Thursday, 17 March 2022

ஜோதிடம்

Tuesday, 15 March 2022

காரகோபாவநாஸ்தி

காரகோபாவநாஸ்தி

ஒரு காரகத்தை குறிக்கிற கிரகம் அதே பாவத்தில் அமர்ந்திருப்பது காரகோபாவநாஸ்தி எனப்படும் 

கிரகங்களும் அதன் காரகங்களும்

சூரியன்   தந்தைக்காரகன்

சந்திரன்  தாய்க்கரகன்

செவ்வாய் சகோதரகாரகன் 

சுக்கிரன் வாகனம் மற்றும் களத்திரக்காரகன்

குரு தனம் மற்றும் குழந்தைகாரகன் 

புதன் தாய் மாமனுக்கு காரகன்

இடங்களும் அதன் காரகங்களும்

2 ம் இடம் தனம்

3 ம் இடம் சகோதரம்

4 ம் இடம் வண்டி மற்றும் தாய் 

5 ம் இடம் குழந்தைகள்

6 ம் இடம் தாய் மாமன் 

7 ம் இடம் களத்திரம் 

8 ம் இடம் ஆயுள்

9 ம் இடம் தந்தை 

10 ம் இடம் தொழில் 

அதன் அடிப்படையில் 

இரண்டாமிடம் தனஸ்தானம் ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம் இவற்றில் குரு இருப்பதோ

நான்காமிடம் தாய் ஸ்தானம் இதில் சந்திரன் இருப்பதோ 

நான்காமிடம் வாகனத்தை குறிப்பதால் மற்றும் ஏழாமிடம் வாழ்க்கை துணையை குறிப்பதால் இங்கு சுக்கிரன் இருப்பதோ 

எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் மற்றும் பத்தாமிடம் தொழில் ஸ்தானம் என்பதால் இவற்றில் சனி இருப்பதோ 

மூன்று சகோதர ஸ்தானம் என்பதால் செவ்வாய் இருப்பதோ 

ஒன்பதாமிடம் தகப்பன் ஸ்தானம் என்பதால் சூரியன் இருப்பதோ 

ஆறிமிடம் தாய் மாமன் ஸ்தானம் என்பதால் புதன் இருப்பதோ

காரகோ பாவ நாஸ்தி ஆகும் 

இந்த அமைப்பில் ஒரு கிரகம் இருக்குமானால் அதற்கு உண்டான காரகம் பாதிப்படையும் என்பது ஜோதிட விதி

இந்த காரகோபாவநாஸ்தி என்ன செய்யும் என்றால் 4 ல் இருந்தால் தாயை விட்டு பிரித்து வைக்கும் 9 ல் தந்தையை பிரித்து வைக்கும் 7 ல் வாழ்க்கை துணையை பிரித்து வைக்கும் 5 லிருந்தால் குழந்தைகளுக்கு ஆகாது 2 லிருந்தால் தனம் கெடும் 10 லிருந்தால் தொழில் கெடும் 8 லிருந்தால் ஆயுள் பங்கம் 3 லிருந்தால் சகோதரர்களுக்கு ஆகாது அல்லது இளைய சகோதரமே இல்லை என்று பொதுவான ஜோதிட கருத்து இருப்பது நாம் அறிந்ததே 

இப்படி பட்ட அமைப்பில் ஒரு ஜாதகம் இருந்தால் மேலே சொன்ன பாதிப்புகள் இருக்குமா என்று கேட்டால் பொதுவாக அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது ஒரு வேளை இந்த அமைப்பு வேலை செய்யாமலும் போகலாம்

மேலே சொன்ன அமைப்பு இருந்தும் எந்த பாதிப்பும் இல்லாமல் போக காரணம் என்ன என்று பார்ப்போம் 

குறிப்பிட்ட பாவத்தில் உள்ள கிரகம் ஆட்சியோ உச்சமோ அடைந்தாலோ குருவின் பார்வையில் இருந்தாலோ வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் என்ற அமைப்பில் இருந்தாலோ அல்லது லக்கினாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ இல்லை லக்னாதிபதியின் பார்வையில் இருந்தாலோ இந்த காரகோபாவநாஸ்தி வேலை செய்வது இல்லை 

