Wednesday, 26 January 2022

கோவில்களுக்கு

கீழே படித்து விட்டு 
கோவில்களுக்கு நீங்கள்செல்லாமா 
செல்லவேண்டாமா 
முடிவு பண்ணுக....!!!

இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்...!!

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.

5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..

7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.

8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.

10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..

12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.

13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.

17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.

18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..

20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் …அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் …

நமது உடல் ஆரோக்கியத்திற்கு

நமது உடல் ஆரோக்கியத்திற்கு 

மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.
 
உதாரணமாக--
1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று)

2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை.

3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள்.

4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது)
சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.

(இது --- கண்ணுக்கும்,
இரத்தம் அதிக மாவதற்கும்,
அறிவிற்கும்,
ஞாபக சக்திக்கும்  நல்லது.)

5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது.

6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே.

7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே.

8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே.

9.   வடித்த கஞ்சியை
பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே.

10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே.

11.   ஒரு நாளின் எல்லா நேரத்திலும்

கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே.

வேகமாக தொப்புள் வழியே காற்று உள்ளே வந்து ,

மெதுவாக உச்சந்தலை வழியே வெளியே செல்வதாக மனதில் நினைத்தபடியே சுவாசிக்கலாமே.

12. காலையில் முதல் வேலையாக அதிக தண்ணீரை குடித்து மலத்தை கழித்துவிடலாமே.  (அ)
 வெதுவெதுப்பான தண்ணீரை பயன் படுத்தலாமே.
(அ)

உப்பும் , எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாமே.

ஒரே மாதத்தில் குடல் நார்மலாக செயல் படும் நிலைக்கு வந்து விடுமே.

13.   வடக்கு பக்கம் தலைவைத்து படுப்பதை தவிர்க்கலாமே.

14.   பசிக்கும்போது உடைத்த-கடலை , முளைகட்டிய பயறுகளில்  ஏதாவது ஒன்று, வேர்க்கடலை கொய்யா பழம் போன்ற விலை மலிவான பொருட்களை பயன் படுத்தி பழகலாமே.

15.   தினமும் சூரியன் நம்மீது 10 to 20 நிமிடம் படும்படி இருக்கலாமே.

பல பல லட்ச ரூபாய் மருத்துவ செலவை குறைக்கலாமே.

16.   நமது மகிழ்ச்சி என்பது வெளியில் எந்த பொருளிலும் இல்லை.

நாம் நினைக்கும் நேர் மறை எண்ணத்தில் மட்டுமே இருப்பதை நம்பலாமே.

17.  எண்ணெய் குளியல், 
குடல் சுத்தம்,
போன்றவற்றை கடைபிடிக்கலாமே.

18.   மிக சிறந்த உணவையும் சாப்பிடாமல்,
மனக் கட்டுப் பாடுடன்

படையலைப் போட்டு, 

அதை பார்த்து ரசித்த படி இருக்கும் போது

அதன் சத்துகளை உடல் கிறகிப்பதை உணர்ந்த பிறகு

நிதானமாக சிறிது சாப்பிட்டதுமே

திருப்தி உண்டாவதை உணரலாமே. 

19.  அடிக்கடி உண்ணா விரதம் இருந்து ,

உடல் காற்றின் உதவியுடனும் செயல் படுவதை ரசனையுடன் உணரலாமே.

20.   செக்கு எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தாலும்

அதையே பயன்படுத்தலாமே. 

சுட்ட எண்ணையை மீண்டும் பயன் படுத்துவதை தவிர்க்கலாமே.

21.  மைதா பொருட்களை தவிர்க்கலாமே.

22.  வெது வெதுப்பான நீரை முதலில் தலையில் ஊற்றியும் ,

சாதாரண நீரை முதலில் காலில் இருந்து ஊற்றியும்

குளிக்கலாமே.

குளிக்கும் போது வாயை மூடி இருக்கலாமே.

பலர் அப்போது வாயால் சுவாசித்து உடல் நலத்தை கெடுத்து கொள்வதை கவனிக்கலாமே.

23.   தூக்கம் உடனே வராத மனநிலையில் இருப்பவர்கள்,

கடைசி சொட்டு காற்றையும் வெளியே விட்டு விட்டு,

மூச்சை இழுக்காமல் இருக்கவும்.

