமத் தொழில் விவசாயம் செய்வோராக இருப்போரே பள்ளி என்றும் படையாட்சி என்றும் வன்னியர் என்றும் கூறிக்கொள்ளும் வன்னியர்.
தெற்கே வன்னியரும் தேவேந்திரரும் ஒருதாய் மக்கள் என்றே ராமதாஸ் கூட்டத்தினர் போஸ்டர் ஓட்டுவார்கள் எண்பதுகளில்,வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் என்றது வெறும் கூற்று கிடையாது வரலாற்று உண்மை அறிந்தே ராமதாஸ் அப்படி கூறியுள்ளார்.இந்தியா முழுமையும் பள்ளர்களின் இனம் பரவியுள்ளது.அவ்வாறு பரவிய இனத்தோரில் வட இந்தியாவில் கூட வன்னியர் என்று கூறும் மக்களும் பள்ளர் இனமும் ஒரே கிளையாக இருப்பார்கள்.பள்ளர்களின் இடைக்கால பொருளாதார தாழ்வு நிலை சமுதாய சூழலில் கீழ் நிலைக்கு கொண்டு சென்றது,அதே சமயம் தங்களது பொருளாதாரத்தை தக்க வைத்து அந்தஸ்தாய் வாழ்ந்த வன்னியர் தாங்கள் பள்ளர்கள் என்று பெருமையுடன் ஒத்துக்கொள்ள மறுத்தே வன்னியர் குல சத்திரியர் என்று கதை புனைந்து அரசாங்கத்தில் அழுது புரண்டு இருவரையும் தனித்தனியாக காட்டிக்கொண்டனர்.ஆனால் சத்திரியர் பட்டம் பெற அவர்கள் காட்டிய ஆதாரம் அவர்களின் முன்னோராகிய பள்ளர்கள் உடையது தானே,அவர்களின் பெருமையைத்தானே.பள்ளசாதியில் ஒரு பிரிவினரே பள்ளி,பள்ளி முற்றி படையாட்சி படையாட்சி முற்றி வன்னியர் வன்னியர் முற்றி கவுண்டர் என்பது வழக்கு.படையாட்சி என்போர் கமத்தொழில் புரிவோர் என்றே வருகிறது.கமத்தொழில் என்பது உழவுத்தொழில்.இன்றைக்கும் இவர்கள் வட மாநிலங்களில் பள்ளரைவிட பொருளாதாரத்தில் நாகரிகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளனர்.வன்னியர் பள்ளர் இருவரும் குடிப்பிறப்பின் ஒற்றுமையால் ஒன்றிணைந்து வளர்ச்சி பெற்ற சமுதாயமாக வாழ வேண்டும்.
பள்ளர்--பள்ளி
பாண்டியன் - பாண்டிமாதேவி
சோழன் -சோழமதேவி
சேரன் -சேரன்மாதேவி
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக்கனவன்"
பள்ளரே(மள்ளர்) சேர,சோழ பாண்டியர் எனில் பள்ளி சேரமாதேவி,சோழமாதேவி,பாண்டிமாதேவி.
பள்ளர்(மள்ளர்) புருஷன் பள்ளி(மள்ளி) மனையாள். இதை புரிந்து பள்ளனுக்கு பள்ளிதான்.
பள்ளிக்கு பள்ளன் தான் என மணப்புரிதல் வேண்டும்.
கணவன் மனைவிக்குக்கு மிடையில் வேற்றுமை கூடாது.
சிவன் இல்லையேல் சக்தியில்லை சக்தி இல்லையேல் சிவன் இல்லை