உதாரணமாக சனி 8 ல் இருந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவோம் இதனை நாம் எதை வைத்து சொல்கிறோம் என்றால் சனி இருக்கும் இடம் கெடாது என்ற விதியை வைத்து அல்லவா உண்மை அதுவல்ல 

பகை நீச்சம் என்கிற அமைப்பில் சனி இருந்து 8 க்கு அதிபதியும் லக்னாதிபதியும் பலம் இல்லாமல் இருந்தால் சனி திசையில் ஆயுள் கண்டம் ஏற்படும் அப்படி இல்லாமல் லக்கினாதிபதி மட்டும் வலிமையாக இருந்தால் ஆயுள் மட்டும் தான் இருக்கும் தொழில் தனம் போன்றவை எதுவும் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும் இதற்கு சனி திசை நடைமுறையில் வர வேண்டும் மற்றபடி பயம் தேவையில்லை

ஒருவேளை இவற்றில் எந்த விதியுமே பொருந்தி வரவில்லை என்றால் மட்டுமே காரகோபாவநாஸ்தி வேலை செய்யும் எனவே இந்த அமைப்பை பார்த்து மட்டுமே பயந்துவிட கூடாது முழுமையாக ஆராய வேண்டும்

ஒருவேளை அப்படியே காரகோபாவநாஸ்தி இருப்பதாகவே கொள்வோம் அப்படி இருந்தாலும் பயம் கொள்ள வேண்டுமா என்ன சிவபெருமான் குடும்பத்தோடு இருக்கும் படத்தை வைத்து பூஜை செய்ய யாவையும் சிவன் சரி செய்துவிட்டு போகிறார் 

தோஷத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள் அது யோகமாக மாறும் அல்லது இறைவன் மாற்றுவான்


செவ்வாய் பகவான்

ஜோதிட உலகத்தில் இருக்கும் மிக முக்கியமான கிரகமாகிய 
"செவ்வாய் பகவானை" பற்றிய சில முக்கியமான தகவல்களை பற்றியும் மேலும் செவ்வாய் பகவான் நம்முடைய ஜாதகத்தில் எந்த பாவத்தில் இருந்தால் எந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு ஏற்படும் என்பதை பற்றியும் செவ்வாய் பகவானும் நம்முடைய முன் ஜென்மத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் மிக தெளிவாக பார்க்கலாம்.

🌹பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடம் செவ்வாய் பகவானைப் பற்றிய முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன.செவ்வாய் பகவான் ஒருவருக்கு நன்மை செய்ய மாட்டார் தீமையை மட்டுமே செய்வார் செவ்வாய் பகவான் ஒரு அசுபர்
என்று சொல்லி இருப்பார்கள் அது எல்லாம் முற்றிலும் தவறு.

🌹செவ்வாய் பகவான் நம்முடைய பிறப்பின் லட்சியத்தை சொல்லக்கூடிய கிரகமாகும்.நாம் எதற்கு பிறந்திருக்கிறோம் நம்முடைய ஆத்மா இந்த பூமியில் எதற்கு வந்திருக்கிறது எதனை அடைய நாம் இந்த ஜென்மத்தில் பிறப்பு எடுத்து இருக்கிறோம்.
எதனை நோக்கி நம்முடைய வாழ்க்கை இருக்கும் எந்த எந்த விஷயங்களை நாம் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை எல்லாம் சொல்லக் கூடிய கிரகம் தான் செவ்வாய் ஆவார்.

🌹அதாவது நம்முடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து செவ்வாய் பகவான் எந்த பாவத்தில் இருக்கிறதோ  அந்த பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அடைவதற்கு தான் இந்த ஜென்மம் நாம் எடுத்திருக்கிறோம் என்று அர்த்தம்.

🌹செவ்வாய் நம்முடைய லக்னத்திலிருந்து எத்தனாவது பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை அடைவதற்கு தான் நம்முடைய ஆத்மா இந்த உலகத்தில் ஜனனம் எடுத்து இருக்கிறது என்று அர்த்தம்.பிறப்பின் நோக்கத்தை சொல்லக்கூடியவர் செவ்வாய் பகவான்.