அதிகப்படியான காற்றை வேகமாக முடிந்த வரை இழுத்து ,

சிறிது நேரத்தில்

மெதுவாக வெளியே விடலாமே.

இவை ஒரு சுற்று சுவாசம்.

இப்படி இருபது சுற்றுவரை

எண்ணுவதற்கு முன்பே நாம் தூங்கி விடுகிறோம்.
 
24. *மிக எளிதான உடற்பயிற்சி*: தோப்புக்கரணத்தை முடிந்த வரை போடலாமே.

படிப்படியாக அதிகப் படுத்திக் கொள்ளலாமே.

அப்போது மூச்சை விட்டபடியே உட்கார வேண்டும்.

கைகள் பெருக்கல் குறியை போல காதுகளை பிடித்து இருக்க வேண்டும்.

25.  வீட்டில் நேர்மறை சக்தி அதிகமாவதற்கு
வசம்பு,
படிகாரம்,
எலுமிச்சை,

போன்ற பொருள்கள் உதவுகிறது.

விருப்பம் உள்ளவர்கள்
படுக்கை அறைகளில் மறைவாகவும் வைத்து பயனைப் பெறலாமே.

26.  உடலில் 
நேர்-மறை சக்தி அதிகமாவதற்கு

நல்ல எண்ணம் உள்ளவர்களின் அருகில் இருக்கலாமே. (அல்லது)  

கோவில் சுற்றலாமே. 

பிரமிடு அமைப்பின் மையத்தில் வைக்க பட்ட கருங்கல்லில் இருந்து வெளிப்படும்

காந்த சக்தியை அருகில் சென்று பெறலாமே.
 
உச்சரிக்க கடினமான வார்த்தைகளை 

நாம் தவறு இல்லாமல் படிக்கலாமே. 

நாம் மனம் ஒன்றி படித்தால் மட்டுமே தவறே இல்லாமல் படிக்க முடியும்.

இதுவே மந்திரம்.

உச்சரிக்கவே கடினமான (மந்திர) சப்தத்தம் 

வேறு ஒருவரிடம் இருந்து வெளிப்பட்டாலும்

அந்த சப்தம்  நமது வாயில் இருந்தே வெளிப்படுவதை போலவே

நாம் மனதால் நினைக்க முடியும்.

ஒருவித காந்த சக்தி நம்முள் வந்து சேர்வதை நம்மால் உணர முடியும்.

27.   நாம் நம்பிக்கை வைத்து வணங்கும் அளவுக்கே ,

நமது காந்த அலைவரிசையானது 

எங்கும் எப்போதுமே செயல் போட்டபடியே உள்ள பிரபஞ்ச காந்த அலைவரிசையுடன் (ஓரளவுக்கு) ஒத்துப் போகும். 

எந்த கடவுளை எந்த பெயரில் வணங்கினாலும்,

நமக்கு இந்த பிரபஞ்சத்தின் காந்த சக்தி கிடைக்கிறது .
*நல்ல பலன் கிடைக்கிறது.* 

28.  இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர் இல்லாத வைகளும்,  உயிர் உள்ள வைகளும் 

நாம் ஒவ்வொரு வரும்,

கடவுளின் ஒவ்வொரு துளிகளே.

28.  மாதம் ஒரு முறை யாவது சமையல் அறையில் எல்லா பொருட்களையும் 

நிறப்பினால் தான் 
சமையல் சரியாக இருக்கும்.

இதுபோல--
உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் உடலில் சேர்க்கவே 

பண்டிகை காலங்களில் பல தரப்பட்ட உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க படுகிறது.

சமூகத்தில் சத்துகுறைவால் வியாதி வருவது தடுக்கப்படுகிறது.   சமூக தர்ம பழக்கங்களின் மூலமாக எளிய மனிதர்களுக்கும் நல்லது நடக்கிறது.

எலுமிச்சை+இஞ்சி+பூண்டு மருந்து இதய அடைப்பை நீக்குகிறது.

கருஞ்சீரகம்+ஓமம்+ வெந்தயம் மருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய 4448 வியாதிகளையும் தடுத்து கட்டுப்படுத்துகிறது.

உடலில் அதிக ஆக்ஸிஜனை சேர்ப்பதன் மூலம் கேன்சரை கட்டுப்படுத்த முடிகிறது.

மேலே குறிப்பிட்டவைகளை கடைபிடித்து வாழ நம் எல்லோராலும் எளிதாக முடியும்.

இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்த பதவியையும்,

அளவிடவே முடியாத பணத்தையும் வைத்து கொண்டு இருந்தாலும் பயன் இல்லை.

தினமும் பரபரப் பாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களே அதிகம் .

எல்லா பழத்திலும் தோலும் கொட்டையும் இருப்பதை நினைத்து கவலைபடுபவர்களே அதிகம்.

இதுபோலவே--

அனைவரிடமும் குறைகளை மட்டுமே கவனித்து குறைகளையே பேசி வாழ்பவர்களே அதிகம்.

நாம் நேர்மறை எண்ணத்துடன் வாழும் போது நமது மனம் ,

நமது சுவாசத்தை ஆழமாக நிர்வகித்து ,

அதிக நிம்மதியையும், 
அதிக திருப்தியையும்,
அதிக ஆயுளையும் தருகிறது.

சித்தர்கள் தூங்குவதைப்

சித்தர்கள் தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றி என்ன சொல்கிறார்கள்?
 
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண் .

இதன் விளக்கம்:

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும். எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும். சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெறுவோம்.

சக்கரை நோயை

சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது..

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே 
*700 மருந்து நிறுவனங்கள்* (கம்பெனிகள்) ஆண்டுக்குப் *பல இலட்சம் கோடி ரூபாய்களை* அள்ளிச் செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும்  ;

வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.

இதற்கான 
*அரு மருந்து நம்மிடமே உள்ளது.*

சக்கரை நோய்க்குக் காரணம் *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

*உமிழ்நீர் தான்.*

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*
 கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் *இயற்கை மருந்து.*

 
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர். 
 
வாழ்வதற்காக  உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
 அமைதியுடனும்
 பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

 கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

 உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

 நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது. 
 
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

 உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
 வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

 சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
 
உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

 அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம். 

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
 
சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

 எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

 நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.

- தோழர் ஒருவரின் பதிவு..

படித்ததில் பிடித்தது..

பட்டறிவில் உணர்ந்தது.

இவன் மக்கள் நலம் விரும்யி
👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝👍

தேனில் ஊறிய பூண்டு

*🌷🌷தேனில் ஊறிய பூண்டு! வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவதனால் கிடைக்கும் பயன்கள்..*

இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும்.

தேனை பொதுவாக ‘வயிற்றின் நண்பன்’ என்று கூறுவார்கள். இதனை பூண்டுடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றது. 

அந்தவகையில் தினமும் காலையில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்ப்போம். 

*எப்படி எடுத்து கொள்ளலாம்?*

 தேவையான அளவு பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும்.

 தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை இதை அரை ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம். 

*நன்மைகள்*

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும்.

 பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அந்த என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம்.

 இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

அலர்ஜியால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது.

உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும். அவர்கள் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும்.

இது போன்ற ஆரோக்கிய தகவல்களை தெரிந்துகொள்ள 

வாழ்வோம் ஆரோக்கியமாய் 

Page follow செய்யவும் 🙏

🌷🌷

கொத்தவரங்காய்

*கொத்தவரங்காய்*
*நுரையீரலுக் கென்றே கடவுளால் படைக்கப்பட்ட காய் ஆகும்.*

*இதை யாரும் அதிகம் வாங்கி  சாப்பிட மாட்டார்கள்*

*பத்து ருபாய்க்கு பை நிறைய  கிடைக்கும்*

*இது கொரோனா நோய்   விரைவில் குணமடைய நல்ல  மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது.*
*கொத்தவரங்காய் ஒருவருக்கு குறைந்தபட்சம் கால் கிலோ வாங்கி நாரெடுத்துவிட்டு சிறு பொடியாக வெட்டி சிறிது மிளகுத் தூள் போட்டு கொதிக்க வைத்து நீரை அருந்திவிட்டு காயை சாப்பிட்டுவிட வேண்டும். தொடர்ந்து சுமார் ஒரு வாரம் சாப்பிட்டால் நுரையீரல் காற்று தாராளமாக உள்வாங்கி மூச்சுத் திணறல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.*

*நான் இணையத்தில் இதன்  இயல்புகளை ஆராய்ந்தேன்*

*இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்* *வல்லமை பெற்று  இருக்கிறது என்றும்*