வேளாளர் என்ற பெயர் பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு சொந்தமானது அவர்களின் சாதி பெயர் வெறும் தேவேந்திர குலத்தான் தா பள்ளர் கூட்டத்து மக்களின் சாதிப்பெயர் நீ வேளாளர் அவங்க சாதி பெயர பயன்படுத்து ரீங்க நீங்க அந்த வேளாளர் களிடம் என்னவா இருந்தீங்க அப்பிடிங்கிறதா நல்லா தேடிபாரு உனக்கே நீ யாருனு புரியும் வேளாளர்களின் வரலாற்றை திருடமவதை நிறுத்துகயா முதல. நீங்கதா எல்லாமேவா சூப்பர் கற்பணை முக்குலத்து ஆளுக மாதிரி காமெடி பண்ணாதிங்க பாஸ் அவங்கே தா ஊர்ல உள்ள சாதிய பூரா அவங்க மானு சொல்லுவாங்கே இது போக அரசர்கள் பூரா அவே சாதி மாதிரியே பேசுவாங்கே அதே மாதிரி இருக்கு முக்குவர் எனும் முக்குலத்தோர் சூத்திரர்களாக பணிக்கப்பட்டதனை மறந்து தங்களை சத்திரியர் என நினைத்துக் கொண்டு மற்றவர்களை உண்மைக்கு புரம்பாக சூத்திரர்கள் என எழுதிவருவதும் கூறிவருதும் வருத்தமாக உள்ளது அவர்களின் அறியாமையை நினைத்து சாணார் இலங்கையிலிருந்து பண்ணை பணிக்காக சேரமன்னனால் கேரள பகுதிக்கு அழைத்து வரப்பட்ட வந்தேறி கூட்டம் தங்களை போல் தான் தமிழ் இன வரலாற்றில் பள்ளர் மள்ளர் என்பதை சங்க காலம் இடைகால இலக்கியங்களிலோ வரலாறுகளிலோ ஏன் கடைகாலத்தின் துவக்க காலத்தில் கூட காணமுடியவில்லை நீங்கள் தான் எல்லாம் என தாங்கள் கூறும் போது பிள்ளை முதலி எனும் சாதி புதிதாக தோன்றியதா வேளாளர் என்பது அவர்களின் சாதி பெயர் அவர்கள் மட்டுமே அதிகப்படியாக முக்கால இலக்கியங்களில் வரலாறுகளில் காணப்படுகின்றனர் பெருமையாக பேசபடுகின்றனர். பிள்ளைமுதலி என்போரிடம் புதிதாய் ஒரு கூட்டத்தார் பண்ணை வேலையாட்களாக பணிக்கப்பட்டிருந்தனர் அவர்கள் யாரென தங்களுக்கு தெரியுமா? 

//தமிழ் இன வரலாற்றில் பள்ளர் ,மள்ளர் என்பதை சங்க காலம் இடைகால இலக்கியங்களிலோ வரலாறுகளிலோ ஏன் கடைகாலத்தின் துவக்க காலத்தில் கூட காணமுடியவில்லை//
SHIVA SANKAR அவர்களே சங்க இலக்கியங்கள் , கல்வெட்டுகள் எல்லாவற்றையும் நன்கு படித்துவிட்டு இங்கு வந்து கூறுங்கள். அதை விடுத்து சிறு பிள்ளை தனமாக சங்க இலக்கியங்களில் மள்ளர் என்ற சொல் இல்லை என்று கூற வேண்டாம். 
மூவேந்தர் ஆட்சி செய்த காலத்தில் நீங்கள் என்ன பெயரில் அழைக்கப்பட்டீர்கள் என்று கூற முடியுமா? மேலும் மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் இயற்றப்பட்ட நிகண்டுகளில் உங்கள் சமூகம் எந்த நிலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டீர்கள் என்று விளக்க முடியுமா?.
வேளாளர் என்ற பெயர் மருத நிலத்தில் ஆதியில் உழவு செய்த வேளாண் குடியான மள்ளர் குடியைத்தான் குறிக்கும். இன்று வேளாளர் என்று கூறுபவர்கள் எல்லோரும் ஆதி வேளாளரிலிருந்து பிரிந்து சென்றவர்கள். அல்லது அன்னிய படை எடுப்புக்குப் பின் ஏற்றம் பெற்ற வேற்று மொழி பேசுபவர்களில் கலப்பு இனம். இதை தவிற்த்து தமிழகத்தில் உங்களுக்கு வேறு வரலாறு இருந்தால் தாராலமாக கூறலாம்.
உங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்க வில்லை என்றால். மேஜர் கதிர் மகா தேவன் முன்னால் தஞ்சை பல்கலைகலக துணை வேந்தர், மற்றும் V. சேகர் இயக்குனர் சினிமா துறை போன்ற உங்கள் சமூக அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