🌹எதற்காக நாம் இந்த உலகத்தில் பிறந்து இருக்கிறோம் எதனை நோக்கி நம்முடைய வாழ்க்கை பயணம் இருக்கும் எது நம்முடைய வாழ்க்கையின் இலக்கு எந்த விஷயங்களை நாம் அடைய விரும்புவோம்.எந்த விஷயங்கள் சார்ந்து நமக்கு வேகம் அதிகமாக இருக்கும் இதை எல்லாம் சொல்லக் கூடியவர் செவ்வாய்தான்.

🌹செவ்வாய் பகவான் இல்லை என்றால் இந்த உலகத்தில் யாருக்குமே பிறப்பே கிடையாது.
நாம் அனைவரும் இந்த உலகத்தில் ஜனனம் எடுத்திருப்பதே செவ்வாய் சார்ந்த விஷயங்களை அடைவதற்கு தான்.அதற்கு தான் நான் முதல் முக்கியத்துவத்தை நம்முடைய வாழ்க்கையில் கொடுப்போம்.

🌹மேலும் செவ்வாய் பகவான் நம்முடைய ஜாதகத்தில் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்காக நாம் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
எப்போதும் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும்,எந்த நிலையிலும்,
செவ்வாய் பகவான் இருக்கும் பாவம் சார்ந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட ஜாதகர் எப்போதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்.

🌹மேலும் செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களை நாம் அடைவதற்கு நம்மை அவசரப் வைக்கும்.இப்போதே வேண்டும் இப்போதே செய்ய வேண்டும் என்ற ஒரு மனோபாவத்தை செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயங்களில் நம்முடைய செயல்பாடுகளை கொடுத்துவிடும்.

🌹இப்பொழுது 12 பாவங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் அதன் மூலம் எந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு ஏற்படும் என்பதையும் ஒவ்வொரு  பாவமாக நாம் பொருத்திப் பார்க்கலாம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌹1.(லக்னத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் லக்னத்தில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் தன்னுடைய வாழ்நாளில் அல்லது இந்த ஜென்மத்தில் எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் வைத்து இந்த பிறப்பு எடுத்து இருப்பார்.

💐மேலும் இவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் என்றால் பிடிக்கும் குழந்தைகள் என்றால் பிடிக்கும்.

💐money savings சார்ந்த விஷயங்களில் இவர்களுக்கு பிரச்சனைகள் கண்டிப்பாக ஏற்படும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. இவர்கள் சேமித்து வைக்க நினைத்தாலும் அந்த பணத்தை இவர்களால் சேமித்து வைக்க முடியாது.

💐மேலும் லக்னத்தில் செவ்வாய் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் என்றைக்குமே கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது இவர்கள் கடன் வாங்கினார்கள் என்றால் அந்த கடனை திருப்பி செலுத்த படாத பாடு படுவார்.கடன் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கொடுத்த பணமும் திரும்ப வராது.

💐என்றைக்குமே கடன் வாங்கக்கூடாது, கடன் கொடுக்கக்கூடாது ,சீட்டு நடத்தக்கூடாது, loan எடுக்க கூடாது,
Credit card வாங்கக் கூடாது மீறி இது எல்லாம் செய்தார்கள் என்றால் பிரச்சனைகள் தான் போய் சிக்குவார்கள்.

🌹(2ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் இரண்டாம் பாவத்தில் இருந்தால் பேசும் வார்த் தையை இவர்களுக்கு மிகவும் கண்ணியமாக இருக்கும் கண்ணியமான குரல் கொண்டவர்கள்  இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்கள்.

💐பேச்சு சார்ந்த விஷயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகவும் பேசுவதையே மிகவும் கண்ணியமாகவும்  அடுத்தவர்களுக்கு அறிவுரை அல்லது ஆலோசனை கொடுப்பவராகவும் இவர்கள் இருப்பார்கள்.

💐மேலும் இவர்கள் தன்னுடைய குடும்பத்திற்காக எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இந்த பிறப்பு எடுத்து இருப்பார்கள்.இவர்கள் மனதில் எப்போதும் தன்னுடைய குடும்பம் சார்ந்த தான் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

💐இவர்கள் தன்னுடைய வருமானத்தை எப்படியெல்லாம் பெருக்க வேண்டும் என்ற நோக்கமும் மற்றும் பணத்தை எப்படி எல்லாம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இவர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்.அது தான் இவர்களுடைய லட்சியமாகும்.