               *இது உடலில் சர்க்கரையின்  அளவை சமபடுத்துகிறது என்றும்*

*இது மூட்டு வலியை  சரி செய்கிறது என்றும்*

*இது அஜீரண கோளாறுகளை  சரி செய்கிறது என்றும்*

*இரத்தத்தில் உள்ள கொழுப்பை  குறைக்கிறது என்றும்*

*சிவப்பணுக் களின் எண்ணிக்கையை   அதிகரிக்கிறது என்றும்*

*இதய நோய் வராமல் தடுக்கிறது  என்றும்*

*ஆஸ்துமா விற்கு நல்ல   மருந்து என்றும்*

*நல்ல வலி நிவாரணி   மற்றும் கிருமி நாசினி என்றும்*

*இரத்த அழுத்தத்தை குறைக்கிறது  என்றும்*

*இரத்த சோகைக்கு நல்ல மருந்து   என்றும்*

*சர்க்கரை நோயை குணப்படுத்து கிறது   என்றும்*

*கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத் திற்க நல்லது  என்றும்*

*குழந்தையின் எழும்பு மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு நல்லது என்றும்*

*உடல் எடையை குறைக்க  சிறந் சிறந்த மருந்து என்றும்*

*ஒவ்வாமையை போக்கவல்லது  என்றும்*

*மன அழுத்தத்தை குறைக்கிறதாம்*

*நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது என்றும்*

*சரும பிரச்சினையை தீர்க்கிறது என்றும்*

*மலச்சிக்கலை போக்குகிறது என்றும்*

*ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது என்றும்*

*சூட்டை குறைக்கிறது என்றும்*

*ஐன்னி வந்தால் சரிசெய்கிறது என்றும்*

*அம்மை நோயை மூன்று நாட்களில் சரி   செய்கிறது என்றும்*

*குறிப்பிடப்பட்டு இருந்தது*

*நான் நம்பவில்லை கொத்தவரங் காயில்   என்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை* *பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என தேடி பார்த்தேன்*

*விட்டமீன் கே இருக்கிறதாம்  போலிக் ஆசிட் இருக்கிறதாம்*
*நார் சத்து அதிகமாக இருக்கிறதாம்*
*(நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்து)*
*இரும்பு சத்து இருக்கிறதாம்  கால்சியம் இருக்கிறதாம்*
*மற்றும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த உதவும்  கிளைக்கோநியூட்டிரியன்ட் இதில் உள்ளதாம்*
*சுண்ணாம்பு சத்து இதில்   உள்ளதாம்*
*ஆன்டி-ஆக்ஸிடனஉள்ளதாம்  புரதச்சத்து உள்ளதாம்*

*இதற்கு மேல் என்ன   வேண்டும்*

*கொரோனா விற்கு   கொத்தவரங்காய் சிறந்த மருந்து *என்பதை உறுதி   செய்ய.*

*இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில்  இருந்து* *வெளிநாடுகளுக் அதிகம்   ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம்*
*இது*

*நாம் இதை மதிப்பதில்லை*

*நல்லதையும் நல்லவனையும்  நாம் எப்போ மதிச்சிருக்கோம்.*

*படித்தேன் பகிர்கிறேன்....*

உயர் இரத்த அழுத்தம் குறைய

💥உயர் இரத்த அழுத்தம் குறைய, தூக்கமின்மை போக்க உதவும் `அக்குபிரஷர் புள்ளி’

உடலில் இருக்கும் உறுப்புகளில், அவ்வளவு எளிதாக பிரச்னையை உருவாக்காத ஒரே உறுப்பு கல்லீரல். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும்.
  

தற்போது நான்கில் ஒரு இளைஞருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அக்குபிரஷர் மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம் குறையவும், தூக்கமின்மையை போக்கவும் உதவுகிறது இந்த கல்லீரல் புள்ளி. இதனைச் சீன மொழியில்  `டாய் சோங்’ என்று அழைப்பார்கள். இது கல்லீரலுடன் தொடர்புடையது.

உணவில் சேர்க்கப்படும் அளவிற்கு அதிகமான உப்பு, இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இரத்தமானது உடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு சிறுநீரின் மூலமாக இரத்தத்தில் கலந்துள்ள உப்பினை வெளியேற்ற முனைகிறது. இதுபோன்ற செயல்பாடுகளினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது

💥உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான முக்கிய காரணங்கள் 

1.   அதீத கவலை, தேவையற்ற சிந்தனைகள், பயம், மன அழுத்தம் கோபம்,தூக்கமின்மை, பதற்றம் போன்ற மனநிலை தொடர்பான பிரச்னைகளே முக்கிய காரணம்.