காச வாங்கிட்டு பள்ளர்களுக்கு ஒரு வரலாறு எழுத வேண்டுமே என உங்கள் கடமையை செய்கிறீர்கள். இதில் காலாடி கடுங்கோல்மால் செல பாண்டி மளர் சார் என உதிரம் சிந்தி வியர்வை சிந்தி உழைக்கும் மக்களுக்கு எக்சார்சிஸ்ட் பாதிரியார் அகத்திய சித்தர் குருசாமி வாழ்த்து என்றைக்கும் உண்டு. ஆனால் விஷயம் என்ன வென்றால் பள்ளர் என ஆனித்தரமான கல்வெட்டுகள் இராச இராச சோழன் காலத்திலிருந்து சாலிடாக கிடைக்கிறது. அந்த கல்வெட்டுகளை நீங்களே தீட்டு என ஒதிக்கி கல்வெட்டில் பள்ளன் என வந்தால் அதை ஏற்க்க கூடாது என என்னும். பள்ளர்கள் இல்லாத மள்ளர் என்ற பெயரை மல்லர் என்னும் பெயரோடு தொடர்பு படுத்தி அதைக்கோர நினைக்கும் உங்களுக்கு பள்ளன் என கல்வெட்டு வந்தால் அது தீட்டு பள்ளர் நாங்கள் கிடையாது நாங்கள் மள்ளர். பள்ளர் எனும் வார்த்தை பள்ளனுக்கே தீட்டு எனில் கல்வெட்டில் பள்ளன் என வந்தவன் யாராக இருப்பான் ஒருவேளை ஐயர்,தேவர்,நாயக்கர்,பிள்ளை,முதலி போன்ற ஏதோ தீட்டு சாதியாக தான் இருப்பான் போல. கல்வெட்டில் பள்ளன் இன்றைய பள்ளன் கிடையாது கல்வெட்டில் மள்ளன் ச்ச்சாரி மல்லன் என்பவனே பள்ளர் ஓகே. தீட்டுக்கே தீட்டு இருக்கும் போது மற்றவர்களை என்ன சொல்வது. ஒரு சிறு வின்னப்பம் தங்களது வலைதளத்தில் கல்வெட்டு என்னுடன் கூடிய படத்தை இனைக்க முடியும் அல்லவா அதில் இவ்வூர் மல்லர்களில் அல்லது இவ்வூர் மள்ளர்களில் அல்லது இவ்வூர் தேவந்தர்களில் என ஏதாவது ஒரு கல்வெட்டு ஆவனத்தை இனைத்தால் புன்னியமாக இருக்கும்.
200 வலைதளங்கள் ஆரம்பித்த பின்னும் இன்னும் உங்களுக்கு எந்த ஆதார அங்கிகாரம் கிடைக்கவில்லை.
கோசர்,எயினர்,மழவர்,ஒளியர்,வில்லவர்,ஓவியர்,திரையர் இவர்கள் இனங்கள் எல்லாம் எப்படி கானாமல் போனதோ அதே மாதிரி மக்களுடன் கலந்து காணாமல் போன இனம் தான் மள்ளர்.
இதை எங்கு தேடினாலும் கிடைக்காது ஆனால் பள்ளர் எனும் கல்வெட்டு சொல் கடந்த 1200 வருடங்களாக வருகிறது. கடையர் என்னும் சொல் 2000 வருடமாக வருகிறது. நீங்களாவது கடையர்,பள்ளர் எனும் பெயர்களை தீட்டு பார்க்காமல் ஏற்று கொள்ளுங்கள் இல்லையேல் அந்த பெயரை யார் ஏற்பது.
இன்னோன்று பள்ளர்கள் தேவேந்திர வெள்ளாளர் ஆனது மாதிரி உவச்ச பறையர் இசைவேளாளராக மாறியதைபோல் சோதிட பறையர் வள்ளுவ வேளாளராக மாறியதுபோல் சக்கிலியர் அருந்ததிய வேளாளராக? அம்பட்டர் மருத்துவ வேளாளராக? வன்னார் சிறுதொண்ட வேளாளராக எப்போது மாறுவர் என ஒரு ஆருடம் கூறுங்கள் பாண்டிய பள்ளர் அல்லது மள்ளர் அல்லது குடும்பர் அல்லது காலாடி அல்லது பன்னாடி நன்பா