🌹(3ம் பாவத்தில் "செவ்வாய்")

💐மூன்றாம் பாவத்தில் யாருடைய ஜாதகத்தில் இல்லாமல் இருக்கிறதோ அவர்கள் தன்னுடைய இளைய சகோதரரும் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் செய்ய வேண்டியதை திரும்ப செய்வதற்குத் தான் இந்த பிறப்பை எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

💐இருப்பதிலேயே மற்றவர்களைவிட நமக்குத்தான் அதிகமான நண்பர்கள் பட்டாளம் இருக்க வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.என்றைக்குமே தன்னுடைய இளைய சகோதரரையும் மற்றும் நெருங்கிய நண்பர்களையும் யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐மேலும் இந்த மூன்றாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்கள் நண்பர்களிடமிருந்தும் மற்றும் இளைய சகோதரரிடம் இருந்தும் ஏதாவது ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அவர்களிடம் இருந்து அதனை இவர் உடனடியாகப் பெற வேண்டும்.என்ற எண்ணம் மற்றும் பிடிவாதம் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐இருப்பதிலேயே மற்றவர்களை விட அதிகமாக சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.அதிக நேரம் mobile use செய்ய வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐மேலும் இவர்களுக்கு இளைய சகோதரர் மூலமாகவும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மூலமாகவும் பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும் .
இவர்கள் ஏற்கனவே இதனை சார்ந்து சற்று கவனமாக இருக்க வேண்டும்.

🌹(4ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் நான்காம் பாவத்தில் இருந்தால் அவர்கள் வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு வித்தைகள் இதனை சார்ந்த விஷயங்களை தான் லட்சியமாகக் கொண்டு பிறந்திருப்பார்கள்.என்றைக்குமே இதனை சார்ந்த விஷயங்களை யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐ஒரு சில பேர் 10 degree படித்திருப்பார்கள் அவர்களுடைய ஜாதகத்தில் எல்லாம் நான்காம் பாவத்தில் செவ்வாய் இருக்கும்.
படிப்பை லட்சியமாகக் கொண்டு தான் அவர்களின் ஆத்மா இந்த பூமியில் பிறந்து இருக்கிறது என்று அர்த்தம்.

💐இல்லையென்றால் பெரிய வீடு கட்ட வேண்டும் வண்டிகள் வாங்க வேண்டும் சொத்து வாங்க வேண்டும்.
பலதரப்பட்ட வித்தைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவர்கள் பிறந்திருப்பார்கள்.வாழ்நாளில் இவற்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

💐மேலும் இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு சார்ந்த விஷயங்களின் மூலம் கடன் பிரச்சினை அல்லது பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும்.இவர்கள் என்றைக்குமே வீடு வண்டி வாகனம் படிப்பு சொத்து சார்ந்த விசயங்களுக்காக loan எடுக்கக் கூடாது.அப்படி மீறி எடுத்தார்கள் என்றால் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கி விடுவார்கள்.

💐மேலும் இவர்களுக்கு வீடு வண்டி வாகனம் சொத்து படிப்பு இது சார்ந்த விஷயங்கள் தனக்கு வேண்டும் என்றால் உடனடியாக வேண்டும் இப்போதே வேண்டும் இப்போதே இது சார்ந்த விஷயங்களை அடைய வேண்டும் என்று அவசர புத்தி கண்டிப்பாக இவர்களுக்கு இருக்கும்.

💐இவர்கள் தன்னுடைய தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுக்கு செய்ய வேண்டியதை திருப்பி செய்வதற்குத்தான் இவர்கள் பிறந்திருப்பார்கள்.என்றைக்குமே தன்னுடைய தாயை யாருக்காகவும் இவர்கள் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

🌹(5ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் காதல் சார்ந்த விஷயங்கள் காமம் சார்ந்த விஷயங்கள், ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள்,கலை மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்கள்,
விளையாட்டு மற்றும் குழந்தைகள் சார்ந்த விஷயங்கள் இவற்றை எதையாவது ஒன்றை லட்சியமாக கொண்டு தான் இந்த ஜாதகர் இந்த ஜென்மம் எடுத்து இருக்கிறார் என்று அர்த்தம்.