2.   புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் மாமிச உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற தவறான பழக்க வழக்கங்கள்.

3.   குறைந்த அளவிலான இரத்தம் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிறுநீரகக் கோளாறும் முக்கிய காரணமாகும்.

4.    அதிகமான கொழுப்பு தமனிகளில் தேங்குவதால் இருதய தமனிகள் சுருங்குதல்

5.    தேவையற்ற கர்ப்பத்தை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளப்படும் கர்ப்பத்தடை மாற்றங்களால் உண்டாகும் ஹார்மோன் குறைபாடுகள்

💥கல்லீரல் 

உடலில் இருக்கும் உறுப்புகளில், அவ்வளவு எளிதாக பிரச்னையை உருவாக்காத ஒரே உறுப்பு கல்லீரல். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது. உட்கொள்ளும் கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருட்களை செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான். எனவே கல்லீரலின் செயல்பாட்டை நாம் சீராக்கும் போது உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனரீதியான உணர்வுகளும் கட்டுக்குள் வரும்.

💥கல்லீரல் அக்குபிரஷர் புள்ளி 

கால் விரல்களில், உங்கள் பெருவிரலின் தோலும் அடுத்த விரல் சேரும் (சற்று பள்ளமாக இருக்கும்) இடத்திற்கு இரண்டு விரல்களின் அளவுக்கு இடைவெளியில் சரியாகக் கீழே அமைந்துள்ளது.

இவ்விடத்தில் வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 3 நிமிடங்கள் வரை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டே மிதமாக அழுத்தவும்.

💥பலன்கள் 

தலைவலி, தலைச்சுற்றல், புற்றுநோய் புண்கள்.

கண் பிரச்சினைகள் - மங்கலான பார்வை, சிவப்பு, வீக்கம், வலுமிகுந்த கண்கள்.

பிறப்புறுப்பு பிரச்சினைகள் - வலி / வீக்கம், குடலிறக்கம், ஆண்மைக் குறைவு.

குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு.

மூச்சு திணறல், உளவியல் பிரச்சினைகள், தலைவலி போன்றவை குறைக்கிறது.

💥கவனம் 

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவர்களது இரத்த அழுத்தம் மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

நோய்கள் உருவாகும் இடம்

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது...

இதோ,

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளைச் சர்க்கரை

5 - வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு

6 - பாக்கெட் பால்

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டுப் பால்

10 - சீமை மாட்டுப் பால் பொருட்கள்

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபைண்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டைத் தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்தத் தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினியப் பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதாப் பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலாப் பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - AC

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர் பெட்டியில் வைத்த அனைத்து உணவுப் பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலைப் பொருட்கள்

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமணப் பொருட்கள்

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தான் நோய்கள் உருவாகிறது

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே...

குணமாகும் இடங்கள்.
---------------------------------------

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

இதோ,

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள்

2 - மூலிகைத் தேனீர்

3 - சுக்கு மல்லிக் காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்புச் சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டுக் கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டைத் தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சைத் தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்புப் பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவுக் கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கைப் பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுப் பசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசித் திண்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டைப் பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப் பொருட்கள்

57 - உயிர் பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திக்கூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது...

உங்களின் உணவு முறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பது தான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
 மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
 கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
 குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
 கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
 மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
 பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
 வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
 டி.வி. வந்தது;

இயற்கையை மட்டும் நாம் நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்...

முடிந்தவரை இயற்கையைச் சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2. இரத்தக் கொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது                                                     

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா ?? 
இது தாங்க கொடுமையிலும் கொடுமையான விஷயம் மற்றும் மறுக்க முடியாத உண்மையும்.

காய்கறி வாங்குவது ஒரு கலை

காய்கறி வாங்குவது ஒரு கலை - தெரியுமா உங்களுக்கு?

நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.

நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை. 

அதற்காகத்தான் இந்தப் பதிவு.

காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.

சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

வாழைக்காய்..
...........................

முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.

வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.

வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

உருளைக்கிழங்கு..
.................................

செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.

பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.

முள்ளங்கி..
.....................

முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும்.

சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது. 

சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.

முருங்கைக்காய்..
..............................

முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்ல) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது. 

இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும். கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள். 

அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம். 

காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.

தக்காளி...
....................

தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.

உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும். 

பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். 

நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.

பீன்ஸ்...
............

பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும். 

நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும். 

இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும். 

இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.

அவரைக்காய்...
............................
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். 

மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

கத்தரிக்காய்...
..........................

கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும். 

காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது. 

பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும். 

காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.

வெண்டைக்காய்...
.................................

வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். 

ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். 

அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். 

காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.

வெங்காயம்...
.........................

வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது. 

பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. 

வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

முட்டைக்கோஸ்...
..................................

இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். 

நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.

பீர்க்கங்காய்...
...........................

பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும்.

சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். 

பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு...
.............................

சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும். 

உள்ளெ வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு. 

ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.

புடலங்காய்...
........................

புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய்...
..................................

பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.

எலுமிச்சம் பழம்..
...............................
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. 

காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.

கொத்துமல்லி, கருவேப்பிலை..
..........................................................

கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும். 

கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.

என்னங்க... காய்கறி எப்படி வாங்கணும்னு தெரிஞ்சுக்கிட்டிங்களா?... 

 அசைவ பிரியர்களுக்கு: 
*மீன் கடையில் பச்சை கலர் பெரிய ஈ சுத்தக்கூடாது . வயிற்றுப்பகுதி வீக்கமாகவோ உடைந்தோ இருக்க கூடாது
*எந்த மீனுமே புதிதானால் கவுச்சி வாடை இருக்காது . செவுலும் கண்ணும் பாத்து வாங்கனும். மீனின் மேற்பரப்பு பள பளன்னு வழு வழுப்புடன் இருந்தாலே புதிதாக இருக்கும்
*தேளி, கெண்டை, கெளுத்தி மீன், போன்றவை வறுக்க நல்லா இருக்கும்.
*டேம் கெளுத்தி, ஜிலேபி, விரால், போன்ற மீன்கள் குழம்பு வைக்க நல்லது.
ஆட்டுகறி வாங்கும்போது கால் தொடைக்கறி வாங்குனா நல்லாருக்கும்....

உணவு சாப்பிடும் முறை

நமது முன்னோர்கள் கடைபிடித்த பல்வேறு பழக்கவழக்கங்களில் உணவு சாப்பிடும் முறையை அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. உணவு உண்ண வேண்டிய அவசியம் இல்லையென்றால் இந்த உலகில் யாருக்கும் எந்த வேலையும் இல்லை.

வயிற்று பசிக்காக உழைக்கக் கற்றுக் கொண்ட மனிதன் நாளடைவில் சொத்து சுகம் போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு தனது வாழ்நாளை பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கழிக்கின்றான். ஒரு ஜான் வயிற்றை கட்டிக்காக்கவில்லையென்றால் சம்பாதித்ததை அனுபவிக்கமுடியாமல் போய்விடும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் வயிற்றுக்குக் கொடுக்கப்படும் உணவுகளுக்கு சில வரைமுறைகளை வெகு அழகாக கூறியுள்ளனர்.

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.

2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.

3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.

4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.

5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.

6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.

7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.

8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.

9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.

10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.

11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.

12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),

பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ),

பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),

பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

முக்கியமாக இந்த உணவுமுறைகளை வாழையிலையில் வைத்து சாப்பிட வேண்டும் என்பதை எழுதப்படாத விதியாக நமது முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர்.

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

அறுவகைச் சுவை

🍛 அறுவகைச் சுவை என்ன என்ன??...

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

👍 வாழ்வோம் ஆரோக்கியமாய்

சுவாசித்தால்

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை

இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க எளிமையான மூச்சு பயிற்சி

மனிதர்களின் உடலில் வரும் பலநோய்களுக்கு அவர்களின் மூச்சு விடும் முறையும் முக்கிய காரணியாக அமைகிறது.

ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள்.

பின்னர் மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.

எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100 க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை.

உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.
சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.

பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என்று தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.

வாழ்வோம் ஆரோக்கியமாய்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...