பாரதம் படித்தல் என்பது தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் திருவிழாக்களின் போது நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். பாரதம் படித்தல் பொதுவாக கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி அம்மன் கோவில்களில் முக்கிய நிகழ்வாகும். திருவிழா சாட்டியதிலிருந்து பதினெட்டு நாட்கள் தினமும் கோவில் திடலின் ஒரு புறத்தில் அமைக்கப்பட்ட மேடையில் மகாபாரதம் நூலைப் படிப்பர். செய்யுள்வடிவில் அமைந்த பாடல்கள் பாடி விளக்கமளித்தல், கதை நிகழ்வுகளைச் சொற்பொழிவாகச் செய்தல், பாடலும் விளக்கமும் இணைந்த கதாகாலட்சேபம் எனும் வடிவில் பாரதம் படித்தல் நிகழும்.
பொருளடக்கம் [மறை]
1 வரலாறு
2 திரௌபதி அம்மன்
3 வன்னிய புராணம்
4 உசாத்துணை
5 மேற்கோள்கள்
6 வெளியிணைப்புகள்
வரலாறு[தொகு]
சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் கி. பி ஏழாம் நூற்றான்டில் பகைமை வளர்ந்தது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டான். பாதாமி நகர் (இது கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி என அழைக்கப்படுகிறது) அழிக்கப்பட்டது.
திரௌபதி அம்மன்[தொகு]
நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள் ஆவர். பாதாமியை வென்ற படைக்கு தலைமையேற்றவர் வன்னியர் குலத்தைச் சேர்ந்த பரஞ்சோதி என்கிற சிறுதொண்டர் ஆவார். இத்தாக்கத்தினால் வன்னியர்களிடையே அவர்கள் வாழும்பகுதிகளில் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாக ஏற்படத்தொடங்கியது.[1] பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்தது. பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.[2]
வன்னிய புராணம்[தொகு]
இத்தாக்கத்தின் விளைவாக வன்னிய புராணம் என்ற ஒரு கதையும் உருவானது. வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம், வன்னியர்களிடையே கதையாகப் பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன், வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப் படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை வன்னியக்கூத்து என்ற பெயரில் கூத்தாகவும் நடத்தப்படுகிறது. வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை, பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகளுடனும் கூத்தாண்டவருடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.
வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை பல்லவ மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.[3] பாரதக் கதையின் பாதிப்பால் உருவான திரௌபதி அம்மன் கோவில்களிலும், கூத்தாண்டவர் கோவில்களிலும் பாரதம்படித்தல் என்பது இன்றும் ஒரு பண்பாட்டு மரபாக விளங்கி வருகின்றது.

மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள உறவு
இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்
இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.
ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது.
அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10சாதிகள் உள்ளன.
கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன.
இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. 
மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.
இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர்.
மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) மீதமுள்ளவர்கள் திராவிடர்கள்.
. நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.
இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.
ஆதாரம்:
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf
R
மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள உறவு
இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்
இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.
ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது.
அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10சாதிகள் உள்ளன.
கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன.
இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. 
மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.
இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர்.
மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) மீதமுள்ளவர்கள் திராவிடர்கள்.
. நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.
இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.
ஆதாரம்:
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

வேளாளர் எனப்படுவோர் சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தையே சார்ந்துள்ளனர். சைவ வேளாளர், கொங்கு வேளாளர், போன்றோர்களில் பலர் முறையே பிள்ளை, கவுண்டர், என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவற்றில் விதிவிலக்கும் உண்டு...
பொருளடக்கம்
1 வேளாளர் விளக்கம்
2 பட்டங்கள்
3 சைவ வேளாளர்
3.1 உட்பிரிவு சாதியினர்
4 மேற்கோள்கள்
5 வெளி இணைப்பு
வேளாளர் விளக்கம்
வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும்.
வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, சேக்கிழார், என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர்.[1]
பட்டங்கள்
வேளாளர் இன பட்டங்கள்
பிள்ளை
முதலியார் அல்லது முதலி
கவுண்டர்
உடையார்
தேசிகர்
குருக்கள்
ஓதுவார்
சைவ வேளாளர்
இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
உட்பிரிவு சாதியினர்
ஆதிசைவ வெள்ளாளர் [2] [3]
ஊற்று வளநாட்டு வேளாளர்
சைவ வேளாளர்
அசைவ வேளாளர்
காக்கட்டு வேளாளர்
கார்காத்தார் அல்லது கார்காத்தர் பிள்ளை
சோழிய வேளாளர்
வீரகுடி வேளாளர்
நாமதாரிப் பிள்ளை
ஓதுவார் பிள்ளை
தேசிகர்
ஆறுநாட்டு வேளாளர்
நாஞ்சில்நாட்டு வேளாளர்
சேர வேளாளர்
சோழ வேளாளர்
நாட்டம்படி வேளாளர்
நன்குடி வேளாளர்
துளுவ வேளாளர்
பாண்டிய வேளாளர்
கொடிக்கால் வேளாளர்
தொண்டை மண்டல வேளாளர்
அரும்புக்கட்டி வேளாளர்
வெள்ளாள முதலியார்
வீரக்கொடி வேளாளர்
ஆரிய வேளாளர்
கோட்டை பிள்ளைமா

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...