💐யாருக்காகவும் எப்போதும் எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் இது சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கவே மாட்டார் இதனை அடைய வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐இவர்கள் ஆன்மீக ஈடுபாடு சார்ந்த விஷயங்களில் இருந்தார்கள் என்றால் முதல் முக்கியத்துவத்தையும் பிறப்பின் நோக்கத்தையும் வாழ்நாளில் உருப்படியாக ஆன்மீகத்தில் எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கமும் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐விளையாட்டு காதல் மற்றும் பூர்வீக சொத்து கலை மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் மற்றும் ஆன்மீகம் அல்லது ஜோதிடம் இது சார்ந்த விஷயங்களில் உருப்படியாக எதையாவது ஒன்றை செய்ய வேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐மேலும் இவர்களுக்கு குழந்தைகள் மூலம் தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் மற்றும் பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும்.குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

💐மேலும் இந்த ஐந்தாம் பாவத்தில்  செவ்வாய் இருப்பவர்கள் இவர்கள் பிள்ளைககளுடைய வாழ்க்கையில் என்றைக்குமே தலையிடக் கூடாது.
மீறி தலையிட்டார்கள் என்றால் இவர்கள் எடுக்கும் முடிவு என்றைக்குமே இவர்கள் பிள்ளைகளுக்கு சாதகமாக முடியாது பாதகமாக தான் போய் முடியும்.

🌹(6ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஆறாம் பாவத்தில் இருந்தால் கடன்,வம்பு, வழக்கு, கோர்ட், கேசு, அடிதடி, சண்டைகள் பிரச்சினைகள், எதிரிகள் ,போட்டி, பொறாமைகள், உத்தியோகம் இது சார்ந்த விஷயங்களை அடைவதற்கு தான் இந்த ஜென்மம் எடுத்து இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இது சார்ந்த விஷயங்களில் மற்றவர்களை விட இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

💐அதாவது தன்னுடைய எதிரிகளுக்கும் நண்பர்களுக்கும் செய்ய வேண்டியதை திருப்பி செய்வதற்குத் தான் இந்த பிறப்பை இவர் எடுத்திருக்கிறார் என்று அர்த்தம் இருப்பதிலேயே தனக்கு தான் அதிகமாக எதிரிகள் இருக்கவேண்டும் என்றும் மற்றும் அதிகமாக நண்பர்கள் பட்டாளம் இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும்.

💐தன்னுடைய வாழ்நாளில் இது சார்ந்த விஷயங்களில் எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஒரு நோக்கமும் ஒரு இலக்கும் இவர்களுக்கு இருக்கும்.எப்போதுமே இது சார்ந்த விஷயங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐மேலும் இவர்கள் உத்தியோகத்திற்கு செல்லவேண்டும் உத்தியோகத்தில் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும்.உத்தியோகத்தில் எதையாவது ஒன்று பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் அதுதான் இவர்களின் லட்சியமாக இருக்கும்.

💐மேலும் 6ம் பாவத்தில் செவ்வாய் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் என்றைக்குமே கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது இவர்கள் கடன் வாங்கினார்கள் என்றால் அந்த கடனை திருப்பி செலுத்த படாத பாடு படுவார்.கடன் கொடுத்தார்கள் என்றால் இவர்கள் கொடுத்த பணமும் திரும்ப வராது.

💐என்றைக்குமே கடன் வாங்கக்கூடாது, கடன் கொடுக்கக்கூடாது ,சீட்டு நடத்தக்கூடாது, loan எடுக்க கூடாது,
Credit card வாங்கக் கூடாது மீறி இது எல்லாம் செய்தார்கள் என்றால் பிரச்சனைகள் தான் போய் சிக்குவார்கள்.

💐மேலும் இவர்கள் என்றைக்குமே கோர்ட் கேசு இதுபோன்ற விஷயங்களில் செல்லக்கூடாது இவர்கள் யார் மீதும் கேஸ் போட கூடாது அப்படி கேஸ் போட்டால்  என்றைக்குமே இவர்கள் பக்கம் தீர்ப்பு சாதகமாக  வராது.

🌹(7ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஏழாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் வெகுஜன 
மக்களுடன் அதிகமாக தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இலட்சியமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.அதாவது வெளி உலக மக்களுடன் அதிகமாக தொடர்பில் இருக்க வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐எப்போதுமே வெளி உலக மக்களுடன் தொடர்பிலேயே இருப்பது யாருக்கும் இல்லாதவாறு தனக்குத்தான் அதிகமான வெளியுலக நட்புகள் இருக்க வேண்டும் அல்லது வெளி உலக மக்களின் தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற ஆசையும் நோக்கம் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும்.

