Tuesday, 30 January 2018

பார்க்காத என்ன பார்க்காத

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணாண்ணு நினைக்கலையேநானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

எனக்கென யாரும் இல்லையே

எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி 
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி 

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி 
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி 

பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும் 
நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும் 
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே

போத நீ தானே தல்லாடுறேன் நானே 
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே 
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே 
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே 

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி 
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி 

கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி 
நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி 

பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும் 
நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும் 
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே 
உனக்கது உனக்கது உனக்கது..

போத நீ தானே தல்லாடுறேன் நானே 
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே 
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே 
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே 

போத நீ தானே தல்லாடுறேன் நானே 
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே 
என் போத நீ தானே தல்லாடுறேன் நானே 
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே 

எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாருமில்லையே 
உனக்கது தோணவில்லையே

3 மூன்று

நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா , இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா , அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எண்டும் இனி தேவை
உயிரே... உயிரே... உயிர் நீதான் என்றால்
உடனே... வருமா... உடல் சாகும் முன்னாள்

அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ...

நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்தனால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா

மதராசபட்டினம்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
பெ : உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
ஆ : இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ 
(தானா....)

ஆ : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
பெ : நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
ஆ : வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
பெ : வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
ஆ : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
பெ : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

ஆ : பூந்தளிரே......

பெ : Oh Where Would I Be Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive; It Makes Me Want To Fly Into The Sky!
Oh Where Would I Be If I Didn’t Have You Next To Me?
Oh Where Would I Be? Oh Where, Oh Where?

ஆ : எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
பெ : என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது மீளுதே
ஆ : யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
பெ : ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
ஆ : காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெ : காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
ஆ/பெ : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ ....

ஆ : (தானா....)

பெ : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
ஆ/பெ : என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஆ : (தானா....)

Monday, 29 January 2018

Mayakkam Enna

                             மயக்கம் என்ன
    


பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்.

Tuesday, 16 January 2018

மண்டபங்கள் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்குமுன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள்கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்குமுன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும். கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வமாக (துர்க்கை) இருக்கும்போது வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள். மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு: தர்மராச மண்டபம்மகிஷாசுரமர்த்தினி மண்டபம்வராக மண்டபம்ஆதிவராக மண்டபம்ராமானுச மண்டபம்திரிமூர்த்தி மண்டபம்கோடிக்கல் மண்டபம்கோனேரி மண்டபம்அதிரணசண்ட மண்டபம்ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...