💐இவர்களுக்கு இருக்கக்கூடிய வெளியுலகத் தொடர்புகள்(public contact) யாருக்குமே இருக்காது அவ்வளவு இருக்கும்.யாருக்காகவும் எப்போதுமே இது சார்ந்த விஷயங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.இவர்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமென்று நினைத்தார்கள் என்றால் அவர்களை இப்போதே உடனடியாக சந்திக்க வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐மேலும்  ஒரு ஆணுடைய ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் அவர்களின் மனைவி இவர்களிடம் இருந்து எதையாவது ஒன்றை வேண்டும் என்றால் அதனை இப்போதுதே உடனடியாக வேண்டும்.என்ற ஒரு பிடிவாதமும் ஒரு அவசரமும் இவர்களின் மனைவிக்கு இருக்கும்.
இதே பெண்ணுடைய ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் இவர்களுடைய  கணவன் இதுபோன்று இருப்பார்.

💐மேலும் செவ்வாய் ஏழாம் பாவத்தில் இருப்பவர்களெல்லாம் என்றைக்குமே கூட்டு தொழில்( partnership business) செய்யவே கூடாது மீறி செய்தார்கள் என்றால் கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் மற்றும் பிரச்சினைகளும் ஏற்படும்.

🌹(8ம் பாவத்தில் "செவ்வாய்")

💐எட்டாம் பாவம் என்பது ஆயுள் ஸ்தானம் ஆகும் அதாவது யாருடைய ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில் செவ்வாய் இருக்கிறதோ அவர்கள் தன்னுடைய ஆயுள் இருக்கும் வரை எதையாவது உருப்படியாக ஒன்று செய்ய வேண்டும் அல்லது உருப்படியாக ஒன்றை சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மற்றும் மனோபாவம் ஒரு இலக்கு ஒரு நோக்கம் கண்டிப்பாக இவர்களுக்கு இருக்கும்.

💐ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் சார்ந்த விஷயங்களில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.அதாவது யாருக்குமே தெரியாத அமானுஷம் சார்ந்த விஷயங்களை இந்த உலகத்திற்கு கட்டவிழ்பதற்குதான்
இந்தப் பிறப்பே இவர்கள் எடுத்திருப்பார்கள் என்று அர்த்தம்.

🌹(9ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் தந்தை தந்தை வழி உறவுகள் தந்தை வழி சொத்து இவற்றிற்காகவும் மற்றும் தொலைதூரப் பயணம் சார்ந்தும் உயர்கல்வி மேற்படிப்பு சார்ந்தும் ஆன்மீக ஈடுபாடு சார்ந்தும் தான் இவர்களின் நோக்கம் இவர்களின்
இலக்கு இவர்களின் பிறப்பின் லட்சியம் இருக்கும்.

💐தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களும் செய்ய வேண்டியதை திருப்பி செய்யத்தான் இவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.அல்லது தந்தையாக இந்த ஜென்மத்தில் தன்னுடைய கடமைகளை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும் .
மேலும் இவர்கள் என்றைக்குமே தன்னுடைய தந்தையை யாருக்காகவும் எப்போதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐தொலைதூர பயணம் செல்லவேண்டும் யாருமே செல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும் சுற்றுலா செல்ல வேண்டும் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.அல்லது உயர்கல்வி மற்றும் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் பிறப்பின் லட்சியமும் இவர்களுக்கு இருக்கும்.

💐தானம் தர்மம் செய்ய வேண்டும் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருக்கும் நோக்கமும் இவர்களுக்கு இருக்கும்.

💐மேலும் ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருப்பவர்களுக்கு தந்தை மூலமாகவும் தந்தைவழி உறவினர்கள் மூலமாகவும் உயர் கல்வி சார்ந்தும் மேற்படிப்பு சார்ந்தும் வெளிநாட்டு பயணம் சார்ந்தும் பணக்கஷ்டம் பணப்பிரச்சினை கண்டிப்பாக ஏற்படும்.

🌹(10ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் பத்தாம் பாவத்தில் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் தொழிலில் சாதிக்க வேண்டும் அல்லது தொழில் சார்ந்த சில முக்கியமான விஷயங்களை வெளி உலகத்தில் கட்டவிழ்க்க வேண்டும்.என்ற நோக்கமும் என்ற லட்சியமும் இலக்கும் இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

💐பலதரப்பட்ட தொழில் செய்ய வேண்டும் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் இவர்களுக்கு இருக்கும்.
மேலும் இவர்கள் தொழில் சார்ந்த விசயங்களை யாருக்காகவும் எப்போதும் எந்த சூழ்நிலையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

💐மேலும் இவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களின் மூலம் பணக் கஷ்டமும் பணப் பிரச்சினையும் கண்டிப்பாக ஏற்படும்.இவர்கள் என்றைக்குமே கடன் வாங்கி தொழில் செய்யக்கூடாது கடன் வாங்கி தொழில் செய்தார்கள் என்றால் கண்டிப்பாக தொழிலில் நஷ்டம் அடைவார்கள்.

🌹(11ம் பாவத்தில் "செவ்வாய்")

💐பதினோராம் பாவம் என்பது லாபஸ்தானம் ஆகும் யாருடைய ஜாதகத்தில் எல்லாம் பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருக்கிறது அவர்கள் தன்னுடைய வருமானத்தை அதிகமாக சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கமும் மற்றும் அதிகமான லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற எண்ணமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

💐மேலும் இவர்கள் தன்னுடைய மூத்த சகோதரர் மற்றும் சித்தப்பா அவர்களுக்கு செய்ய வேண்டிய திருப்பி செய்வதற்குத் தான் இந்த பிறப்பே எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.என்றைக்கும் இவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் மற்றும் விட்டுக்கொடுத்து பேசவே மாட்டார்கள்.

🌹(12ம் பாவத்தில் "செவ்வாய்")

💐செவ்வாய் பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் அவர்கள் அயன, சயன, போகம், சுகபோக வாழ்க்கை வாழவேண்டும், நிம்மதியாகத் தூங்க வேண்டும், நிம்மதியாக வாழவேண்டும்,நன்றாக சுகபோக உணவு சாப்பிட வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் இது சார்ந்த ஆசைகள் இவர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

💐படுக்கை அறையை சார்ந்த விஷயங்கள் காமம் சார்ந்த விஷயங்கள் காதல் சார்ந்த விஷயங்கள் இவற்றில் இவர்களுக்கு அதிகமான ஆசையும் நோக்கமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
எதற்காகவும் இது சார்ந்த விஷயங்களை எப்போதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் இதுதான் இவர்களின் பிறப்பின் லட்சியமாகும் மற்றும் பிறப்பின் நோக்கம் ஆகும் இதனை சார்ந்து தான் இவர்களின் எண்ணங்கள் இருக்கும்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Thursday, 3 March 2022

ஜோதிட தகவல்

ஜோதிட தகவல்
📷
முதல் பாவம்:
உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாம் பாவம்:
குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

மூன்றாம் பாவம்:
சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

நான்காம் பாவம்:
கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.
ஐந்தாம் பாவம்:
இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.
ஆறாவது பாவம்:
தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.
ஏழாவது பாவம்:
காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.
எட்டாவது பாவம்:
ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
ஒன்பதாம் பாவம்:
பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.
பத்தாம் பாவம்:
இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.
பதினொன்றாம் பாவம்:
லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.
பன்னிரண்டாம் பாவம்:
இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.
பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-விளிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.
மேற்கண்ட பாவகங்களே ஒருவரது சுய ஜாதகத்தை இயக்கும் , மேற்சொன்ன பாவகங்கள் 6,8,12 பாவகங்களுடன் தொரபு பெற்றால் 100 சதவீத இன்னல்களையும் , பாதகஸ்தானத்துடன் தொரபு பெற்றால் 200 சதவீத இன்னல்களையும்  வாரி வழங்கும் .
சில ஜோதிடர்கள் மேற்சொன்ன 12 வீடுகளின் அதிபதிகள் நீசம்  அடைந்தாலும் , ராகு கேதுகளுடன் சேர்க்கை பெற்றாலும் இன்னல்கள் வரும் என்று பயமுறுத்துவார்கள் இது தவறாகும் .


கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...